Saturday, May 4, 2019

"தமிழ்நாடு தமிழருக்கே" என்ற வாசகம் அழிக்கப்பட்டுள்ளது

Selvendran k
2019-05-04

பார்ப்பனர்களின் பாதார விந்துக்களை நக்கி ருசித்துக்கொண்டே அவர்களுக்கான வலதுசாரி தமிழ்த்தேசியம் பேசும் அரைவேக்காட்டு முண்டங்களுக்கு திராவிடத்தின் எழுச்சி அதன் வெற்றி என்பது எட்டிக்காயாகத்தான் கசக்கும்.

காரணம் இந்த கொள்கை தான் இவர்களின் பிழைப்பு வாதத்திற்கு தடையாக உள்ளது. ஒருவேளை திராவிடம் அன்றி இவர்கள் பேசக்கூடிய வலதுசாரி தமிழ்த்தேசியமே ஆண்டாளும், இந்த சர் சூத்திர முண்டங்கள் பார்ப்பனரின் முன் மண்டியிடுவதை நிறுத்தப்போவது இல்லை.

நமக்கான கெட்ட வாய்ப்பு என்பது இதுகளைப் போன்ற அரைவேக்காடு கிறுக்கர்களுக் கெல்லாம் பதில் சொல்வதாக உள்ளது. என்ன பதில் சொன்னாலும் இந்த காரிய விஷக் கிருமிகள் ஏற்றுக்கொள்ளாமல் பிதற்றும் என்றாலும் கூட, இவர்களின் அரிப்பிற்கு சொரிந்து கொள்ளவும், கைத்தட்டவும் உள்ள மூடர் கூட்டத்தில் ஒன்றுக்காவது விளங்கிவிடாதா/தெரியாதா என்ற நப்பாசை தான் நம்மளையும் பதில் சொல்ல தூண்டுகிறது.

கொத்து கொத்தாக குண்டுகள் போடும் போது மக்களை பதுங்கு குழிக்குள் ஒளிய சொல்லி, தான் மட்டும் தப்பிக்க வழி தேடிய அல்லது நம்பிய மக்களை அழிவுப்பாதைக்கு இட்டு சென்ற தலைவனை பின் தொடர்பவர்களா நாம்? 

எதிரியே அடிபட்டு வீழ்ந்து கிடந்தாலும், அவனையும் தூக்கி பிழைக்க வைக்க முடியுமா என்று பார்த்து அவனுக்கான வாழ்க்கையை தேடி தரும் சமூக நல்லிணக்கத்தை நாடும் திராவிட தலைவர்களின் வழிவந்த நாம் - இதுகளுக்கும் பதில் சொல்லித்தான் ஆக வேண்டியுள்ளது .

---

திராவிடர் கழகத்தின் அதிகாரபூர்வ நாளேடான விடுதலை, அதன் அச்சகத்தின் பெயர் பலகையிலுள்ள "தமிழ்நாடு தமிழருக்கே" என்ற வாசகம் அழிக்கப்பட்டுள்ளதை எடுத்து போட்டு திருட்டு திராவிடம் என்று அயல்நாட்டு வாழ் தமிழர்களிடம் நக்கி பிழைக்கும் திருட்டு தமிழ் தேசிய கூட்டத்தில் உள்ள, தன்னை கார்ட்டூனிஸ்ட் என்று சொல்லும் கன்றாவி அசிங்கம் ஒன்று முகநூலில் பதிவு செய்துள்ளது.

1975 இல் அவசர நிலை அமலில் இருந்த காலத்தில், அரசினுடைய நிர்பந்தத்தால் "தமிழ்நாடு தமிழருக்கே" என்ற வாசகம் அழிக்கப்பட்டது. அந்த வாசகத்தை அழித்தலும் அதை என்ன வாக்கியம் என்பதை எளிமையாக படிக்கும் வண்ணம், வெள்ளை மை கொண்டு அழித்து இருப்பார்கள் என்பது குறிப்பிட தக்கது.

வாசகம் அழிக்கப்பட்டது 1975-ல் இன்று 2019-ல் கூட அதே பெயர் பலகை தான் வைக்கப்பட்டுள்ளது . இன்றளவும் அதை மாற்றவில்லை. காரணம் இந்த இயக்கம், குறிப்பாக அரசியல் சாரா அமைப்பான திராவிடர் கழகமும் அதன் கொள்கை பரப்பும் நாளேடு விடுதலையும் எந்த அளவிற்கு அடக்கு முறையை சந்தித்தது என்பதனை தெரியப்படுத்த.

அவசர நிலையின் போது, அரசியல் கட்சிகள் சந்தித்ததை விட அதிகமான அடக்குமுறையை சந்தித்தது திராவிடர் கழகம் - பார்ப்பனர் எதிர்ப்பை கை விட வேண்டும், விடுதலையை நிறுத்த வேண்டும் என்று அரசு மிரட்டிய போதும், எங்கள் கொள்கையில் இருந்து பின்வாங்க முடியாது ஆனதை செய்யுங்கள் என்று துணிந்து "இந்திராவின் எமர்ஜென்சி" - என்ற இரும்புக்கரத்தை கண்டு அஞ்சாமல் பின்வாங்காமல் அடித்து தும்சம் செய்தவர் அன்றைய திராவிடர் கழக தலைவர் #அன்னை_மணியம்மையார்.

இந்த வரலாறெல்லாம் இன்றைய நவீன உண்டியல் குலுக்கிகளுக்கு தெரிந்து இருக்க நியாயம் இல்லை. தன் இனிஷியல் தேடி அலையும் தற்குறிகளுக்கு, இனவரலாறு என்பது எப்படி தெரியும். அரைகுறை செய்திகளை வைத்துக்கொண்டு, அரைவேக்காட்டு தனமாக வாதம் செய்து, வீழ்ந்து உறங்கிய தமிழர் சமுதாயத்தை விழித்தெழச் செய்து, சுயமரியாதை சூடேற்றி , பகுத்தறிவு வெளிச்சம் காட்டி , படிப்பறிவு தந்து , பதவி கொடுத்து , ஆரியக் கூட்டத்தை அஞ்சி நடுங்கச் செய்து , அயலிடத்திற்கு மூட்டை முடிச்சுகளோடு ஓடி விடலாமா என்று அவர்களை எண்ணச்  செய்த ஓர் இயக்கத்தை , ஓர் இமயத்தை வீழ்ச்சிக்குக் காரணிகளாகக் காட்டி , இன்றைய இளைஞர்களை மூளைச் சலவை செய்து , தங்கள் உயர்விற்கு , வாழ்விற்கும் காரணமானதை காரணமான இயக்கத்தை வெறுக்கும்படிச் செய்து அவர்களை ஆரியத்திற்கு அரண் சேர்க்க அழைத்துச்  செல்லும் இன துரோகத்தை செய்யும் இதுபோன்ற எட்டப்பர்களின் முகத்தில் காரி உமிழ்வீர் திராவிட காளைகளே !!

https://www.facebook.com/100001520974984/posts/2411280448932631/

No comments:

Post a Comment