Wednesday, August 26, 2015

உளவாளி வைத்து கண்காணித்த பிறகுதான்

பிரபாகரன் அவர்கள் என்னை மூன்று ஆண்டுகள் உளவாளி வைத்து கண்காணித்த பிறகுதான் இலங்கைக்கு அழைத்தார் - சீமான்


தேசியத்தலைவரை சந்திப்பதற்கு அண்ணண் திருமாவளவர் அய்யா வைகோ அண்ணண் கொளத்தூர்மணி அண்ணண் ராமகிருஷ்ணண் அய்யா நெடுமாறன் போன்ற எத்தனையோ தலைவர்கள் சென்றிருக்கிறார்கள் அவர்களின் மேல் எல்லாம் வராத சந்தேகம் சீமானின் மேல் தேசியத்தலைவருக்கு வந்திருக்கிறது அதனால் தான் ஓராண்டல்ல மூன்றாண்டுகள் உளவாளிகளால் கண்காணிக்கபட்டிருக்கிறார் ...
மேற்கண்ட தலைவர்களோடு பத்து நாட்களுக்கு மேலெல்லாம் இருந்த தேசியத்தலைவர் சீமானோடு ஆறு நிமிடங்கள் மட்டுமே பேசியிருக்கிறார் என்றால் சீமானின் மேல் அவருக்கு முழு நம்பிக்கை வரவில்லையென்றுதானே அர்த்தம் ....
நிறை குடங்கள் தழும்பாது என்பது போல் தேசியத்தலைவரை சந்தித்த தலைவர்கள் யாரும் சீமானை போல் சுய தம்பட்டம் அடித்துக்கொள்வதில்லை ஆனால் சீமான் தொடர்ந்து இப்படியான கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுவதை பார்த்தால் உண்மையாகவே சந்தித்தாரா அல்லது சிலர் சொல்வது போல் போட்டோஷாப்பா என எண்ண தோன்றுகிறது ...
அதே போல் மேற்கண்ட தலைவர்கள் எல்லோரும் தேசியத்தலைவரோடு இருந்த பல்வேறு போட்டோக்களை வைத்திருக்க்ன்றனர் ஆனால் சீமான் ஒரேயொரு போட்டோவைத்தான் இன்னும் வைத்திருக்கிறார் ..
ஓராயிரம் போட்டோக்களை வைத்திருக்கும் தலைவர் எல்லாம் பேசாதவற்றை ஒற்றை போட்டோவை வைத்துக்கொண்டு எங்கடா தம்பி ஈழம் போன்ற அளப்பறைகளை சீமான் அவிழ்த்து விடுவது மேலும் மேலும் சீமானின் மேல் சந்தேகத்தை வலுப்படுத்திக்கொண்டே செல்கிறது ....

No comments:

Post a Comment