Friday, November 3, 2017

தகுதியானவர்களுக்கு வாய்ப்பில்லாமல், இடஓதுக்கீடு நாட்டை கெடுத்துவிட்டது?

வே. மதிமாறன் கேள்வி பதில்கள்

*கேள்வி*

தகுதியானவர்களுக்கு வாய்ப்பில்லாமல், இடஓதுக்கீடு நாட்டை கெடுத்துவிட்டது?

*பதில்*

உண்மைதான். பல நூற்றாண்டுகளாக நாட்டை இடஓதுக்கீடுதான் கெடுத்துவிட்டது.

*தலையில் பிறந்தவன் பிராமணன்*, அவனுக்கு அரசின் அதிக சலுகைகளும் சமூகத்தில் உயரிய மரியாதையும், அவன் கொலையே செய்தாலும் தண்டனை கிடையாது,

*தோளில் பிறந்தவன் சத்திரியன்*, அவன் எவ்வளவு அயோக்கியனாக இருந்தாலும் அவனும் அவன் பரம்பரையும்தான் மன்னராக வரவேண்டும்.

*அடுத்து இடுப்பில் பிறந்தவன் வைசியன்*, அவன் ஊழல், கலப்படம் செய்தாலும் அவன் பரம்பரைதான் வணிகம் செய்யவேண்டும்.

*கடைசியாக, காலிலிருந்து பிறந்தவர்கள் சூத்திரர்கள்*, அவர்கள் இழிவானர்கள். பரம்பரையாக அடிமை வேலை செய்யவேண்டும்.

*இந்த நாலு வர்ணத்திலும்கூட இடம் இல்லாதவர்கள்*, சண்டாளர்கள், பஞ்சமர்கள். என்று பல நூற்றாண்டுகளாக இடம் பெற்று வந்த இடஓதுக்கீடு, மனு வகுத்த இடஓதுக்கீடு.

இதுதான் இந்தியாவின் வெட்கக்கேடு. இந்த முறைதான் நாட்டை கெடுத்து விட்டது.

No comments:

Post a Comment