Wednesday, January 3, 2018

ரஜினியின் பிராடு குடும்பம்

ஃபாரூக் முகமது
2018-01-04

ஆன்மீக அரசியல் - நேரடி மோசடி
கதம் கதம் - மக்களின் சொத்து

கோச்சடையான் என்கிற பொம்மை திரைப்படத்தை, லதா இரண்டு நபர்களுக்கு விற்பனை செய்ததால் பெங்களுரு காவல்துறை லதா மீது எப்ஐஆர் பதிவு செய்யும் வரை சென்று, பின்னர் பணம் கொடுத்து சரி செய்யப்பட்டது.

ரஜினியின் மகள் தொடங்கிய 'ஆக்கர் நிறுவனம்' தயாரித்த கோவா திரைப்படத்தில் பணியாற்றிய
90 சதவிகித ஊழியர்களுக்கு பணமே தரவில்லை. இறுதியில் இதுவும் நீதிமன்றம் சென்று,
பின்னர் சரி செய்யப்பட்டது.

லதா ரஜினிகாந்த் ஆழ்வார்பேட்டையில் நடத்தி வரும், ட்ராவல்ஸ நிறுவனத்திற்கான இடத்தை வாடகைக்கு விட்ட சென்னை மாநகராட்சி, மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை கடை வாடகையை உயர்த்துவது வழக்கம். இது போல உயர்த்தியதை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்தார் லதா. உரிய வாடகையை செலுத்தாவிட்டால், காவல்துறை உதவியுடன் கடையை காலி செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கிண்டியில் லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஸ்ரம் பள்ளியின் கட்டிட உரிமையாளருக்கு 10 கோடி வாடகை பாக்கியை வைத்து, அவர் நீதிமன்றம் சென்று வழக்கு தாக்கல் செய்ததும் 2 கோடியை தருவதாக ஒப்புக் கொண்டு, பின்னர் அதையும் தராமல் இழுத்தடித்ததால், ஒரு கட்டத்தில் அவர் பள்ளியை இழுத்துப் பூட்டினார்.

ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஏற்கனவே ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும், ஓட்டுநர்களுக்கும் பல மாத சம்பள பாக்கி வேலை நிறுத்தம், போராட்டம் என்று நடந்திருக்கின்றன.

இவை அனைத்தும் ஒன்று ரஜினிக்கு தெரியாமல் நடந்திருக்க வேண்டும். அல்லது, தெரிந்தே நடந்திருக்க வேண்டும்.

ரஜினிக்கு தெரியாமலே நடந்திருந்ததாக வைத்துக் கொண்டால், ஒரு குடும்பத்தை நிர்வாகம் செய்வதற்கு கூட ரஜினிக்கு துப்பு இல்லை என்றே முடிவெடுக்க முடியும்.

தெரிந்தே நடந்திருந்தது என்றால் பேசுவதற்கு எதுவுமில்லை.

#பகிரி

https://m.facebook.com/story.php?story_fbid=1400556020072189&id=100003534139817

No comments:

Post a Comment