Sunday, January 13, 2019

இடஒதுக்கீடு - ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பயன் பெறுவது சரியா?

Ravishankar Ayyakkannu
2019-01-13

*கேள்வி:*

இடஒதுக்கீடு மூலம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பல தலைமுறைகளாக பயன் பெறுவது சரியா?

அவர்கள் விட்டுக் கொடுத்தால் மற்றவர்களும் பயன் பெறலாமே?

*பதில்:*

ஒரு திருமணத்துக்குச் செல்கிறீர்கள். உங்கள் குடும்பத்துக்கு அமர இருக்கை தரப்படுகிறது.

கூட்டம் நிறைய வருகிறது.

"நீங்கள் தான் ஏற்கனவே உட்கார்ந்து விட்டீர்களே! கொஞ்சம் எழுந்து நின்றால் அடுத்தவர்கள் உட்காரலாமே"

என்று எந்த மாங்கா மடையனாவது கேட்பானா?

இல்லை, அதைக் கேட்டுவிட்டு நீங்கள் தான் சொரணை கேட்டுப் போய் எழுந்து நிற்பீர்களா?

கூட்டம் நிறைய வந்தால் நிறைய நாற்காலி போட வேண்டும்.

அதே போல் இட ஒதுக்கீட்டின் பயன் இன்னும் நிறைய குடும்பங்களுக்குப் போய் சேர வில்லை என்றால்,

இன்னும் நிறைய கல்லூரிகளைக் கட்ட வேண்டும். வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

அப்படியே குறிப்பிட்ட சாதிகளுக்கு மட்டும் பெருமளவில் பயன்கள் போய் சேரவில்லை என்றால்,

MBC, இசுலாமியர், அருந்ததியர் உள் ஒதுக்கீடு உருவாக்கியது போல் உருவாக்க வேண்டும். இத்தகைய முடிவுகளை ஆய்வு செய்து தரவின் மூலம் எடுக்க வேண்டும்.

இது தான் சரியான தீர்வு.

இந்த அறிவுரை, தியாக அறிவுரை எல்லாம் சூத்தினருக்கும் பஞ்சமனுக்கும் மட்டும் தானா?

எந்த உச்சநீதிமன்ற நீதிபதியாவது டவாலி மகன் நீதிபதி ஆகட்டும் என்று தன் பதவியை விட்டு விலகினாரா?

இத்தனைக்கும் 200-300 குடும்பங்கள் மட்டுமே நூறு ஆண்டுகளாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆகிக் கொண்டிருக்கிறார்கள்.

நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

1835 வரை இந்த நாட்டில் சூத்திரர்களுக்கு நாற்காலியில் அமரவே உரிமை கிடையாது.

அப்படி உட்கார்ந்தால் அவன் சூத்தில் தழும்பு வருகிற வரை அடி - என்று விஷ்ணு ஸ்ம்ரிதியில் எழுதி வைத்திருக்கிறான்.

ஆங்கிலேயர்கள் ஆட்சியில் தான் நாமும்  நாற்காலியில் உட்காரலாம் என்று சட்டம் இயற்றப்பட்டது.

இட ஒதுக்கீடு என்பது உங்களுக்கு இடப்பட்ட நாற்காலி.

அது உங்கள் பிறப்புரிமை.

விட்டுத் தராதீர்கள்.

#reservation

https://www.facebook.com/576438568/posts/10158241830193569/

No comments:

Post a Comment