Thursday, November 8, 2018

ஆண்டாள், எம். எஸ், கலாம்

Poovannan Ganapathy
Via facebook
2018-01-28

ஆண்டாள், எம். எஸ், கலாம்

  சில ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக சங்கீதம்,எம் எஸ் என்று பேச்சு வந்த போது எம் எஸ் அவர்கள் தேவதாசி குலத்தை சார்ந்தவர்.ஆனால் அதனை மறைத்து அவரை சாதிமாற்றம் செய்கிறார்கள் என்றேன்.முற்போக்கு நண்பர்களும் கொதித்து எழுந்து உனக்கு ஏன் இவ்வளவு வக்கிரம் என்று பொங்கி விட்டார்கள்.

  அவர் விரும்பி பார்ப்பனர் போல் வாழ்ந்தார்.பார்ப்பனர்கள் அவரை ஒருவராக ஏற்று கொண்டு விட்டார்கள்.அவர்கள் மேன்மையானவர்கள்.எம் எஸ் அவர்களின் சாதி என்று அவரின் தாய் மதுரை ஷண்முக வடிவு,பாட்டி அக்கம்மாள்,சகோதரர் சக்திவேல் ,தேவதாசி வழக்கம்,அவர்களோடு இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட வாழ்க்கை என்று பேசும் தாழ்வு மனப்பா்ன்மையை ,வக்கிரத்தை கைவிடு என்று ஏகப்பட்ட அறிவுரைகள்.இன்று ஆண்டாள் விஷயத்திலும் இதே தான் அச்சு பிசகாமல் நடக்கிறது.

   கடந்த பல நூற்றாண்டுகளில் வாழ்ந்த பல தேவதாசிகளை பற்றி பல கோவில்களில் குறிப்புகள் உள்ளன.இதில் திருவரங்கம் கோவிலில் கோவில் மூலவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்த தேவதாசியான ஆண்டாள் அவர்கள் மீது மட்டும் ஏன் அளவுகடந்த பாசம் என்பது முதலில் விளங்கவில்லை.ஆண்டாள் ஒரு சாதனையாளர்.வரலாற்றில் இன்றுவரை நிற்கும் திருப்பாவை,நாச்சியார் மொழி எழுதியவர்.

  சாதனையாளர் யாரும் வேறு சமூகங்களில் இருந்து உருவாக மாட்டார்கள் எனும் பிம்பம் தொடர நடக்கும் போராட்டம் தான் இந்த போராட்டம்.முதலில் ராஜாஜி ஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்ற கதையை உருவாக்க முயற்சித்தார்.தேவதாசிகளுக்கு ஆதரவான போராட்டங்கள்,சூழல் ,அந்த முறையின் ஒடுக்குமுறையை எதிர்த்து கேள்விகள் வந்த காலகட்டம் அது.

  தேவதாசி ஒருவரால் இயற்றப்பட்ட திருப்பாவை கோவில்களில் வைஷ்ணவர்களால் பாடுபடுவதை சுட்டி காட்டினால் தீட்டு,தீண்டாமை,உயர் குலம்,கோத்திரம் எல்லாம் கேள்விக்குள்ளாகுமே என்று புத்திசாலித்தனமாக ராஜாஜி ஆண்டாள் ஒரு புனைவு என்ற வாதத்தை முன் வைத்தார்.

  அவர் புத்திசாலி.இறைவனை மணந்து கொண்டு நித்யசுமங்கலியாக வாழ்ந்து மறைந்த ஒருவரை தேவதாசி என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பார்கள் என்ற கேள்விக்கு விடை கிடையாது என்பதால் இதனை முன் வைத்தார்.சோடா பாட்டில் புகழ் ஜீயர்களுக்கு தீவிர மத பற்று காரணமாக அறிவு வெகு குறைவு என்பதால் மேலும் மேலும் உளறி கொண்டு  அனைவருக்கும் மிக தெளிவாக ஆண்டாள் ஒரு தேவதாசி என்று நிரூபணம் ஆகும் சூழலை உருவாக்கி கொண்டிருக்கிறார்கள்.

   கலாம் விஞ்ஞானியாக பல உயர் பொறுப்புகளை வகித்து குடியரசு தலைவர் பதவி வரை சென்றவர்.அவர் மாமிசம் உண்ண மாட்டார் என்று நாட்டின் கடைக்கோடி சிறுவன் வரை தெரியும்.ஊடகங்கள் எ்தனை எழுத மறந்தாலும் கலாம் ஐயர் என்று பணியில் இருந்த காலத்தில் ,மாமிசத்தை தவிர்த்ததால் அழைக்கப்பட்டார் என்பதனை எழுத மறக்க மாட்டார்கள்.

  நல்ல மனிதராக ,விஞ்ஞானியாக ,சாதனையாளராக இருக்க வேண்டும் என்றால் மாமிசம் தவிர்த்தவராக இருக்க வேண்டும் என்ற உளவியல் அது.இன்றும் தினமும் பல நோயாளிகள் மாமிசத்தை சுத்தமாக விட்டு விட்டேன்.இருந்தும் ஏன் ரத்த கொதிப்பு குறையவில்லை,உடல் நோய்கள் நீங்கவில்லை என்று சோகமாக கேட்பார்கள்.பெரும்பான்மை மக்கள் மாமிசம் உண்ணும் கூட்டமாக இருந்தும் மாமிசம் கெடுதி,தவறு எனும் கருத்தாக்கம் ஆழ ஊன்றி இருக்கிறது

   இதே தான் ஆண்டாள் அவர்களின் விஷயத்திலும் நடக்கிறது.திருப்பாவை,நாச்சியார் மொழி எழுதிய ஒருவர் கண்டிப்பாக தேவதாசியாக இருக்க முடியாது. இருக்க கூடாது என்பதே இதன் பின் உள்ள உளவியல் காரணம்.

   உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் வெளிநாடுகளுக்கு சென்றால் ஆடு,மாடு,பன்றி அனைத்தையும் சாப்பிடுவார்.அவருடன் உடன் செல்லும் போது உணவு தான் எனக்கு பெரிய பிரச்சினை என்று அவர் மனைவி ஒரு பேட்டியில் சொன்னது எப்படியோ வெளிவந்து விட்டது.

  ஆனால் கலாம் ஐயர் போல இதனை வைத்து ஆனந்த் பஞ்சமன்,ஆனந்த் சூத்திரன் என்று எந்த பத்திரிக்கையாவது எழுதுமா?

தோழர் அனந்தகிருஷ்ணன் அவர்களோடு நடந்த ஒரு விவாதத்தில் எந்தெந்த மாநிலங்களில் மாட்டு கறி அதிகம் உண்ணப்படுகிறது,மாட்டு கறி உண்பவர்கள் அதிகமோ அங்கு முன்னேற்றம் அதிகம் என்றேன்.அதற்கு பதிலாக உன் வாதம் தவறு,இந்தியாவில் இருந்து அதிக நோபல் விருது பெற்றவர்கள் பார்ப்பனர்கள் தான்.அதனால் சைவமே அறிவு என்று சொல்லலாமே.ஆனால் நான் சொல்ல மாட்டேன் என்றார்.

என் பதில்.இந்தியாவை சேர்ந்த  நோபல் பரிசு பெற்றவர்களில் ஹர்கோபிந்த் கொரானா,அமர்த்தியா சென்,வெங்கடராமன் ராமகிருஷ்ணன் ஆகிய மூவரின்  மனைவிகளும் மாட்டுக்கறியை விரும்பி உண்ணும் வெளிநாட்டவர்கள் .இவர்களும் அதனை விரும்பி உண்ணுபவர்களாக இருக்க தான் வாய்ப்புகள் அதிகம்.மற்றொருவரான சுப்பிரமணியம் சந்தசேகர் ஐம்பது ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்தவர்.கடவுள் நம்பிக்கை அற்றவர்.அவரும் மாமிசம் தவிர்த்திருக்க வாய்ப்புகள் குறைவு.மீதமுள்ளது சி வி ராமன் மட்டுமே.அவர் மருமகளும் ஜெர்மானியர் என்று சொன்னேன்.

நீ எப்படி ஆண்டாள் அவர்களை தேவதாசி என்று சொல்லலாம் என்று கொதிப்பதன் பின் உள்ள உளவியல் இது தான்.இன்னார் இதனை செய்திருக்க முடியாது என்பதே இந்து மதத்தின் ஆணிவேர்.இப்படி இருந்தால் தான்,இந்த கோத்திரமாக இருந்தால் தான். இந்த உணவை தவிர்த்தால் தான்,இந்த ஆடைகளை மட்டுமே உடுத்தி கொண்டு வாழ்ந்தால் தான் இது சாத்தியம் எனும் மூடநம்பிக்கையே, சாதிவெறியே இந்த போராட்டங்களுக்கான காரணம் .
https://m.facebook.com/story.php?story_fbid=1790791837599268&id=100000054060235

No comments:

Post a Comment