Tuesday, October 4, 2016

தனிமைப்படுத்துதலானது முன்னாலும் தாக்குகிறது; பின்னாலும் தாக்குகிறது.

உறவுமுறை என்பது தனிமைப்படுத்துதலுக்கு நேர் எதிரானது. மற்றொரு சமூகக் குழுவுடன் தாழ்த்தப்பட்டவர்கள் உறவுமுறையை நிறுவிக் கொள்வது என்பது, தங்களுடைய தற்போதைய தனிமைபடுத்தலுக்கு முடிவு கட்டுவது என்பதையே குறிக்கும். அவர்கள் இந்துக்களாக இருக்கும் வரை, அவர்களுடைய தனிமைப்படுத்துதல் என்பது ஒருபோதும் முடிவடையாது. இந்துக்கள் என்ற முறையில் அவர்களுடைய தனிமைப்படுத்துதலானது, அவர்களை முன்னாலும் தாக்குகிறது; பின்னாலும் தாக்குகிறது.



அவர்கள் இந்துக்கள் என்ற போதிலும்கூட அவர்கள் முஸ்லிம் மக்களிடம் இருந்தும், கிறித்துவர்களிடம் இருந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஏனென்றால், இந்துக்கள் என்ற முறையில் அவர்கள் இந்துக்களுக்கும் அதைப் போன்றே இந்துக்கள் அல்லாதவர்களுக்கும் அந்நியமானவராகி விடுகின்றனர். இந்தத் தனிமைப்படுத்துதலுக்கு முடிவு கட்ட ஒரேயொரு வழிதான் உள்ளது. இதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை. இந்து அல்லாத ஏதாவதொரு சமூகக் குழுவுடன் இணைந்து அதனுடைய உறவுமுறையாக ஆகிவிடுவது என்பதுதான் அந்த வழி.

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 5, பக்கம் : 414)

No comments:

Post a Comment