Sunday, October 21, 2018

அத்தா என்பது பழந்தமிழ்ச் சொல் - பூதலூர் அப்துல்மாலிக்

பூதலூர் அப்துல்மாலிக்
2018-10-21

எனது பழைய கட்டுரையை மாற்றி அமைத்து வெளியிடுகிறேன் சில பல காரணங்களுக்காக:-

முழுமையான பெரிய கட்டுரை!!
என்னால் முடிந்தவரை!!!

அத்தா என்பது பழந்தமிழ்ச் சொல்.

தமிழ் இசுலாமியர்கள் தனது தந்தையை அத்தா என்றழைப்பர்...

அத்தன் என்பதுதான் அத்தா என்று அழைக்கப்படுகிறது...

அத்தன் என்றால் தகப்பன் என்று பொருள்...

பழைய இலக்கியங்களில் அத்தா என்ற சொல்லை நிறைய இடங்களில் காணலாம்...

அத்தா, அச்சன், முத்தன், அப்பா என்பதெல்லாம் தகப்பன் என்பதனையே குறிக்கும்...

“அத்தா இது கேள் என ஆரியன் கூறுவான்” கம்பராமாயணம்.

“அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே” தேவாரம்.

” சைவ சமயக் குரவர்களுள் ஒருவரான அப்பர் சிவனைத் தன் தந்தையெனக் கருதி இயற்றிய ஒரு பாடல் .

“அத்தா உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய்
அருள் நோக்கில் தீர்த்த நீராட்டிக் கொண்டாய்
எத்தனையும் அரியை நீ எளியை ஆனாய்
எனை ஆண்டு கொண்டு இரங்கி ஏன்று கொண்டாய்
பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்
பிழைத்தனன் அத்தனையும் பொறுத்தாயன்றே
இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ
எம்பெருமான் திருக்கருணை இருந்தவாறே”” என்ற பாடலில் அத்தா என்ற சொல் வருவதை கவனிக்கலாம்.

அப்பன் -அப்பா, அத்தன் – அத்தா. தகப்பன் அல்லது தலைவன் என்ற பொருள் படும்.

துருக்கியனை அத்தா என்று அழைக்க காரணம் தலைவன் என்ற பொருளில்தான்

தமிழ் முஸ்லிம்கள் உறவு முறைகளுக்கு பயன்படுத்தும் வார்த்தை அத்தா !!
அப்பா என்கிறவன் தனக்கு வாழ்வு கொடுக்கிற இடத்தில் இருப்பதால் சிலர் அப்பாவை வாப்பா என்றழைப்பர்.

செம்மொழித் தமிழே தமிழக முஸ்லீம்களின் தாய்மொழி. அவர்களின் உள்ளத்திலும் இல்லத்திலும் உறைவதும் ஒலிப்பதும் செந்தமிழ். இதையே ‘எங்களுயிர்த் தமிழ் வழக்கு’ என்று அன்றே பாடினார் ஆபிதீன்.

‘பாத்திரத்தை ஏனம் என்போம்
பழையதுவை நீர்ச்சோறு என்போம்
ஆத்திரமாய் மொழி குழம்பை
அழகாக ஆணம் என்போம்
சொத்தையுரை பிறர் சொல்லும்
சாதத்தை சோறு என்போம்
எத்தனையோ தமிழ் முஸ்லிம்
எங்களுயிர்த் தமிழ் வழக்கே’

விளக்கவுரை தேவையில்லை. ஏனம், ஆணம், நீர்ச்சோறு, சோறு முதலான எண்ணற்ற உணவு மற்றும் உறவு முறைச் 
சொற்களை தமிழ் முஸ்லிம்கள் ஆண்டாண்டு காலமாக
வழங்கி வருகின்றனர்.

இன்றைக்கு அத்துனை இஸ்லாமியர்கள் வீடுகளில் எல்லா நேரங்களிலும் தமிழ் நடைமுறைப் பேச்சில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

பல ஜாதியிலிருந்து இஸ்லாத்தை தழுவி:-

பல ஜாதிலிருந்து வந்தாலும் இஸ்லாத்திற்கு வந்தபின் ஒரு முஸ்லிம்க்கும் தான் எந்த ஜாதிலேந்து வந்தோம் என்ற ஜாதியே தெரியாமல் ஆக்கிய பெருமை இஸ்லாத்தையே சாரும்....

இஸ்லாம் வாழ்க

இங்கே வரலாரை தோண்டி ஜாதியை சொல்வதின் நோக்கம் முஸ்லிம்களை வேற்று இனத்தாராக பார்க்கும் பார்வை இந்தியமக்களுக்கு வந்துவிட்டது அதிலும்  தமிழ்நாட்டிலும் நுழைந்துவிட்டது...

தமிழனுக்கு எதுவாக இருப்பினும் தமிழனுக்கு ஜாதி மற்றும் மொழியின் வாயிலாக சொன்னால்தான் அது அவனுக்கு எளிதில் புரியும் அதை ஏற்றும் கொள்வான் அதன் காரணமாகவே கூறப்படுகிறது வேறு நோக்கமில்லை.....

பிஸ்மில்லாஹ்....

கொடிக்கால்பிள்ளைமார் மதுரை ராஜ்ஜியத்து
சிவன்கோயில்களில் கொடிஏற்ற கம்பம்
கொண்டுவரும் கௌரவம்
பெற்றிருந்தவர்கள்.

சோழிய வேளாளர்களின் உட்பிரிவாக கொடிக்கால்காரர் வெற்றிலைக்காரர் கீரைக்காரர் தமிழக அரசின்
பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும்
இடம் பெற்றுள்ளது.

இந்த சமூகத்தில் கணிசமானோர் பதினேழாம் நூற்றாண்டில் இஸ்லாமிய மதத்துக்கு மாறினர்.

பழைய தஞ்சை மாவட்ட முஸ்லிம்களில் பெரும்பாண்மையினர்களாக உள்ள இவர்களின் குலத்தொழிலும் வெற்றிலை கொடிக்கால் விவசாயமே.

பனையூரில் இருந்த இல்லத்துப் பிள்ளைமார்களின் பல  இஸ்லாத்தைத் தழுவினர்.

மருதநாயகம், கான் சாஹீப் என்று அழைக்கப்பட்ட முகமதுயூசுப்கான்சிவகங்கை அருகே உள்ள பனையூர் என்ற கிராமத்தில் 1725 ஆம் ஆண்டு இல்லத்துப் பிள்ளைமார் இனத்தில் பிறந்தார்.

பனையூரில் இருந்த இல்லத்துப் பிள்ளைமார்களின் பல குடும்பங்கள் இஸ்லாத்தைத் தழுவின, மருதநாயகத்தின் குடும்பமும் அதில் ஒன்று. இஸ்லாமிய சமயத்தைத் தழுவியதன் காரணமாக முகமது யூசுப் கான் என்று அறியப்பட்டார்.

கேரளாவிலுள்ள ஈழவர் சமுதாயத்தினருடன் தொடர்புடைய இச்சமுதாயத்தினர் தமிழ்நாட்டில் தென்மாவட்டங்களில்தான் அதிகமாக உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல ஊர்களிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, விக்கிரமசிங்கபுரம் போன்ற ஊர்களில் அதிக அளவிலும், விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், மதுரை மாவட்டத்தில் மதுரை, மேலூர் பகுதிகளிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் பகுதிகளிலும் தேனி மாவட்டத்தில் தேனி, போடிநாயக்கனூர், சின்னமனூர் பகுதிகளிலும், இதர மாவட்டங்களில் சில ஊர்களிலும் குறிப்பிடத்தக்க அளவிலும் வசித்து வரும் இவர்கள் பெரும்பான்மையாக நெசவு மற்றும் கூலி வேலைகளையே செய்து வந்துள்ளனர்.

தற்போது தொழில் நிமித்தம் தமிழ்நாட்டின் பல ஊர்களில் இடம் பெயர்ந்து உள்ளனர்.

உறவு முறை:-
தமிழகத்தில் இல்லத்துப்பிள்ளைமார் என்று அழைக்கபடுபவர்கள் ஈழவர்கள். ஈழவர்கள் (இல்லத்துப்பிள்ளைமார்) அக்காள் மகளை மணம் செய்யும் பழக்கம் கிடையாது. (இஸ்லாத்திலும் கிடையாது).
...

Sc பிரிவு அதிகமாக முஸ்லிமாகவும்!!
ST பிரிவு அதிகமாக கிருத்தவராகவும்
மாறினார்கள்!!!
(வரலாறு).

நாடார்கள் அதிகளவில் கிருத்துவத்தில் இணைந்தார்கள்.
ஆனால் அங்கொன்று இங்கொன்றாக இஸ்லாத்திலும் இணைந்துள்ளார்கள்
அதில் குறிப்பிட தகுந்தவர் சக்திவேல் நாடார் அவர்கள்.
...
கருகமணி அணிபவரா நீங்கள்?
அறிந்துகொள்ளுங்கள்
கள்ளர் வழி என்று!!
குறிப்பா புதுக்கோட்டை வாழ்விடம்!!

கள்ளர்கள்:-

சுதத்திரத்திற்கு முன் :-கள்ளர்கள் என அழைக்கபட்டவர்கள்
எங்கே குற்றம் நடந்தாலும் கைது செய்யபட்டார்கள்,.

பின் குற்றபரம்பரை என அழைக்கப்பட்டு தினம் காவல்நிலையத்தில் ஒரு முறை ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதிக்கபட்டது,
அதை எதிர்த்து உடைத்தவர் இந்த முத்துராமலிங்க தேவரும் ஒரு ஆங்கிலேயரும்.

அச்சூழ்நிலையில் சாதியை மறந்து இஸ்லாமியர்களாக மதம் மாறியவர்கள் பலர், அம்மாதிரி மாறிய முன்னோர்கள் வம்சம் வந்தவர்களில் ஒருவர் தான் இன்று புதுகை அப்துல்லா
என்ற பெயரில் பதிவெழுதி கொண்டிருக்கும் அப்துல்லா!.
மறைந்த அகில இந்திய முஸ்லீம் லீக் தலைவர் "கண்ணியத்திற்குறிய காயிதேமில்லத்" இஸ்மாயில் சாஹிப் அவர்களின் முன்னோர்கள் தேவர் மரபில் இருந்து இஸ்லாமியர்களாக மதம் மாறியவர்கள்.

தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்களில் குறிப்பாக தென் மாவட்டங்களில் இன்றைய புதுக்கோட்டை மாவட்டம் துவங்கி திருநெல்வேலிவரை வசிக்கும் இஸ்லாமியர்களின் முன்னோர்கள் முக்குலத்தோரே!

மாலிகாபூர் படையெடுப்பு துவங்கிய சில போர்களில் குற்றவாளிகளாகப் பிடிப்பட்டு மதம் மாறத் துவங்கியதில் இருந்து எங்கள் முன்னோர்கள் போல குற்றப்பரம்பரைப் பிரச்சனையில் மதம் மாறியவது வரை தென்னகத்தில் முக்குலத்து சமுதாயமே பெருமளவில் இஸ்லாத்தை தழுவியது.  இன்றைக்கும் பிறமலைக் கள்ளர்கள் இடத்தில் மதம் மாறிச் சென்ற தங்கள் பங்காளிகளான இஸ்லாமியர்களைப் போல "சுன்னத்" செய்யும் வழக்கம் உண்டு.

தமிழகத்தில் பிற சமூகத்துப் பெண்கள் மஞ்சள் கயிற்றை தாலியாக அணிவர். .

ஆனால் பிறமலைக் கள்ளர் சமூகத்தில் தாலிக்கு பதிலாக கருகமணியை அணியும் பழக்கம் உண்டு.

அவர்களிடம் கூட இப்போது அந்தப் பழக்கம் குறைந்துபோய் மஞ்சள் தாலி பழக்கம் வந்துவிட்டது. ஆனால்  இன்றும் இஸ்லாமியப் பெண்கள் தங்கள் தாய்வழிச் சமூகத்தின் பழக்கம் மாறாமல் தாலியாக கருகமணியையே அணிகின்றனர். 

காயிதே மில்லத்தைப் பொறுத்தவரை அவரது முன்னோர்கள் மறவர்கள் என்று அவரே பல சந்தர்ப்பங்களில் மேடைகளில் பேசிய செய்தி உண்டு.

கட்டுரையாளரை பற்றி:-

பூதலூர்  அப்தும்மாலிக்யின் சொந்த ஊர் பூதலூர் ஆக இருந்த போதும் எனது தந்தையின் சொந்த ஊர் திருக்களப்பூர் புதுக்கோட்டை மாவட்டம். அங்கே கள்ளர்கள் செறிந்து வாழும் ஊர்.

அதுபோல எனது தாயின் வழி பார்த்தால் அது பெரிய பட்டியல் நீண்டு சென்று இறுதியில் ஒரு தேவர் இஸ்லாத்திற்கு வந்தது தெரியவருகிறது.

யாரெல்லாம் இன்றும் தொழுகை, நோன்பு ,ஆணம் பள்ளிவாசல்கள் என்று கூறுவாரோ அவரெல்லாம் சமணத்திலிருந்து வந்த தூய தமிழ் கடற்கரை வாழ் இஸ்லாமியர்களே!!!

தொல்காப்பியர்,திருவள்ளுவர்(வள்ளுவர் சமணரா என்ற கேள்வியும் உண்டு நாம் பிறகு பார்ப்பபோம் இதுபற்றி).

இளங்கோவடிகள் போன்றோர் சமணம் சார்ந்த படைப்பாளிகள்;அறிவாளிகள்!!!

தமிழ்நாட்டில்:-

கழுவில் ஏற்றப்பட்டுக் கொடுமைப்படுத்தப்பட்ட சமணர்கள் தான் முதன் முதலில் இஸ்லாத்திற்கு அதிகளவில் மாறினார்கள் என்றும் பள்ளிகள் என்பது சமணர்களின் வழிபாட்டுத்தலம்.

இதிலிருந்து தான் பள்ளிவாசல் என்று பெயர் வந்ததாகவும்,மேலும் தொழுகை நோன்பு என்பன தூய தமிழ் என்பதும் அதை முழுக்க முழுக்க சமணர்களே பயன்படுத்தினார்கள்.

இஸ்லாத்திற்கு வந்த சமணர்களே இன்றும் அதாவது இன்றைய தாய்மொழி தமிழ் பேசும் முஸ்லிம்களே இந்த வார்த்தைகளை இன்றும் பயன்படுத்துகிறார்கள்

மூதாதயரை தேடுவோம் அழிக்கப்பட்டவரலாரை   பரப்புவோம்!!

14ஆம் நூற்றாண்டுகளில்தான் இஸ்லாமியர்கள்  இலக்கண  இலக்கிய காப்பியங்களை இயற்றுபவர்கள் வருகை அதிகரித்தது அதிலும் கூர்ந்து கவனித்தால் தெரியும் அனைவருமே கடற்கரையை ஒட்டிய முஸ்லிம்கள் !!!

காரணம் சமணத்திலிருந்து இஸ்லாத்தை வாழ்வியல் முறையாக மாற்றிக்கொண்டார்கள் கடற்கரை சமணர்கள் !!

ஆரிய சைவ கொடுமையால் வேறு வழியின்றி தற்காப்புக்காக.இருப்பினும் சமணர்கள் இஸ்லாத்திற்கு வந்து கொள்கையான புலாலை ஆரம்பத்தில் உண்ணாமலே இருந்துள்ளனர். காலப்போக்கில் இஸ்லாமிய கொள்கையில் பற்றுகொண்டும் பல நாடுகளின் வணிகதொடர்பாலும் வழக்கம் மாறியுள்ளது!!!

மது இஸ்லாத்தில் தடை சமணரளுக்கு இஸ்லாம் ஒரு கொடை!!

கழுவில் ஏற்றிக்கொள்ளப்பட்ட சாக்கிய சமணர்கள் பயந்து இஸ்லாத்திற்கு அதிகம் வந்தனர்.

மொட்டை அடித்து இருப்பார்கள் இஸ்லாத்தில் ஹஜ் கிரிக்கைகளை செய்பவர்கள் மொட்டையடிப்பார்கள் அன்று பிறந்த பாலகன் போல் அதை இறைவனின் கட்டளைப்படி செய்பவருக்கு கிடைக்கும். இன்றும் சமணர்களின் பேச்சு தமிழ் வழக்கு தமிழ் முஸ்லிம்களிடத்தில் மட்டுமே காணலாம். குறிப்பாக கடற்கரை வாழ் இஸ்லாமியர்கள் இடத்தில்.

சமணர்கள் தான் இஸ்லாத்திற்கு வந்து தமிழ்காப்பியங்களையும் இலக்கியங்களையும் தமிழ் பற்றை நிறுபித்துள்ளனர்.
நாகூர் காயல்பட்டினத்தவரே அதிகம் தமிழ் இலக்கண, காப்பியங்கள் எழுத்தாளர்களை காணமுடிகிறது!!!
காரணம் சமணத்திலிருந்து இஸ்லாத்தை முழுவதும் படிப்படியாக உள்வாங்கி கொண்டு இஸ்லாத்தை ஏற்று  தமிழை வளர்த்துள்ளார்கள்!!

இஸ்லாமியர்கள் 14ஆம் நூற்றாண்டு முதல் இன்று வரை அதிகம் தமிழுக்கு தொண்டு செய்வதை காணலாம்
...
தஞ்சை ராஜராஜ சோழனின் சகோதரி குந்தைவை நாட்சியார் மத்தாகினி இஸ்லாத்திற்கு வந்தவர்.
துலக்க நாட்சியார் துலுக்க நாட்சியார் இல்லை.

திருச்சி நத்தர்ஸா பள்ளியில் உள்ளது இவரின் அடக்கஸ்தலம்.

...
கேரளாவில்:-
கேரளாவில் மாப்பிளைமார்கள்.

கேரளாவில் பறையர்கள் என்று கூறப்படும் ஜாதியிலிருந்து இஸ்லாத்திற்கு அதிகம் வந்துள்ளார்கள்.

நபிகாலத்திலே இஸ்லாத்திற்கு வந்த ு முதல் இந்திய முஸ்லிம் மன்னர்.
நபிகாலத்திலே இஸ்லாத்திற்கு வந்தவர் சேரமான் பெருமான்.

தாஜுதீன் என்று மாற்றிக்கொண்டவர்.

இவரைப்பற்றி எழுதும் பலர் 8 ஆம் நூற்றாண்டு என்று தவறாக எழுதி வைத்துள்ளார்கள்.

...
அதுபோல 1981-ல் இஸ்லாத்தை தழுவிய மீனாச்சி புரம் மக்கள்.

இப்படி இன்றுவரை நீடிக்கிறது.

பெரியார்தாசன்

ரஹிமா யுவன்..

தான் எந்த மதம் ஜாதி வந்தோம் என்பதே மறக்கடித்து மதிப்பை வழங்கும் இஸ்லாமே வாழ்க போற்றி தழைக்க மென்மேலும்!!!

துலக்கமானவர்தான் துலுக்கன் இல்லை!!!

"
ஒப்பரிய சட்டையும் உடுத்திலகு பட்டும்
தொப்பியும் முகத்திடை துலக்க முளராகி"

(திருவாதவூர்ப் புராணத்தில்)

திருவாதவூரடிகள் புராணம்:-

கடவுள் மாமுனிவர் இயற்றிய திருவாதவூரடிகள் புராணம்
545 செய்யுட்களைக் கொண்டது. அளவில் இது சிறிய நூல்.

சுந்தரரும், சேக்கிழாரும் மாணிக்கவாசகரைப் பாடவில்லை.
பின்னர் வந்த கடவுள் மாமுனிவர் அக்குறையைச் சரி செய்யும் வகையில் மாணிக்கவாசகர் வரலாற்றைப் பாடியதாகக் கொள்ளலாம். இதன் முக்கியச் சிறப்பு இதுவேயாகும்.

மந்திரிச்சருக்கம், திருப்பெருந்துறைச் சருக்கம், குதிரையிட்ட சருக்கம், மண் சுமந்த சருக்கம், திருவம்பலச் சருக்கம், புத்தரை வாதில் வென்ற சருக்கம், திருவடி பெற்ற சருக்கம் என்ற பல பகுதிகள் இப்புராணத்தில் அடங்கியுள்ளன.

சைவசித்தாந்தக் கருத்துகள் இதில் அதிகமாகக் காணப்படுகின்றன. இந்நூல் ஒரு தலபுராணமே ஆயினும் மாணிக்கவாசகரின் பெருமையைக் கூறுவதால் பெருமை பெறுகிறது எனலாம்.

கடவுள் மாமுனிவர் காலம்:-

11 ஆம் நூற்றாண்டு கல்லாடம் மதுரைச் சொக்கநாதரின் 30 திருவிளையாடல்களைக் கூறுகிறது.

13 ஆம் நூற்றாண்டு நூல் பெரும்பற்றப்புலியூர் நம்பி பாடிய பழைய திருவிளையாடல் புராணம் நரி குதிரையானது, குதிரை நரியானது பற்றிய கதைகளைக் கூறுகிறது. எனவே நரி பரியான கதையைக் கூறும் ஆசிரியர் 13 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர்.

உமாபதி சிவாசாரியார் 1300-1325 காலப்பகுதியில் வாழ்ந்தவர். இவரைக் குறிப்பிடும் பாடல் திருவாதவூர் புராணத்தில் உள்ளது.

எனவே கடவுள் மாமுனிவர் காலம் 14 ஆம் நூற்றாண்டுக்குப் பிந்தியது. இன்னும் இவை போன்ற பல சான்றுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இவர் காலம் 15 ஆம் நூற்றாண்டு என ஆகிறது.

ராவுத்தன்:-

திருநாவுக்கரசரின் தேவரத்திலும் (5-29, 5-40) , நம்மாழ்வாரின் திருவாய்மொழியிலும் (4-4) இதைப்போன்ற பாடல்கள் இடம் பெற்றுள்ளன

சிவபெருமான் நரிகளைப் பரிகளாக மாற்றி பாண்டியனிடம் சேர்ப்பித்தநிகழ்ச்சியில் சிவனை
இராவுத்தநாயகனாகவே சித்தரிப்பதைக் காணலாம்.

அருணகிரிநாதர் தனது கந்தர் அலங்காரத்தில்,

'மாமயிலேறும் ராவுத்தனே'என்றும்

கந்தர் கலி வெண்பாவில்

'சூர்க்கொன்ற ராவுத்தனே' என்றும்புகழ்ந்திருக்கின்றனர்.

இதில்

பல அரசியல் காரணங்களை குறிப்பிடவில்லை ஏன்னென்றால் கட்டுரை நூலாக மாறிவிடும் என்பதாலே!!!

இப்படிக்கு உங்கள் அன்புடன்
பூதலூர் அப்துல்மாலிக்

https://m.facebook.com/story.php?story_fbid=1833476446708313&id=100001379258788

No comments:

Post a Comment