Saturday, January 28, 2017

சீமானின் உண்மை முகம்!

சீமானின் உண்மை முகம்!

நான் சீமானின் முன்னாள் ஆதரவாளன். அவரது உணர்சிகளை தூண்டும் பேச்சாலும் விடுதலைபுலிகளின் ஆதரவு நிலைப்பாட்டாலும் அவரால் கவரப்பட்டேன். பிறகு அவ‌ரை நெருக்கமாக கவனித்தபோது பல அதிர்ச்சியான உண்மைகள் தெரியவந்தன. எனது அனுபவத்தின் அடிப்படையில் அவரை பற்றி தெரிந்து கொண்ட விசயங்களை இங்கே தகுந்த ஆதாரங்களுடன் பகிர்ந்து கொண்டு உள்ளேன்.

இதனால் என்னை போன்ற அப்பாவி இளைஞன் ஒருவனாவது சீமானிடமிருந்து தப்பித்தால் எனக்கு மகிழ்ச்சி தான். இது தமிழ்நாட்டில் உள்ள பெரிய ஊடகங்களில் வெவ்வேறு காலகட்டங்களில் வந்த செய்திகளை ஆதாரமாக கொண்டு, அறிவுப்பூர்வமாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள். இதை மறுப்பவர்களிடம் நேர்மை இருந்தால் பதிலுக்கு வேறு ஆதரங்களை கொடுக்க வேண்டும்.

சீமான் புலிகளுக்கு செய்த துரோகங்கள்:

ஈழப்படுகொலைக்கு பின்னர் டப்லின் தீர்பாயத்தில் நடந்த விசாரணை மிக முக்கியமானது. அதில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 41 பக்க அறிக்கையை சமர்பித்துள்ளனர்.

அதில் LTTE யினர் போர்குற்றம் புரிந்தனர் என்று கூறியுள்ளார் சீமான். அந்த அறிக்கையில் 40 ஆவது பக்கத்தில், "விடுதலைப் புலிகள் ஆண், பெண், குழந்தைகள் என்ற பேதமின்றி அனைவரையும் புலிகள் போரில் ஈடுபடுத்தினர், குழந்தைகளை LTTE யினர் பெற்றோரிடம் இருந்து பிடிங்கி, தங்களின் படைகளில் இணைத்துக் கொண்டனர். திருமணமான பெண்களுக்கு கட்டாய கருக்கலைப்பை LTTE யினர் செய்ததனர், மேலும் போரின் இறுதிக் கட்டத்தில் LTTE யினர் அப்பாவி மக்களை கேடயமாக பயன்படுத்தியதாகவும், தப்பிக்க பார்த்த தமிழர்களை சுட்டு கொன்றனர்" என்று சிங்கள அரசாங்கம் பிரபாகரன் மீது கூறும் அத்தனை குற்றச்சாட்டுகளையும் கூறியுள்ளார் சீமான். நேரடியாக LTTE யினர் தான் போர் குற்றவாளிகள் என்று ஐ.நா விசாரணை குழுவில் வாக்குமூலம்அளித்துவிட்டு, இங்கு வந்து பிரபாகரனின் புகழ் பாடி கொண்டு இருக்கிறார் சீமான்.

சீமானின் துரோகத்துக்கு இரண்டு ஆதாரங்கள்:

1. விகடன் என்பது விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான பத்திரிக்கை. ஈழ இறுதிபோர் உச்சத்தில் இருந்த போது விகடன் தான் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் உண்மை செய்திகளை தைரியமாக வெளியிட்டது அனைவரும் அறிந்தது.

இப்போது கூட சீமானின் பேட்டிகளை அதிகமாக வெளியிட கூடிய வெகுஜென பத்திரிக்கை விகடன் தான். அப்படிப்பட்ட பத்திரிக்கையிலேயே விடுதலை புலிகளுக்கு எதிராக ஐநாவில் சீமான் சமர்பித்த அறிக்கை பற்றி மிக கடுமையான குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இது பொய் என்றால் சீமான் இதற்கு மறுப்பு தெரிவித்து இருப்பார்.

ஏனெனில் விகடன் தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் விற்பனையாகும் வார இதழ். ஆனால் சீமான் இதை பற்றி வாயே திறக்காமல் கள்ள மௌனம் சாதிக்கிறார். இதுவே அவரின் மீதான குற்றச்சாட்டை உறுதிபடுத்துகிறது. விகடன் வெளியிட்ட செய்திக்கான லிங்கை கீழே கொடுத்து உள்ளேன்!

http://www.vikatan.com/news/tamilnadu/64271-students-forum-turn-against-seeman.art

2.தேவர் சமூகத்து மக்களால் நடதப்படும் பேஸ்புக் பக்கத்திலும் சீமான் ஐநாவில் சமர்பித்த அறிக்கைக்கு எதிராக சீமானுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தேவர் ஜாதி மக்கள் என்ன வேற்று மொழிகாரர்களா? அவர்கள் சீமான் மேல் ஏன் அவதூறு பரப்ப வேண்டும்? அதற்கான இணைப்பு கீழே

https://www.facebook.com/thevarvamsamfilmsindia/posts/1614333865554009:0

சீமானின் இலங்கை பயண பொய்கள்:

சீமான் இலங்கைக்கு சென்றது திரைப்படம் எடுப்பது தொடர்பான பயிற்சி கொடுக்க தான். இதை நடிகர் ராஜ்கிரன் ஒரு பேட்டியில் பேச்சுவாக்கில் கூறிவிட்டார். சீமான் தலைவர் பிரபாகரனை சந்தித்தது 5 நிமிடங்களுக்குள் தான். பாரதிராஜா, மகேந்திரன் போன்றோர் எற்கனவே இதேபோல் சென்று தலைவருடன் புகைப்படம் எடுத்துள்ளனர். அதேமாதிரி தான் ஒரு இயக்குனர் என்ற அடிப்படையில் சீமானோடு ஒரே ஒரு புகைப்படம் எடுத்துள்ளார் தலைவர்.

அதன் பிறகு பிரபாகரன் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் சீமான் என்ற பெயரை உச்சரிக்கவே இல்லை. ஆனால் சீமானோ அவரோடு எடுத்த ஒரே ஒரு புகைப்படத்தை வைத்துக்கொண்டு, என்னமோ இவர் தான் பிரபாகரனின் வலது கையாக செயல்பட்டது போலவும், பிரபாகரன் என்னிடம் "அதை கூறினார், இதை கூறினார்" என்று பொய் சொல்லி கொண்டு இருக்கிறார்.

அதுகூட‌ பரவாயில்லை, பிரபாகரன் இவருக்கு கடல் நண்டு பரமாறியதாக எல்லாம் பேட்டி கொடுத்துள்ளார். அப்படி உண்மையிலேயே பிரபாகரனுக்கு நெருக்கமானவராக இருந்திருந்தால், "இவர் இப்போது சொல்லும் விசயங்களில் ஒன்றை கூட ஏன் தலைவர் உயிரோடு இருக்கும் போது மேடைகளில் கூறவில்லை?" ஏனெனில் உண்மையை பிரபாகரன் வெளியிட்டு விடுவார் என்ற பயம் தான் காரணம்!

ராஜ்கிரனுக்கு சீமானுடன் எந்தவித கசப்பும் கிடையாது. அவர் திரைதுரையில் ஒழுக்கமானவர் என்று பெயர் எடுத்தவர். ராஜ்கிரன் எந்த கட்சியிலும் உறுப்பினரும் கிடையாது. அவர் தான் உண்டு தான் வேலை உண்டு என்று இருக்க கூடிய ஒரு சாதாரண தமிழன். எனவே அவர் பொய்யோ, அவதூறோ செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவர் சீமானின் இலங்கை பயணம் பற்றி கொடுத்த பேட்டி கீழே உள்ளது!

https://www.youtube.com/watch?v=j4COeGCCCA8&app=desktop

சீமான் இப்படி பொய் சொல்ல பணம் தான் காரணம். “சீமான் தான் இலங்கை தமிழர்களின் பிரதிநிதி“ என்று கூறி நாம் தமிழர் கட்சியினர் வெளிநாடுவாழ் தமிழர்களிடம் பண வசூல் செ ய்கின்றனர். சமீபத்தில் கூட சிங்கப்பூரில் தமிழர்களிடம் விடுதலைபுலிகளின் பெயரில் பண மோசடியில் ஈடுபட்டதற்காக நாம் தமிழர்கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கான ஆதாரம் இதுமட்டும் அல்லாது புலிகளின் தளபதி சீமானை பற்றி பேசுவது போல ஆடியோவை யுடிப்பில் வெளியிட்டு உள்ளார். அப்படி அவர் உண்மையாக சீமானை பற்றி பேசி இருந்தால், அதை புலிகள் அவர்களின் அதிகாரபுர்வ வானொலியிலேயே வெளியிடுவார்கள்.

இதுதான் விடுதலை புலிகளின் மரபு. அனைவரும் இறந்தபின், தான் சொல்லும் பொய்யை மறுக்க யாரும் உயிரோடு இல்லை என்ற தைரியத்தில் இப்படி ஒரு கீழ்த்தரமான செயலில் ஈடுபடுவது நியாயமா சீமானே?
சீமானும் தமிழ்நாடும்:

சரி இப்போது தமிழ்நாட்டு அரசியலுக்கு வருவோம். சீமான் தமிழ்நாட்டில் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதாக கொந்தளிக்கிறார். ஆனால் அதை செய்யக்கூடிய மணற்கொள்ளையன் வைகுண்டராஜனும், கிராணைட் கொள்ளையன் பி.ஆர்.பியும் சீமானுக்கு நெருக்கமானவர்கள் என்று அவரின் தம்பிகள் எத்தனை பேருக்கு தெரியும்? சீமானுக்கு திருமணம் முடிந்த உடன் வைகுண்டராஜன் தான் தடபுடலாக கறி விருந்து கொடுத்தார். பதிலுக்கு வைகுண்டராஜன் மகன் திருமணத்தை சீமான் தான் முன்னின்று நடத்தி வைத்தார்.

பி.ஆர்.பியில் தொழிலாளர் பிரச்சனை வந்த போது பி.ஆர்.பிக்கு ஆதரவாக "அவரிடமே வாங்கித் தின்றுவிட்டு அவரையே குற்றவாளியாக்குவது நியாயமா?" என்று பேசியதும் சீமான் தான். இவர்தான் ஆட்சிக்கு வந்து இயற்கை வளங்களை காக்க வைகுண்டராஜனையும், பி.ஆர்,பியையும் கைது செய்ய போவதாக கூறுகிறார்.

அடுத்து கல்வியை அரசுடைமை ஆக்கப்போவதாக சீமான் கூறுகிறார். ஆனால் தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய கல்வி கொள்ளையனான சிறை சென்ற பாரிவேந்தர் பச்சமுத்து தான் 2016 தேர்தலுக்கு நாம் தமிழர் கட்சிக்கு 50 லட்சம் ருபாய் நன்கொடை கொடுத்துள்ளார். பச்சமுத்துவிடம் பணம் வாங்கி கொண்டே அவருக்கு எதிராக எப்படி நடவடிக்கை எடுப்பார்?

வைகுணடராஜன் சீமானுக்கு விருந்து வைத்ததை கம்யூனிஸ்டுகளின் இணையதளமான வினவில் கடுமையாக கண்டித்தார்கள். அதற்கான ஆதாரம் கீழே:

http://www.vinavu.com/2013/10/25/seeman-natarajan-vaikudarajan-tamil-desiam/

சீமானும் விவசாயமும்:

விவசாயத்தை காப்பாற்ற போவதாக சீமான் மேடைகளில் உணர்ச்சி வசப்பட்டு முழங்குகிறார். ஆனால் விவசாய நிலங்களை பிளாட்களாக மாற்ற நீதிமன்றம் தடை விதித்தது. இந்த தடைக்கு எதிராக 19.10.2016 அன்று சென்னை எலும்பூரில் ரியல் எஸ்டேட் தரகர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தினார் சீமான்.

இந்த போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தியவர்கள் ரியல் எஸ்டேட்டில் பழம் தின்று கொட்டை போட்ட பண முதலைகள். சீமான் ஏன் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார் என்றால்,"ரியல் எஸ்டேட் தரகர்கள் தான் கட்சிக்கு நிதி கொடுப்பார்கள், விவசாயிகள் பெரிதாக நிதி கொடுக்க மாட்டார்கள்".

இப்போது இயற்கை விவசாயம் பற்றி பேசும் சீமான் ஒருவேளை ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டு உர கம்பெனிகளிடம் காசு வாங்கி கொண்டு அவர்களுக்கு சாதகமாக நடக்க மாட்டாரா? ஏனெனில் அவர்கள் ரியல் எஸ்டேட் அதிபர்களை விட பல நூறு மடங்கு அதிகமாக உர கம்பெனிகள் பணம் தருவார்கள். சீமான் ரியல் எஸ்டேட் தரகர்களுடன் இணைந்து போரட்டம் நடத்தியதற்கான ஆதாரம் (இது சீமானின் பேஸ்புக் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது)

https://m.facebook.com/ArasiyalNaiyaandi/photos/a.618198474956133.1073741828.592382070871107/1019537271488916/?type=3&comment_id=1019598791482764&_rdr#1019598791482764

சீமானின் கொள்கைகள்:

*சீமானின் தேர்தல் அறிக்கையில் இருப்பவை அனைத்தும் ஏற்கனவே முகநூல் பகிர்வுகளாக வந்தவைதான். இதுவரை வந்த முகநூல் போஸ்ட்கள், வாட்ஸ்ஆப் பார்வேர்டு செய்திகள், எல்லாம் ஒன்று விடாமல் படிப்பவர் என்றால் இந்த அறிக்கையைப் படிக்க வேண்டியதில்லை.

*விவசாயத்தை அரசு வேலை ஆக்குவேன். ஆடு, மாடு மேய்தலும் அரசு வேலையாக ஆக்கப்படும் என்கிறார். இது எல்லாம் ஏற்கனவே கம்யூனிஸ ரஷ்யாவில் முயற்சி செய்து அந்த நாடே திவால் ஆகி ரஷ்யாவே உடைந்து சிதறிவிட்டது. இது நடைமுறை சாத்தியமற்றதது. அதனால் தான் பாமக ஜாதி கட்சி என்ற கெட்ட பெயர் இருந்தாலும் அதன் தேர்தல் அறிக்கையை பத்ரி சேஸாத்ரி போன்ற பொருளாதார அறிஞர்கள் பாராட்டினர்.

திமுக,அதிமுக போன்ற பெரிய கட்சிகள் கூட பாமகவின் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்தனர். ஏனெனில் பாமகவின் தேர்தல் அறிக்கை நடைமுறை சாத்தியமுடையது!

அடுத்து சீமானின் ஆதரவாளர்கள்:

சீமானை ஆதரிப்பவர்கள் உணர்ச்சிவசப்படக்கூடிய தமிழ் மீது பற்று உடைய ஈழப் போரால் விரக்தி அடைந்த, திராவிட கட்சிகளின் ஊழலால்வெறுப்படைந்த அப்பாவி இளைஞர்கள் தான். அவர்களிடம் பொறுமையாக சீமானை பற்றிய உண்மைகளை விளக்கி கூறினால் முதலில் அதிர்ச்சி அடைகிறார்கள்.

பிறகு சுதாரித்து அவர்கள் கேட்கும் முதல் கேள்வி "சரி தமிழர்களுக்காக போரடக்கூடிய வேறு நல்ல தலைவர்கள் யார்?" என்று கேட்கிறார்கள். அதாவது வேறு வழியில்லாமல் தான் அவர்கள் இவரை ஆதரிக்கிறார்கள். அவர்களிடம் ஒன்று கூற விரும்புகிறேன் "வேறு நல்ல தலைவர்கள் இல்லை என்பதற்காக, வெறும் பேச்சை மட்டும் பார்த்து . ஊழல்வாதிகளுக்கு பதிலாக துரோகிகளை தேர்ந்தெடுக்க கூடாது" கருணாநிதி ஆவேசமாக பேசி பேசி தான் நம்மை எமாற்றினார்.

புலிகளின் ரகசியத்தை ராஜபக்சேவிடம் கூறிய பிரபாகரனின் முன்னாள் தளபதி கருணாவிற்கும், புலிகளுக்கு எதிராக ஐ.நாவில் வாக்குமூலம் கொடுத்த சீமானுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

கையில் அதாகாரம் வரும் முன்பே சீமான் மீது கற்பழிப்பு, நிதி மோசடி, நம்பிக்கை துரோகம் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளது. ஒருவேளை பதவிக்கு வந்தால்?
தொண்டர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும், கட்சியின் கொள்கை எவ்வளவு உயர்ந்தது என்றாலும் தலைவர்கள் நல்லவர்கள் இல்லை என்றால் எல்லாம் வீண்தான்.

திமுக தொண்டர்கள் பலர் தமிழுக்காக மொழிப்போராட்டத்தில் உயிரையே கொடுத்தனர். ஆனால் கருணாநிதி அதன் தலைவர் ஆனதால் தான் திமுக இந்த நிலையை அடைந்துள்ளது.

கடைசியாக சீமானுக்கு சில கேள்விகள்:

1. சீமான் அவர்களே 'ஒரு விதவை இலங்கை அகதி பெண்ணை நான் திருமணம் செய்யவில்லை என்றால் என்னை செருப்பால் அடியுங்கள்' என்று முழங்கிவந்தீர்கள். ஆனால் திடீரென்று நீங்களே எதிர்பாராத விதமாக முன்னாள் அமைச்சரின் வீட்டிலிருந்து நல்ல வசதியான வரன் வந்ததும் அவரின் மகளை திருமணம் செய்து கொண்டீர்கள். இதுதான் ஈழ தமிழர்கள் மீது உங்களுக்கு உள்ளபாசமா?

2. தலைவர் பிரபாகரனை சிறையல் அடைக்க வேண்டும் என்று சொன்ன ஜெயலலிதாவுக்காக நீங்கள் பிரச்சாரம் செய்தது ஈழ தமிழர்களின் நலனுக்காகவா? இல்லை நடிகை விஜயலட்சுமி (ப்ரண்ட்ஸ் படத்தில் சூரியாவுக்கு ஜோடி, விஜய்யின் தங்கை) உங்கள் மீது கொடுத்த கற்பழிப்பு புகாரில் இருந்து தப்பிக்கவா?

3. சீமானே ஈழ தமிழர்களை பற்றி பேசுவது அவர்களின் நலனுக்கா? இல்லை உங்களின் நலனுக்கா? இதை ஏன் கேட்கிறேன் என்றால் 'நீங்கள் அரணையூரில் கட்டி காெண்டு இருக்கும் பங்களா வீடு, உங்களின் ஆடம்பர திருமணம், வெளிநாட்டு சுற்று பயணங்கள் ' எல்லாம் எப்படி சாத்தியமானது? நீங்கள் எடுத்த இரண்டு, மூன்று மொக்கை படங்களில் சம்பாரித்ததா? 'இதெல்லாம் ஈழ தமிழர்களிடம் இருந்து அவர்களுக்காக
போராடுவதாக கூறி ஏமாற்றி வசூல் செய்யப்பட்ட பணம் இல்லையென்று' தலைவர் மீது ஆணையிட்டு கூற முடியுமா உங்களால்?

4. நாம் தமி‌ழர் நண்பர்களுக்கு கற்பழிப்பு புகாரில் சிக்கியரை, ஈழ விதவை பெண்ணை திருமணம் செய்வேன் என்று வாக்கு கொடுத்து ஏமாற்றிவிட்டு பணத்துக்காக வேறு திருமணம் செய்தவரை, ஐ.நா விசாரணை குழுவில் “விடுதலைப் புலிகள்தான் தமிழர்களை
சுட்டு கொன்றனர்” என்று வாக்குமூலம் கொடுத்தவரை’ போய் கர்ம வீரர் காமராஜர் மற்றும் தலைவர் பிரபாகரனின் வாரிசாக நீங்கள் முன் வைத்தால், அதை அவர்களின் ஆன்மாவே மன்னிக்காது. சிறிது யோசியுங்கள்!

பகிரியில் (வாட்ஸ்-அப்'பில்) வந்தது...

- R Bala Kone

*படித்ததில் எனக்கு புறிந்தது மிகவும் ஆதாரத்துடன் விகடன் செய்தி புத்தகத்திற்கும் நண்பர் R.பாலாவிற்கும் நன்றி.*

இவன் :
கு.தமிழ்மணிவளவன்.
BA,LLB.
பெரியார் மற்றும் அம்பேத்கரிஸ்ட்,
விடுதலை  சிறுத்தைகள் கட்சி,
கடலூர் மேற்கு மாவட்டம்,
நல்லூர் வடக்கு ஒன்றியம்.

1 comment:

  1. இது மொத்தமும் பொய்களாலான கட்டுரை
    இதற்கு ஆதாரங்களுடன் தக்க பதில் கொடுக்கப்பட்டுள்ளது இங்கே: -

    https://unmaiyanaunmaitamilan.blogspot.com/

    https://unmaiyanaunmaitamilan.blogspot.com/

    ReplyDelete