Thursday, August 1, 2019

எதற்கெடுத்தாலும் அம்பேத்காரை பெரியாருக்கு எதிராக நிறுத்துவது

இந்த நவீன தலித்திய வாதிகள் நடந்துகொள்ளும் முறைகள் மிகவும் தரம் தாழ்ந்ததாக உள்ளது.

எதற்கெடுத்தாலும் அம்பேத்காரை பெரியாருக்கு எதிராக நிறுத்துவது இவர்களின் அன்றாட வாடிக்கை.

அதிலும் ஆரியத்திற்கு நேரெதிராக திராவிடம் சிலிர்த்தெழுந்து போரிடும் போது குறுக்கே புகுந்து திராவிடத்தை எதிர்ப்பது, அதாவது ஆரியத்தைப் பாதுகாப்பது தான் இவர்களின் தலையாய வேலையாக உள்ளது.

பெரியார் மக்களிடமே தான் இருந்தார் என்பதையும், மிக மிகக் கடுமையான எதிர்க்கேள்விகளை மிகக்கடுமையான விமர்சனங்களை நேருக்கு நேராக எதிர்கொண்டார் என்பதையும் அறியாதவர்களாகவே இருக்கிறார்கள் இந்த நவீன இனத்தூய்மைவாதிகள்.

அதே நேரம் அம்பேத்காருக்கு intellectual dilemma இருந்தது என்பதையும் அதன் காரணமாக சிலபல விஷயங்களில் அவர் நிலைப்பாடு காரணமாக இன்னும் பாதிப்புகள் நீங்க வில்லை என்பதையும் பெரியாரிஸ்டுகள் புரிந்து கொண்ட அளவுக்குக் கூட இவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதே உண்மை.

பெரியார் தன்னுடன் பயணிக்கவும் தனக்குப் பிறகு பயணிக்கவும் பெரும் கொள்கைத் தளபதிகள்/வீரர்கள் படையையே உருவாக்கி விட்டுத்தான் மறைந்தார். அவரின் எழுத்துக்களும் பேச்சுக்களும் பெரியாரிஸ்டுகளின் ஆயுதங்களாகவும், பெரியாரின் வாழ்வியல் போராட்ட குணத்தையும் தந்துள்ளது.

பெரியார் எல்லாவற்றிலும் மிக உறுதியான நிலைப்பாடு கொண்டிருந்தது அவரின் எழுத்துக்களில்  மிகத் தெளிவாகப் புரியும்.

ஆனால் எதைத்தான் படிப்பார்களோ இந்த எலைட் தலித் இனத்தூய்மைவாதிகள்? இவர்களின் உளறல்கள் அப்படியே ஆர்எஸ்எஸ் கொள்கையை வெளிப்படுத்தி அசிங்கமாகப் பல்லிளிக்கிறது.

ஆனால் இவர்கள் எல்லாமே குறுகிய கால களைகள். அழிவு நிச்சயம்!

குறிப்பு:

இதெல்லாம் தெரியுமா தலித்திஸ்டுகளே?

*பெரியார் மீது செருப்பு/ மலம் வீசப்பட்டது

*பெரியாரின் மனைவியை அனுப்ப முடியுமா என்று கேட்டது

*பெரியாரை "யாருக்குப் பிறந்தாய்?" என்று கேட்டது

No comments:

Post a Comment