Thursday, August 1, 2019

அறிவியல் ரீதியான ஆதாரத்தின் அடிப்படையிலான மருத்துவம் - ஷாலினி

டாக்டர். ஷாலினி
2019-08-01

ஆயுர்வேதா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி ஆகிய மருத்துவ முறைகளை ஒன்று கூட்டி AYUSH என்று பெயர் சூட்டுகிறார்கள். இவை எல்லாமே தனி தனி மருத்துவ கேட்பாடும், புரிதலும் சிகிச்சை முறைகளும் கொண்ட வெவ்வேறு துறைகள். உதாரணம்:

* ஆயூர்வேதாவில் வாதம், பித்தம், கபம் என்றே நோய் காரணிகளை சொல்வர்.

* ஹோமியோபதியில் இந்த விளக்கம் இல்லை.

* யுனானி முற்றிலுமாக வேறு புரிதல்களை கொண்டது.

ஆக, அடிப்படையில் வெவ்வேறான இவற்றை ஒரே கூடையில் குவித்து கொண்டு வந்து ஆயுஷ் என்று ஒரு பொது பெயரை வைப்பதில் என்ன லாஜிக் இருக்க முடியும்?

ஒன்றை தவிற...

இவை எல்லாவற்றிகும் ஒரே வில்லன் தான், அது தான் நவீன, அறிவியல் ரீதியான ஆதாரத்தின் அடிப்படையிலான மருத்துவம். Modern scientific Evidence Based Medicine. 

இப்படி நீட்டி முழக்கி முழுசாய் சொன்னால் யாருக்கும் புரிவதில்லை, ஆனால் அதையே அலோபதி, இங்கிலிஷ் வைதியம் என்றால் உடனே பொதுமக்கள் புரிந்துக்கொள்வார்கள்.

உண்மையில் இது இங்கிலிஷ் வைதியம் இல்லை. உலகின் எல்லா மூலை முடுக்குகளிலும் பயன்படும் மருத்துவ குறிப்புக்களை அராய்ந்து, நிரூபனமானவற்றை மட்டும் எடுத்து தொகுத்த மருத்துவகோர்வை தான் இந்த மருத்துவம்.

இதற்கு சொந்த நாடு, சொந்த மொழி, சொந்த கருத்தென்று எதுவுமே இல்லை. இது உலகம் முழுக்க உள்ள எல்லோருக்குமே பொதுவான ஒரு முறை. எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்து, தேருமா, தேறாத என்று பாரபட்சமின்றி உருவாக்கப்பட்ட ஒரு தொகுப்பு, அதை பயிற்றுவிக்கும் ஒரு கல்வி முறை.

ஆக, உண்மையிலே மருத்துவமுறைகளை பிரித்து பார்க்க வேண்டும் என்றால்

(1) நிரூவிக்கப்பட்டது,
(2) நிரூவிக்விக்க படாமல் வெறும் நம்பிக்கையில் பின்பற்றுவது

என்று மட்டுமே இவற்றை பிரிக்க முடியும்.

இதில் எதை நீங்கள் நம்புவீர்கள் என்பது உங்கள் அறிவு திறனுக்கான ஒரு சோதனை தான்.... கண்மூடித்தனமாக, ஆதாரமில்லாததை கூட நீங்கள் நம்புவீர்கள் என்றால் go ahead!

இல்லை, நோய் நாடி, அதன் முதல் நாடி, அப்புறம் அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்ப செயல்படுவீர் என்றாலும் ஓகே தான்....

இயற்கைக்கு இது பற்றி கவலை இல்லை. அதற்கு ஒரே ஒரு விதி தான்: பிழைக்க தெரிந்ததை பிழைக்க விடும். மற்றதை ஏறக்கட்டி இடத்தை காலி செய்யும்...

Evidence Based versus Evidenceless : the choice is now all yours people. There is no Government now to safeguard your health. Our man has let Nature run wild!

இதில் பிழைச்சிக்கிறவன்/ள் பிஸ்தா!!

No comments:

Post a Comment