Sunday, April 3, 2016

நாம் தமிழர் கடசியின் செயல்பாட்டு வரைவு

Alegesa Pandian
via Facebook
2016-Apr-04

நாம் தமிழர் கட்சியில் இருக்கும் நண்பர்கள், சீமான் மீதான என் விமர்சணங்களை வெளிப்படையாக முன்வைக்க சொன்னார்கள்.
கேட்டதால் சொல்கிறேன். பலரும் ஏற்கனவே சுட்டிக்காட்டிய விசயங்கள் தான்.

செயலபாட்டு வரைவில் பல இடங்கள் முதிர்ச்சியின்மையின் வெளிப்பாடுகள். அதெயெல்லாம் புதிய கட்சி என்பதால் பொருட்படுத்தவில்லை.  முக்கியமாக நான் உணரும் முரன்கள்.

1) அப்பட்டமான இனவெறி. சில சமயங்களில் நேரடியாகவும், பலமுறை தம்பிகளுக்கு நாய் விசில் வழியாக. இணையம் முழுக்க தரவுகள் இருக்கின்றன. இல்லையென்று மறுப்பதில் அர்த்தம் இல்லை.

2) திடீரென்று கல்வி, மருத்துவம் பற்றி பேசும் சீமான், தேர்தலுக்கு முன்பாக எத்தனை முறை இதற்க்காவெல்லாம் போராடியிருக்கிறார்? ஈழத்துக்காகவும், எழுவர் தூக்குதண்டனைக்கு எதிராகவும் குரல் கொடுத்த சீமான், கல்விக்காகவும், சுகாதாரத்திற்காகவும் குரல் கொடுத்த வெகுஜன போராட்டங்கள் ஏதும் உண்டா?

3) சர்வாதிகாரம், அன்பான தன்னலமற்ற இன்னும் வேறு எதாவ்து அடைமொழிகள் வைத்துக் கொண்டாலும் சரி. மக்களுக்கு பதிலாக நானே எல்லாம் சிந்திப்ப்பேன், நானே அணைத்தும் என்பதெல்லாம் சீமானுக்கு சரியாக இருக்கலாம். எனக்கு உடன்பாடில்லை. இந்திய அரசியல் சட்டத்தில் இவரது சர்வாதிகாரத்திற்கெல்லாம் சட்டபடி இடமில்லை. செயலலிதா, விசயகாந்து, கருனாநிதி எல்லாரும் சர்வாதிகாரிகள்  தான் எனும்போது, சீமானுக்கு அந்த உரிமை இல்லையா என்றால். எனது பதில் இதுதான். சீமானும் செயலலிதாவின் சர்வதிகாரப்பாதையை விரும்பினால், செயலலிதாவைப் போலவே மதிப்பீடு செய்யப்படுவார்.

4) சீமானுக்கு மேற்கத்திய வசதிகள், வாழ்க்கை தரம் வேண்டும், சட்டம் ஒழுங்கு வேண்டும். ஆனால் சிவில் உரிமைகள் சார்ந்த மேற்கின் விழுமியங்க்கள் தேவையில்லை. செயல்பாட்டு வரைவில் தனி மனித சிவில் உரிமைகள் பற்றி பெரிதாக எதுவுமில்லை.

5) ஈழ ஆதரவு, அவர்களது சுய நிர்ணய உரிமை என பலவற்றில் தமிழ்மக்கள் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தாலும், தொடர்ந்து ஈழ அரசியலின் பினைக்கைதி போல் தமிழ் அரசியலை அனுகுகிறார்.

6) எல்லாமே, சீமான் என்றால் அடுத்தவருக்கு அங்கே என்ன வேலை? காட்டுக்கூச்சலுக்கு மட்டும் ஆள் எடுக்கிறார்கள் என்றே நினைக்க முடிகிறது.
இங்கே வாதம் செய்ய வரவில்லை. இதெல்லாம் என் அபிப்ராயங்கள்.

No comments:

Post a Comment