Wednesday, March 8, 2017

மகளிர் நாள் - இந்து மத விரோதிகளை ஆதரிப்போம்

தோழர் கணியூர் வரதராஜ் கிருஷ்ணசாமி
via facebook
2017-Mar-08


கணவன் இறந்தால் மனைவி உடன்கட்டை ஏறும் சதி வழக்கை 
சட்ட விரோதம் என்று அறிவிக்கச் செய்தவர் 
- ராசாராம் மோகன்ராய் 
- அவருக்குக் கிடைத்த பட்டம்... இந்து மத விரோதி.


பெண்களுக்கான முதல் பள்ளியைத் தொடங்கியவர் 
- சோதிராவ் பூலே
- அவருக்குக் கிடைத்த பட்டம்.. இந்து மத விரோதி.


பெண் குழந்தைத் திருமணம் என்கிற பூனைக்கு மணியைக் கட்டியவர் 
- மலபாரி
- அவருக்குக் கிடைத்த பட்டம்... இந்து மத விரோதி.


பெண்களுக்குச் சொத்துரிமை, மணமுறிவு (விவாகரத்து),
மறுமணம் என்கிற *சட்ட உரிமைகளை*ப் பெற்றுத் தந்தவர் 
- அம்பேத்கர்
- அவருக்குக் கிடைத்த பட்டம்... இந்து மத விரோதி.


கிட்டத்திட்ட மேலே சொன்ன அத்தனை விசயத்தையும்
சாஸ்திர விரோதம் என்று முட்டுக் கொடுத்தவர்
- பெரியவா சங்கராச்சாரியார்
- இவர் இந்து மதக் காவலர்.


சாஸ்திரமே மக்கள் விரோதம் என்று சாட்டையைச் சுழற்றினார் - பெரியார்
- அவர் இந்து மத விரோதியோ விரோதி....!

*இந்து மத விரோதிகளை ஆதரிப்போம்..!*
*பெண்மையைப் போற்றுவோம்..!*

மகளிர் நாள்..!

No comments:

Post a Comment