Friday, February 15, 2019

ராணுவத்தின் மீது தாக்குதல்

Umamaheshvaran Panneerselvam
2019-02-16

*Case 1:*

டீமானட்டைசேஷன் மூலம் கருப்பு பணம் ஒழிந்தது என்று ரீல் சுத்திய பாஜக கூடவே எக்ஸ்ட்ரா போனசாக இன்னொரு விஷயத்தையும் சொன்னது.

"தீவிரவாதிகளுக்கு போகும் பணம் எல்லாம் இதனால் ஒழிந்துவிட்டது" - என்று.

அப்படி என்றால் இப்போதைய தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எங்கிருந்து பணம் வந்தது?

*Case 2:*

ஒருவேளை பணம் வெளியிலிருந்து தான் வந்தது என்றால் அதை sense செய்யத் தவறியது Intelligence ன் தோல்வியா?..

Intelligence தோல்வியடையவில்லை என்றால் selective amnesia அல்லது nepotism ஆக பணம் பரிமாற்றம் அடையட்டும், தாக்குதல் நடக்கட்டும் victim game play செய்து நேரு மீது பழி போடலாம் என்று காத்திருந்தார்களா?

அப்படியெனில் "எல்லையில் ராணுவ வீரர்கள்... " - என்று தினுசாக பேசி அவர்களை decoys ஆக பயன்படுத்திக்கொண்டதா இந்த அரசு?

*Case 3:*

கவர்னர் ஆட்சி நடந்துகொண்டிருக்கையில் முந்தைய அரசை நோக்கி கேள்வி கேட்கிறார்கள் சங்கிகள்?

அப்படியெனில் கவர்னர் ஒரு செல்லாக்காசு, அதுவும் காஷ்மீர் போன்ற high alert மாநிலத்தில் கவர்னர் ஆட்சியே இருந்தாலும்கூட "முந்தைய அரசு தான் இந்த தாக்குதலுக்கு ஜவாப்தாரி" - எனில் அங்கே Kashmir is an independent state despite a Governor being there என்ற clause பூர்த்தியாகிறதா?

எப்படி பார்த்தாலும் முந்தைய ஆட்சி இந்த சங்கிகளின் கூட்டணி ஆட்சிதான்.

*Case 4:*

இறந்த ராணுவ வீரர்கள் நம்மவர்கள். நம் சகோதரர்கள். தமிழகத்திலிருந்து 2 தமிழர்கள் பலியாகியிருக்கிறார்கள். யாருடை அலட்சியத்தால் இந்த உயிர்பலி ?

முதலில் இறந்த வீரர்களில் எத்தனைப் பேர் உயர்சாதியினர்?

வெளிப்படையாக கேட்பதானால் எத்தனைப் பேர் பார்ப்பனர்கள்?

(உடனே ராணுவ வீரன் என்றால் இந்தியன், அதில் சாதி ஆராய்ச்சி செய்யலாமா என்று தூக்கிக் கொண்டு வரவேண்டாம். சீக் ரெஜிமெண்ட், கோர்க்கா ரெஜிமெண்ட், மதராஸ் ரெஜிமெண்ட் என்று demarcations இருந்தது எந்த அடிப்படையில்? Geological  பிரிவினை மட்டும் தானா?)

சரி அபத்தமான கேள்வியாகவே இருக்கட்டும். உயிர் தியாகம் செய்ததில் பார்ப்பனர்களே இல்லை. ஆனால் வட இந்திய குரூர மீடியா பார்ப்பனர்கள் arm chair critic ஆக அமர்ந்துகொண்டு India wants revenge, India wants war, India needs to kill எனறு பேசுவது எவ்வளவு பெரிய அவல நகைச்சுவை?

இன்னொரு சண்டை வந்தால் எத்தனை பார்ப்பனர்கள் அங்கே போய் சாக தயாராக இருக்கிறார்கள்? ஒருவேளை ராணுவத்தில் பார்ப்பனர்கள் அதிகமாக இருந்தால் "போர் வேண்டும் மீண்டும்... ரிவஞ்ச் வேண்டும்" என்றெல்லாம் வட இந்திய பார்ப்பன லாபி பேசுமா?

*Case 5:*

ரிவஞ்ச் வேண்டும் ... சரி... யார் மீது? அதுவும் எந்த நேரத்தில்?

இந்திய பொருளாதாரம் 50 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியில் இருக்கிறது. பெரும் பணக்கார நிறுவனங்களே திவால் நோட்டீஸ் கொடுக்கும் சூழல் தான் இருக்கிறது. வெளிப்படையாக சொல்வதானால் போலியோ சொட்டு மருந்துகூட வாங்க வக்கு இல்லாமல், காசு இல்லாமல் தான் இருக்கிறது இந்த அரசு. கடன் சுமை ஏறியிருக்கிறது. வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்திருக்கிறது.

இந்த சமயத்தில் போர் என்றால் இந்த Burden னை தாங்கப்போவது யார்?

எத்தனை கோடி ஏழைகள் வயிற்றில் மீண்டும் அடி விழும்?

*Case 6:*

இல்லை. இதையெல்லாம் தாண்டி நான் போர்த்தொடுத்தே தீருவேன் என்றால்.

China- Pakistan tie up, Asia Pacific வட்டாரத்தில் அச்சமூட்டும் வகையில் military, economical, strategical, tourism development என இத்யாதி இத்யாதி tie up ல் இருக்கிறது.

டோக்லம் நியாபகத்தில் இருக்கிறதா? அங்கே வந்து சீன பட்டாலியன் நிற்கிறது. ஆனால் அவர்கள் மிரட்டக் கூட நம்மால் முடியவில்லை. சீன பயணம் மேற்கொண்ட பிரதமரோ மறந்தும் அதை குறித்து பேச துணியவில்லை.

அப்படி இருக்கையில் மொத்தமாக all out war with Pak என்பது all out war with China போலத்தான்.

சீனாவுக்கெதிரான போரைத் தாங்க economy and militia strength நம்மிடம் உள்ளதா?

போர் என்று வந்தால் எவ்வளவு economic burden, மொத்தமாக இங்கே cash liquidation எப்படி முடக்கப்படும், எப்படி சேமிப்பை அரசு இறுக்கி வைத்துக்கொள்ளும் என்று புரியாத Generation எல்லாம் ஏதோ age of empires, call of duty, PUBG போல் போர் தொடுக்கலாம், அடித்து தூக்கலாம் என்று பேசுவது அறியாமை மட்டுமல்ல, நம் ஊரின் intellectual மலட்டுத்தன்மையின் வெளிப்பாடு.

*Case 7:*

எல்லாவற்றுக்குமே முந்தைய அரசு தான் காரணம் என்றால், 1999ல் தீவிரவாத தாக்குதல், காந்தஹார் விமான கடத்தல் தீவிரவாதிகளை எல்லாம் ரிலீஸ் செய்தது பாஜக. செய்தவர் பாஜகவின் நல்ல முகம் என்று காட்டப்படும் வாஜ்பாய்.

அப்பொழுது தீவிரவாதிகளை வளரவிட்டது, வளர்த்துவிட்டது பாஜக தான் என்று எடுத்துக்கொள்ளலாமா?

அதே தீவிரவாதிகள் தான் இப்பொழுதும் தாக்குதல் நடத்துகிறார்கள் என்றால், அவர்களுக்கு உதவுவது யார்?

All is Nehru's fault என்ற கோட்பாட்டிப்படி, All is Vajpaye's fault, All is our fault என்று ஒப்புக்கொள்ள பாஜக தயங்குவது ஏன்?

*Case 8:*

தேர்தலைத் தள்ளிப்போட இன்னும் எத்தனைத் தாக்குதல்களை "எதேச்சையாக" நடக்க அனுமதிக்கப்போகிறீர்கள் மோடி?.

உங்கள் Party gains க்காக இன்னும் எத்தனை எத்தனை ஏழை இந்திய சகோதிரர்கள் , உண்மையான ஏழைத் தாய் மகன்கள் சாக வேண்டும்?

https://m.facebook.com/story.php?story_fbid=10216117542324746&id=1636056806

No comments:

Post a Comment