Wednesday, February 20, 2019

சிவாஜியின் முஸ்லீம் தளபதிகள்

ராஜா ஜி
2019-02-20

நேற்று சத்ரபதி வீரசிவாஜியின் பிறந்தநாள், அவரை முஸ்லிம்களுக்கு எதிரானவராக இந்துத்துவ அமைப்புகளால் காட்டப்படுகிறார் உண்மையில் அவரின் வரலாறு முழுமையாக சொல்லப்படவில்லை என்பதே உண்மை. அன்று ஔரங்கசீப்பை எதிர்த்த வரலாறு மட்டுமே சொல்லப்படுகிறது -

வீரசிவாஜியின் மெய்க்காப்பாளர் பெயர் மாதாரி திகடர் என்ற முஸ்லிம்தான் -(எத்தனை முறை இந்த முஸ்லிம் இந்து சிவாஜியின் உயிரை காப்பாற்றியிருப்பார்)

மொகலாய மன்னர்களோடு பேச்சுவார்த்தை நடத்திய தூதரின் பெயர் ஹைதர்- (விலைபோகாத நம்பிக்கையான முஸ்லிம் தூதர் )

சிவாஜியின் பீரங்கிப்படை தளபதியின் பெயர் இப்ராகிம்கான்.(பீஜப்பூர் கோல்கொண்டா அரசுகளை பிடித்தது இந்த முஸ்லிம் தளபதியோடுதான்)

கப்பற்படை தளபதியின் பெயர் தவுலத்கான்.
(கொங்கன கடற்பகுதியில் மொகலாயர்களை எதிர்த்து வெற்றிபெற்றது இந்த முஸ்லிம் தளபதியோடுதான்)

கூமுட்டைகள் வரலாற்றை எல்லாம்  மறைக்குது.

1630 இல் பிறந்து 1680- இல் மறைந்தார். தன்னுடைய 16-ஆம் வயதிலேயே மன்னரானார் என்று சொல்வதெல்லாம் பொய்.
1674 இல் தான் மன்னராக முடிசூட்ட அனுமதிக்கப்பட்டார்.
சூத்திரன் படைக்கு தலைமை தாங்கலாம் அவன் மன்னன் ஆகக் கூடாது என்ற வர்ணாசிரமம்தான் அவரை தடுத்தது.
சிவாஜிக்கு நேர்ந்த கதையை நம் பேரறிஞர்தான் தன்னுடைய சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் மூலம் வெளிக் கொணர்ந்தார்.
அதுவரை அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி யாருக்குமே தெரியவில்லை.

வர்ணாசிரமத்தை வைத்து பிழைப்பு நடத்தும் பார்ப்பன கூட்டம் இன்று சிவாஜியை முன்னிறுத்துகின்றன.
வரலாறுகள் கொடுமையானவை.
வரலாறு மறந்தவன் திக்கற்று நிற்பான். திசை மாறிப்போவான்.
புளுகர்களிடம் கவனமாக நிற்போம்.

"சமீபத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்திய சமூகநீதி பாதுகாப்பு மாநாட்டில் சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் பொம்மலாட்டமாக காண்பிக்கப்பட்டது, இது தொடரவேண்டும்.
மக்களுக்கு வரலாறு சொல்லப்பட வேண்டும்"

- ராஜா ஜி

https://www.facebook.com/100012908281942/posts/595452184228386/

No comments:

Post a Comment