Wednesday, March 21, 2018

யார்ரா இந்த வி.எச்சி.பீ ?

தாத்தா:
யார்ரா இந்த வி.எச்சி.பீ ?

பேரன்:
தாத்தா அது வி.ஹச்.பி. சாமியார்கள் கூட்டம்.

தாத்தா : சாமியார்னா...
ராமகோபாலன் மாதிரியா? நித்தியானந்தா மாதிரியா?

பேரன் : ரெண்டு மாதிரியும்தான். ஆனா, மெயின் தல அவாதான்

தாத்தா: எங்கருந்து வர்றாய்ங்க?

பேரன் : வடக்கருந்து

தாத்தா : இப்ப எதுக்கு அங்கிட்டுருந்து இங்கிட்டு ரதம் விடுறாய்ங்க...
வெள்ளாம நல்லா வெளையணும்னா?

பேரன் : ஊஹூம்

தாத்தா : காவிரிப் பிரச்சனைய தீக்கணும்னா?

பேரன் : ஊஹூம்

தாத்தா : நம்மூட்டு புள்ளைகளும் டாக்டராகணும்னா, அந்த நீட்டோ நொட்டோ... அதத் தூக்கணும்னா?

பேரன் : ஊஹூம்

தாத்தா : பெட்ரோல், டீஸல், பஸ் கட்டணத்த எறக்கணும்னா?

பேரன் : ஊஹூம்

தாத்தா : மனுச மக்க நிம்மதியா பொங்கித் திங்க வெலவாசிய கொறைக்கணும்னா?

பேரன் : ஊஹூம்

தாத்தா : வெளிய போன பொம்பளப் புள்ளைக பத்திரமா வீடுவந்து சேரணும்னா?

பேரன் : ஊஹூம்

தாத்தா : கெளரவ கொல, மயிரு கொலன்னு ஆடுறாய்ங்களே அத தடுக்கவா?

பேரன் : ஊஹூம்

தாத்தா : அப்புறம் என்னா வெங்காயத்துக்குடா வர்றாய்ங்க?

பேரன் : ராம ராஜ்யம் அமைக்கவாம்

தாத்தா : எந்த ராமேன், டிகிரி முடிச்சுட்டு சுக்குக் காபி விக்கிறானே அவனுக்கா?

பேரன் : ஊஹூம்

தாத்தா : இஞ்சீனியருக்கு படிச்சுட்டு வேல இல்லாம, பேங்க் லோன அடைக்க லோல் படுறானே அவனுக்கா?

பேரன் : ஊஹூம்

தாத்தா : கம்பெனிய ஊத்தி மூடி, அவனும் பொழைக்க முடியாம, வேலைக்கு இருந்தவனையும் வீட்டுக்கு அனுப்பிட்டு விட்டத்தப் பாத்துக்கு ஒக்காந்திருக்கானே, சிறு தொழில் நடத்தும் ராமரு, அவனுக்கா?

பேரன் : ஊஹூம்

தாத்தா : ஆட்டோ ஓட்டுவமா, சித்தாளு வேலைக்கு போவமா, பொட்டிக் கட வச்சுப் பொழப்பமானு கொழப்பத்துலயே மெண்டல் ஆயிட்டானே ஐடி கம்பனில வேல பாத்த ராமரு அவனுக்கா?

பேரன் : ஊஹூம்

தாத்தா : அப்புறம் எந்த வெண்ணைக்குடா ராஜ்யம் அமைக்கப் போறாய்ங்க?
ஆமா...
வடக்கேயிருந்து, இவிய்ங்கள உள்ள கூப்ட்டுக்கு வர்றது ஆரு?

பேரன் : பிஜேபி, ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி, எடப்பாடி, ஓபிஎஸ், அல்ர, சில்ர...
யோவ் ச்சிய்யா, நாஞ் சொல்லிக்கே இருக்கே இய்யி ஒம்பாட்டுக்கு போய்க்கேருக்க?

தாத்தா : இர்றா, தைக்க குடுத்த செருப்ப வாங்கிக்கு வாரேன்...

பேரன் : தைச்சிருப்பாங்களா?

தாத்தா : தைக்குறதுக்குள்ள வாங்கணும்தான் வெரசா போறேன்..

😆😆😆😆😆😄😆😄

No comments:

Post a Comment