Saturday, March 24, 2018

வல்லபை கணபதி

#வல்லபை_கணபதி

யார் இந்த வல்லபை கணபதி? புராண கதை என்ன கூறுகின்றது?
பார்ப்போம்.......

விநாயகருக்கு சித்தி புத்தி, வல்லபை, விஷ்ணு மூர்த்தியின் குமாரியாகிய மோதை, சுமகை, சுந்தரி, மனோரமை, மங்கலை, கேசனி, காந்தை, சாரு ஹாசை, சுமத்திமை, நந்தினி, காமதை முதலியவரை மணந்தவர் என்று எழுதி வைத்திருக்கின்றான். விநாயருக்கு ஒரு பெண்டாட்டி, இரண்டு பெண்டாட்டி இல்லை. பதினாறு பெண்டாட்டிகளை கணக்குப் போட்டிருக்கின்றான்.

வல்லபை என்பது விநாயகருடைய மனைவி. முருகன் விநாயகருடைய தம்பி. முருகன் சூரபத்மனோடு சண்டைக்குப் போகின்றார். சூரபத்மன் அசுரன். அசுரன் என்றால் ரொம்ப பலமானவன். அவனுக்கு வீரர்கள் அதிகம். ஆனால் சுப்பிரமணியனுக்கு படை வீரர்கள் இல்லை. தனக்குப் படை வீரர்கள் வேண்டும் என்று தம்பி சுப்பிரமணியம் அண்ணன் விநாயகனிடம் கேட்கின்றார்.

உடனே கணேசர் என்ன பண்ணுகிறார்? உனக்கு இராணுவம் வேண்டும் சைனியம் வேண்டும். அவ்வளவு தானே என்று சொல்லி, தனது மனைவி வல்லபை மூலம் ஆயிரக்கணக்கான வீரர்களை உற்பத்தி பண்ணி அனுப்புகிறார். சைனியம் பெண்குறியில் இருந்து வந்து கொண்டேயிருக்கிறதாம். தொழிற்சாலையில் அச்சடித்து வெளியே வந்து கொட்டுகிற மாதிரியே இருக்கிறது. ஒரு கட்டத்தில் போதும், போதும் என்று சுப்பிரமணியரே நினைத்தார். உடனே சைனியத்தை நிறுத்துவதற்காக விநாயகர் என்ன செய்தார்? துதிக்கையை வைத்து பெண்குறியை அடைத்துவிட்டாராம். இதற்கு மேல் சொன்னால் உண்மையிலேயே ரொம்ப ஆபாசமான விசயம் அது.
நான் இதை விட ரொம்ப நாசூக்காக சொல்ல முடியாது.

இதெல்லாம் கற்பனை என்று நினைக்காதீர்கள். சிதம்பரம் ரொம்ப பக்கத்திலேயே இருக்கிறது போய் பார்க்கலாம். இந்த சிலைகூட இன்றும் சிதம்பரத்தில் உண்டு. சீலையால் மூடி வைத்துள்ளார்கள்.

தமிழர்களே..! கண்டிப்பாக இந்த ஆரிய இந்துமத அசிங்கங்கள் எமக்கு தேவைதானா?

#பகிருங்கள்

https://m.facebook.com/groups/631407607062388?view=permalink&id=788724084664072

No comments:

Post a Comment