Wednesday, March 21, 2018

உங்களது பூணூலை நீங்களே அறுத்து எறியுங்கள

Keetru Nandhan
2018-03-21
Via facebook

தமிழ்நாட்டில் யூதர்களைப் போல் வாழ்கிறோம் என்று அசோகமித்திரன் போலவோ, மரியாதை இல்லை என்று எஸ்.வி.சேகர் போலவோ பார்ப்பனர்கள் புலம்ப வேண்டிய அவசியம் இல்லை.

சமத்துவத்தை மறுக்கும் உங்களது பூணூலை நீங்களே அறுத்து எறியுங்கள்.

சாதி இழிவை எங்கள் மீது சுமத்தும் கீதை, மநு நீதியை நீங்களே கொளுத்துங்கள்.

கோவில் கருவறை முதல் உங்கள் வீடு வரை தலித் மக்களை அனுமதித்து, இடைநிலை சாதிக்கு வழிகாட்டுங்கள்.

தகுதி, திறமை என பசப்பு வார்த்தைகள் பேசுவதை விடுத்து, விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத்திற்கு எங்களுடன் சேர்ந்து குரல் கொடுங்கள்.

செத்துப் போன சமஸ்கிருதத்திற்கு முட்டுக் கொடுப்பதை விட்டு, தமிழ் ஆட்சி மொழியாகவும், பயிற்று மொழியாகவும், வழக்காடு மொழியாகவும், வழிபாட்டு மொழியாகவும் ஆவதற்கு வழி விடுங்கள்.

***

இன்று நடப்பது எல்லாம் எதிர்வினைதான். வினை புரிந்தது யாரென்று உங்களுக்கே தெரியும்.

உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்து கொண்டு பாதுகாப்பு கேட்பது மடத்தனம்! கீழிறங்கி வாருங்கள்! இல்லையேல் அடுத்த தலைமுறையினர் ஆணிவேரை சாய்ப்பதற்கும் தயங்க மாட்டார்கள்!!

No comments:

Post a Comment