Sunday, December 11, 2016

அதிமுக - காக்கா பிரியாணி துன்னா

Joe Milton
Via Facebook
2016-Dec-11

அம்மையாரின் மறைவுக்கு பின்னர் அதிமுக தலைவர்களின் நடவடிக்கைகள் குறித்து நம்ம மக்கள் புதுசா அதிர்ச்சி காட்டுறது தான் எனக்கு அதிர்ச்சியா இருக்கு

முதல்வர் நலமாக இருக்கிறாரென்றால் அதை மக்கள் அறிந்துகொள்ள ஒரு புகைப்படமோ ஒலித்துண்டோ வெளியிடலாமே என கலைஞர் சொன்னபோது வானத்துக்கும் பூமிக்கும் குதித்த மாலன் போன்றவர்கள் இப்போது வெட்கமேயில்லாமல் அதையே சொல்கிறார்கள்

ராவணன் என்பவர் சசிகலாவின் சித்தப்பாவின் மருமகனாம் . அத்தனை அடுக்குகள் தாண்டிய உறவு அதிமுகவின் பவர் ஹவுசாக இருக்க முடியுமென்றால் ஜெயலலிதா சசிகலா இருவரில் யார் யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தார்கள் என எப்படி சொல்ல முடியும் ?

ஜெயலலிதாவை அடுத்து இப்போது அமைச்சர்கள் சசிகலா காலில் விழ ஆரம்பித்தது குறித்து பலர் அதிர்ச்சியாகிறார்கள் .. எந்த செயல்பாடுமின்றி எந்த அறிவு மூலதனமின்றி ஒருவரிடம் எவ்வளவு குனிகிறோமோ அவ்வளவு சம்பாதிக்கலாம் என இருந்தவர்கள் அடுத்து யார் காலில் விழுந்து அதை தக்க வைக்கலாம் என நினைப்பதில் அதிர்ச்சியாக ஒன்றுமில்லை.

காக்கா பிரியாணி துன்னா காக்கா குரல் வராம பின்ன உன்னிகிருஷ்ணன் குரலா வரும் ? ஓட்டு போட்டீங்கள்ல ..

No comments:

Post a Comment