Wednesday, December 21, 2016

இடஒதுக்கீடு

V. Tamizhvanan
Via Facebook
2016-Dec-21

ஷர்மிலா: ஏன் SC/ST க்கு மட்டும் இட ஒதுக்கீடு தறணும் ?? ஜாதி பாத்து ஏன் சலுகை தறீங்க, OC லயும் ஏழை இருக்காங்க.

அருள்மொழி: ம் . . . சரி டி நீ என்ன community ??

ஷர்மிலா: BC டி

அருள்மோழி: உங்க அப்பா கிட்ட ஒரு SC/ST பய்யன லவ் பன்றேன் னு சொன்னா என்ன நடக்கும், ஒரு BC பய்யன லவ் பன்றேன் னு சொன்னா என்ன நடக்கும் ??

ஷர்மிலா: லவ் னா வீட்ல ரொம்ப கஷ்டம் டி. BC பய்யனா இருந்தா எப்டியாவது சாமாளிச்சுட்லாம். SC/ST பய்யன லவ் பன்றேன்னு சொன்னா கொன்னே போட்ருவாங்க.

அருள்மொழி: ஆக நம்ம சமூகத்ல ஒருத்தரோட பொருளாதார அந்தஸ்த்த விட அதிகமா மதிக்றது இந்த பாழா போன ஜாதிய தான் டி. அப்டி இருக்கப்ப . . . இங்க யார ஒதுக்குறாங்களோ, யார பாத்தாலே ஒதுங்குறாங்களோ, யார சேத்துக்க மாட்றாங்களோ அவங்களுக்கு தான் டி முதல் முக்கியத்துவம் தரணும்.

ஷர்மிலா: OC லயும் ஏழைங்க இருக்காங்க டி.

அருள்மொழி: எங்க டி ?? ஆட்டோ ஓட்றவங்கல்ல யாரு ?? பஸ் ட்ரைவர்ல யாரு ?? மூட்ட தூக்றவங்கள்ல யாரு ?? துப்புறவு தொழில் செய்றவங்கள்ல யாரு ?? பிச்சை எடுக்றவங்கள்ல யாரு ?? அவங்கள்ல ஏழைங்க இருக்காங்கன்னு நாம தான் ஷங்கர் படங்கள பாத்து அப்டி நெனச்சிட்ருக்கோம்.

ஷர்மிலா: SC/ST க்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தா நாங்க லாம் எங்க டி போறது ??

அருள்மொழி: இட-ஒதுக்கீடு SC/ST க்கு மட்டுமில்ல டி.  STக்கு 5 %, SCக்கு 10 %, OBC க்கு 43 %. மிச்சமுள்ள 41 % யாருக்கு போகுது ??. பார்ப்பனர்களின் மக்கள் தொகையே 3 % தான். ஆனா, அரசு பணிகள்ல, அரசியல்ல, ஐ.டி கம்பெனிகள்ல உயர் பதவில 70 %க்கும் மேல அவங்க தான் இருக்காங்க. இந்த இட-ஒதுக்கீடே சரியானது இல்லடி.  உன்ன மாதிரி BC ஆளுங்க கோவப்பட வேண்டியது SC/ST மேல இல்ல. அந்த 41% அணுபவிக்ற திருட்டு கும்பல் மேல தான்.

ஷர்மிலா: SC/ST லாம் முன்னேறிட்டாங்க டி. IAS, IPS, ஜட்ஜ்னு முன்னேறிட்டாங்க.

அருள்மொழி: எத்தன பேரு டி ?? 2% IAS/IPS அபிசர்கள் தான் SC/ST, 5% ஜட்ஜ்ங்க தான் SC/ST, ரயில்வேலயும் அடிமட்ட வேலைகள தான் அவங்க செய்றாங்க. சும்மா நம்ம ஆதங்கத்த நாம இப்டி சொல்லி தீர்த்துக்றோம் டி.

ஷர்மிலா: ஜாதி பாத்து முக்கியத்துவம் தறது சரியா டி ??

அருள்மொழி: ஜாதிய பாத்து லவ்வ ஏத்துக்ற சமூகத்ல, ஜாதிய பாத்து கல்யானம் பன்ற சமூகத்ல, ஜாதிய பாத்து பழகுற சமூகத்ல . . . . அதனால கொடுமைங்க அதிகம் அணுபவிக்றவங்கள்க்கு தர வேண்டிய சமூக நீதி தான் இந்த "இட-ஒதுக்கீடு" டி.

தருமபுரில இளவரசன கொள பன்னாங்க. இளவரசன் குடும்பம், திவ்யா குடும்பத்த விட பணபலமுள்ள குடும்பம். இருந்தும் ஏன் இளவரசனுக்கு இந்த கதி ?? அவனோட ஜாதி தான் அங்க ப்ரச்சன. சமூகத்ல ஜாதிகளால எப்பவுமே ப்ரச்சனைய சந்திக்றவங்களுக்கு முக்கியத்துவம் தரது தான் டி நீதி.

ஷர்மிலா: ம்ம்ம் . . .

(அதிகம் பகிர்க)

No comments:

Post a Comment