Tuesday, June 16, 2015

பார்ப்பனர்களும், அடிமை டவுசர்களும்: சில கேள்விகள், பதில்கள்

பார்ப்பனர்களும் அவர்களின் அடிமை டவுசர்களும் சில கேள்விகளை சுய மரியாதை தோழர்களிடம் கேட்டிருந்தார்கள். அவர்கள் கேட்ட கேள்விக்கு பங்காளி "மாணிக் வீரமணியின்" பகுத்தறிந்த பதில்கள்:
--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி 1:
--------------------------------------------------------------------------------------------------------------------------
ஜாதி பேதம் பார்க்கின்றனர் என்று பிராமணனையே குறி வைக்கிறீர்களே, தமிழகத்தில் பிராமணனைத்தவிர வேறு எந்த ஜாதியினரும், வேறு எந்த மதத்தை சேர்ந்தவரும் பேதம் பார்ப்பதில்லையா? பிரிவுகள் வேறு எங்கும் கிடையாதா அல்லது அது உங்கள் கண்களில் படவில்லையா?

பதில்:
  • அருமையான கேள்வி. ஜாதி பேதம் பார்ப்பவர்கள் எல்லா ஜாதியிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். கிருஸ்துவ சபைகளில் கூட சிலவற்றிலும், முஸ்லிம்களில் சில முட்டாள்களிடமும் கூட இருக்கத்தான் செய்கிறது. எங்கே இருந்தாலும் எதிர்க்கப்பட வேண்டியதுதான்.
  • ஆனாலும் நோய் நாடி. நோய் முதல் நாடி என்பதை தீர்வாக கொள்வோம். இந்த ஜாதி பேதத்தை கண்டு பிடித்து, எல்லோர் நெஞ்சிலும் இந்த விசத்தை புகுத்திய அயோக்கியத்தனம் பார்பனருக்கே மட்டுமே உரித்தான சொத்து என்பதை உலகமே அறியும். 
  • மத்தவனெல்லாம் கூட தொட மாட்டோம், ஒன்னா புழங்க மாட்டோம்னு தான் சொன்னான். ஆனா பார்த்தாலே தீட்டு, நிழல் பட்டா தீட்டுன்னு எல்லாம் எழுதி வச்ச பொறுக்கித்தனமெல்லாம் குடுமிகளின் குடும்ப சொத்தல்லவா?
--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி 2:
--------------------------------------------------------------------------------------------------------------------------கடவுள் இல்லை என்று கூறும் நீங்கள் கிறிஸ்து இல்லை, அல்லா இல்லை என்று தைரியமாக கூறமுடியுமா?

பதில்:
  • ஸ்கூல்ல டீச்சர் அடிக்கும்போது "அவனுந்தான் பேசினான்" னு சொல்லி அழும் அஞ்சு வயது குழன்தைக்கு இருக்கும் அறிவு இருந்தால் கூட இந்த கேள்வி வந்திருக்காது.
  • "கடவுள் இல்லை" என்ற பிரச்சாரத்தில் "அத்தனை மத கடவுள்களும் அடங்கும்" என்ற சிற்றறிவு கூட இல்லாமல் ஒரு அற்ப சந்தோசத்தை தேடி கேட்கும் கேள்வி இது.
  • சரி அப்படியே வச்சுக்குவோம், "இயேசுவும், அல்லாஹ்வும் கடவுள் இல்ல"-ன்னு சொல்லிட்டா, "ராமனும், சிவனும், விஷ்னுவும், பிரம்மாவும் கடவுள் கிடையாது"-ன்னு ஒத்துக்க நீங்க தயாரா?
  • கிருஸ்துவர்கள் நாத்திகர்களின் பிரச்சாரத்தை கண்டுகொள்வதே கிடையாது.
  • முஸ்லிம்கள் நாத்திகர்களை விவாதத்திற்கு அழைத்து அவர்களின் அத்தனை கேள்விகளுக்கும் முறையான பதிலை கொடுத்தோம்.
  • ஆனால் நீங்க தான் லபோதிபோன்னு வாயில அடிச்சுக்கிட்டு ஒப்பாரி வைக்கிறிங்களே தவிர நாத்திகனின் ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்லாமல் ஏமாற்றிக்கொண்டு திரியுரீங்க.
  • ஓடுற நாய கண்டா வெரட்டுர நாய்க்கு இளப்பம் என்பது போல நாத்திகனும் உங்களயே சுத்தி சுத்தி அடிக்கிறான். இது உங்க தப்பு.
--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி 3:
--------------------------------------------------------------------------------------------------------------------------
தியாகராஜர் ஆராதனையை கேலி செய்யும் உங்களுக்கு முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை கேலி செய்து அறிக்கை விடும் அளவிற்கு தைரியம் இருக்கிறதா?

பதில்:
  • தியாகராஜர் ஆரதனையானாலும் சரி, முத்துராமலிங்கத்தின் குருபூஜை ஆனாலும் சரி, இம்மானுவேல் சேகரனின் நினைவுநாள் ஆனாலும் சரி அதன் மூலம் ஏதேனும் ஆதிக்கத்தை நிருவாத வரையில் எதையும் கண்டிக்க அவசியம் இல்லை.
--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி 4:
--------------------------------------------------------------------------------------------------------------------------
பிராமணன் பூணூலை அறுக்க துணிந்த உங்களுக்கு ஒரு கிறிஸ்துவனின் சிலுவை டாலரையோ அல்லது ஒரு முஸ்லிமின் தொப்பியையோ அல்லது ஒரு சிங்கின் தலை பாகையையோ அகற்றும் ஆண்மை உண்டா?

பதில்:
  • ஒரு கிருஸ்தவனின் சிலுவை அவனை கிருஸ்துவனாக மட்டுமே அடையாளப்படுத்தும். அதே போலத்தான் முஸ்லிமின் தொப்பியும், சீக்கியர்களின் தலைப்பாகையும்.
  • ஆனால் ஒரு பிராமணனின் பூணூல் அவனை மட்டுமே உயர்ந்தவன் மற்றவனெல்லாம் இழிபிறப்பு என்று அடையாளம் காட்டுகிறது.
  • சிலுவையை எந்த கிருஸ்துவன் வேண்டுமானாலும் அணியலாம், தொப்பியை எல்லா முஸ்லிமும் அணியலாம். தலைப்பாகையை எந்த சீக்கியனும் அணியலாம்.
  • அதே போல பூணூலை எந்த ஹிந்து வேண்டுமானாலும் அணியலாம் என்று சொல்லும் துணிவு உங்களுக்கு இருக்கிறதா?
  • பத்து குடும்பம் இருக்கும் தெருவில் ஒரு வீட்டு வாசலில் மட்டும் "இங்கு பத்தினிகள் இருக்கிறார்கள்" என்று பதாகை வைத்தால் மற்ற வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் வேசிகள் என்றுதானே அர்த்தம்?
  • மற்றவரையெல்லாம் வேசியாக்கிவிட்டு தான் மட்டும் பத்தினி வேடம் போடும் அயோக்கியத்தனத்தின் அடையாளம் தான் பூணுல். அது அகற்றப்பட்ட வேண்டியதே.
--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி 5:
--------------------------------------------------------------------------------------------------------------------------
தாலி அகற்றும் போராட்டம் நடத்திய உங்களுக்கு தாலியோடு இருக்கும் எவரும், அவர் கணவரும் திராவிட கழகத்திலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும், பெரியார் டிரஸ்ட் உறுப்பினர் பதவிக்கும் தகுதி இழக்கிறார்கள் என்றும் ஒரு அறிக்கை விடும் அளவிற்கு தைரியம் உண்டா?

பதில்:
  • தாலி என்பது அவசியம் இல்லை. அது ஒரு நகை மட்டுமே. இஷ்டப்பட்டால் அணியலாம் அல்லது அவிழ்த்து போடலாம். ஆனால் அந்த நகையில் தான் ஒருவனின் உயிர் இருப்பதாகவும் அவன் செத்துவிட்டால் அதை அணியும் தகுதி போய்விட்டதாகவும் கருதுவது தான் மூடநம்பிக்கை. அதை தகர்க்கத்தான் கணவன் கையாலேயே தாலியை அறுத்தனர். அதெல்லாம் எனக்கு தேவையில்லை என்று சொல்பவரை வற்புறுத்துவது பெரியாரின் கொள்கையே கிடையாது.
  • சமூக கொடூரத்தை மட்டுமே அவர் தீவிரமாக எதிர்த்தாரே தவிர இதுபோன்ற விசயங்களில் பிரச்சாரம் மட்டுமே சரியானது என்று இருந்தார். அதுக்கும் மேல ஒருத்தர் தாலி அணிவதும், அணியாமல் இருப்பதும் அவரவர் இஷ்டம். பூணூலை போல அதில் வேசியாக்கும் விசம் இல்லை. நீங்கள் சொன்னதை திக முடிவாக ஏற்றால் எனக்கும் சம்மதமே. ஆனால் கருவறைக்குள் வைத்து கசமுசா செய்தவனையே அரவணைத்துக் கொண்டு அலையும் கூட்டத்திடம் இருந்து இந்த கேள்வி வருவது தான் வேடிக்கை ஆனது.
--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி 6:
--------------------------------------------------------------------------------------------------------------------------
எடுத்ததற்கெல்லாம் கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்கும் நீங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் இந்த திராவிட கட்சிக்கு ஆதரவு கொடுக்கவேண்டாம் என்றும், உங்களை நம்பி நாங்கள் இல்லை என்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் மட்டும் இந்த கட்சிக்கு ஆதரவு கொடுங்கள் என்றும் பிரசாரம் செய்ய தைரியமுண்டா?

பதில்:
  • கட்சிகளுக்கு ஆதரவு கொடுப்பது கடவுள் சேவைக்கு அல்ல. மக்கள் சேவைக்கு. மக்களுக்கு நல்லது நடக்கும் என்கிற ஆசையில் தான். மக்கள் என்பதில் நாத்திகன், ஆத்திகன் என அனைவரும் அடங்குவர். அதனால்தான் அனைவரையும் அழைக்கிறோம். 
  • சரி, அப்படியே நாத்திகர்களை மட்டுமே கட்சியில் சேர்த்து ஒருவேளை ஆட்சியை பிடித்துவிட்டால் தமிழகம் முழுக்க இருக்கும் அத்தனை கோவில்களையும் இடித்துவிட்டு பள்ளிக்கூடங்களாக மாற்றிவிட சம்மதமா?.
  • கொள்கைக்கும் சேவைக்கும் வித்தியாசம் தெரியாமல் உளறுவது சரிதானா? உங்கள் வீடு தீப்பிடித்து எரியும் போது வைணவர்கள் மட்டும் வந்து என்னைய காப்பாத்துங்க என்றா அழைப்பீர்கள்?
--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி 7:
--------------------------------------------------------------------------------------------------------------------------
கடவுள் வழிபாட்டையும் சடங்குகளையும் எதிர்க்கும் நீங்கள் ஈ வெ ரா சிலைக்கு பிறந்த நாள் அன்று மாலை போடுவதையும் இறந்த நாளன்று மலர் தூவி மாலை போடுவதையும் நிறுத்த முடியுமா? அல்லது அண்ணாதுரை, காமராஜர், எம் ஜி ஆர் சிலைகளுக்கு மாலை போடுவதையும் மலர் அஞ்சலி செய்வதையும் கேலி பேசியும் கண்டிக்கவும் உங்களிடம் திராணி இருக்கிறதா?

பதில்:
  • பெரியார் சிலையையும் கூட கடவுள் சிலை போல ஆக்கிவிட்டதில் எனக்கும் வருத்தம் உண்டு என்றாலும் வழிபாட்டுக்கும், மரியாதை செய்வதற்கும் வித்தியாசம் உண்டு.
  • பெரியார் சிலையை எந்த சூத்திரனும் தொடலாம்..எந்த பஞ்சமனும் மாலை அணிவிக்கலாம்..எந்த ஆகம விதியும் தேவையில்லை..பெரியார் சிலை என்பது ஒரு அடையாளம் தான்.
  • ஒருவேளை இன்னின்ன ஜாதிக்காரன் மட்டும் தான் பெரியார் சிலைக்கு மரியாதை செய்யலாம் என்ற நிலை வந்தால் அதை உடைத்தெறியும் முதல் ஆளாக நானிருப்பேன்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி 8:
--------------------------------------------------------------------------------------------------------------------------
பிராமணனை மட்டும் எதிர்க்கும் பழக்கத்தை உடைய நீங்கள் பிராமணனைத்தவிற மற்றவர்கள் முட்டாள்கள், அறிவில்லாதவர்கள், மட்டமானவர்கள் என்று நினைக்கிறீர்களா? அல்லது கூறுகிறீர்களா?

பதில்:
  • சின்ன திருத்தம். பிராமணனை எதிர்க்கவில்லை. பிராமனியத்தை எதிர்க்கிறோம். பிராமணீயத்தின் அடிப்படையான வருணாசிரமத்தை எதிர்க்கிறொம். அது ஒரு சூத்திரன், பஞ்சமனிடம் இருந்தாலும் எதிர்க்கத்தான் செய்வோம்.
  • மற்றவர்களை விட பிராமணர்கள் பிறப்பால் உயர்ந்தவர்கள் என்பதைத்தான் எதிர்க்கிறோமே தவிர கல்வியால் அறிவால் ஒருவன் உயர்ந்ததை எப்படி மறுக்க முடியும்?
  • பிராமணர்களை விட மற்றவர்கள் சில விசயத்தில் அறிவு குறைந்தவர்கள் என்பதே கருத்து. ஏனென்றால் நேர்மையாக வாழ்பவனை விட கிரிமினலுக்கு மூளை சற்று அதிகமாகவே வேலை செய்யும் என்பது தான் நிதர்சனமான உண்மை. அதை எப்படி மறுப்பது?
--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி 9:
--------------------------------------------------------------------------------------------------------------------------
நாட்டில் நடந்துள்ள கொலைகள், கற்பழிப்புகள், திருட்டுகள், ஊழல்கள், கொள்ளைகள் இவற்றில் பிராமணனின் பங்கு எவ்வளவு சதவிகிதம், பிற ஜாதியர்கள், பிற மதத்தினரின் பங்கு எவ்வளவு சதவிகிதம் என்ற விவரங்கள் உங்களிடம் உண்டா?

பதில்:
  • பார்ப்பனர்கள் கொலை கொள்ளை, கற்பழிப்பில் அதிகம் ஈடுபடுகின்றனர் என்பதல்ல எங்கள் குற்றச்சாட்டு. 
  • கேவலம் மூன்று சதவீதத்தை தாண்டாத போதே அரசுத்துறை, தனியார்துறை, நீதித்துறை யில் பெரும்பங்கை எடுத்துக்கொண்டு மற்றவர்கள் முன்னேறிவிடாமல் பாதுகாக்கும் செயலைத்தான் எதிர்க்கிறோம். 
  • கோவில்கள் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு கருவறைக்குள் கசமுசா செய்வதைத்தான் எதிர்க்கிறோம்.
  • கொலை கொள்ளையெல்லாம் சமாளித்துவிடக்கூடிய குற்றங்கள். ஆனால் பார்ப்பனீயத்தின் அயோக்கியத்தனம் என்பது மக்களை பிறப்பால் வேறுபடுத்தி, கேவலப்படுத்தி, பிளவை உண்டாக்கும் சந்தர்ப்பவாத குற்றம். இதுதான் பெருங்குற்றமும் கூட.
  • கேவலம் மூன்று சதவீதத்தை தாண்டாத போதே ஆசிரமங்களில் நடக்கும் கூத்துகளை தாங்க முடியவில்லை. சங்கரமடமே சமீபத்திய சாட்சி.
--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி 10:
--------------------------------------------------------------------------------------------------------------------------
கோவிலில் நுழைய அனுமதி, தெருவில் நடமாட தடை, தடுப்பு சுவர் கட்டுதல், இரட்டை டம்ப்ளர் முறை, கவுரவக் கொலைகள் இவைகளையெல்லாம் நடைமுறைப்படுத்துவது எவ்வளவு சதவிகிதம் பிராமணர்கள், எவ்வளவு சதவிகிதம் பிராமணரல்லாதோர் என்ற விவரம் தங்களிடம் உள்ளதா? இவற்றை எல்லாம் உங்களால் பகிர்ந்து கொள்ள முடியுமா? எதிர்த்து குரல் எழுப்பும் ஆண்மை உண்டா?

பதில்:
  • எல்லாம் சரிதான். இதையெல்லாம் பெரியாரிஸ்ட்டுகள் எதிர்க்காமல் சங்கராச்சாரி வகையறாக்களா எதிர்த்து பிரச்சாரம் செய்துகொண்டு இருப்பதாக நினைக்கிறிர்கள்?
  • ஒரு ரவுடி கும்பலின் அடியாளுக்கு இருக்கும் அதிகபட்ச ஆசையே அந்த கிரிமினல் கூட்டத்துக்கு தலைவன் ஆகுவதாகத்தான் இருக்க முடியும். 
  • கருவறைக்குள் மற்றவர் நுழைய பார்ப்பான் தடுத்ததை பார்த்துவிட்டு தெருவுக்குள் நுழைய இவன் அனுமதி மறுக்கிறான். 
  • நாலணா நூலை மாட்டிக்கொண்டு உயர்ந்தவன் என்று சொல்வதை பார்த்துவிட்டு ரெட்டை டம்ளரை உருவாக்குகிறான்.
  • நந்தனை நெருப்பில் எரித்த கதையை கேட்டுவிட்டு கவுரவக்கொலை செய்கிறான்.
  • அக்ரஹாரம் தனியாக இருப்பதை பார்த்துவிட்டு தடுப்புச்சுவரும், தனி சுடுகாடும் உண்டாக்கிவிட்டான்.
  • அத்தனைக்கும் அடிப்படை அயோக்கியத்தனமே பார்ப்பனீயத்திடம் இருந்து தான் பெறப்பட்டது. 
  • உங்கள் கிரிமினல் கும்பலில் அடியாட்களாக இருந்த சில்லறைகள் தான் இந்த இழிசெயல்களை செய்கின்றனவே தவிர அப்ரூவர் ஆகி பெரியாரிஸ்ட்டாக ஆனவன் செய்வதில்லை.
  • எல்லாம் சரிதான். இத்தனை சமூக கொடுமைகளை பட்டியலிடும் நீலிக்கண்ணிர் கும்பலே. இதுவரை இந்த பிரச்சினைகளுக்காக இந்து மத அமைப்புகளோ, பார்ப்பனர் சங்கமோ நடத்திய போராட்டங்கள் குறித்து ஏதேனும் ஆவணங்கள் உண்டா? ஏண்டா இப்படி செய்ரீங்கன்னு கேக்கும் ஆண்மை உண்டா??
--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி 11:
--------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு பிராமண பெண் தலைமை ஏற்று நடத்தும் அ தி மு க கட்சி ஒரு திராவிட கட்சியாயிற்றே. இதை எதிர்த்து குரல் கொடுக்கும் தைரியம் உங்களிடம் உண்டா?

பதில்:
  • அதிமுக-வை திராவிட கட்சி என்று சொல்லிக்கொண்டு திரிவது ஊடகங்களும், சில ஊளை உதார் கும்பலும் தானே தவிர எந்த ஒரு பெரியார் தொண்டனும் அல்ல. திராவிடம் என்ற வார்த்தை வந்துவிட்டாலே அது திராவிட கட்சி ஆகிவிடாது என்கிற சின்ன அரசியல் அறிவுகூடவா இல்லை? அப்படி பார்த்தால் தேமுதிக தான் முக்கியமான திராவிட கட்சி. தேசியத்தை முன்னேற்றும் திராவிட கட்சி அதுதான்.
  • திராவிட கொள்கையின் படி நடப்பதே திராவிட கட்சி. அதன்படி அறிஞர் அண்ணா மற்றும் திரு.கருணாநிதி அவர்களின் ஆரம்ப காலத்தோடு திராவிட ஆட்சி முடிந்து விட்டது. இப்போது இருப்பவை எல்லாம் பத்தோடு பதினொன்றாக ஆட்சிக்கு அலையும் அரசியல் கட்சிகள் மட்டுமே.
  • அது சரி, ஒரு திராவிட கட்சிக்கு பார்ப்பன பெண் ஒருவர் தலைமை ஏற்றதை எதிர்த்து ஏன் எந்த பார்ப்பன இயக்கமும் சின்ன முக்கல் முனகலை கூட வெளிப்படுத்தவில்லை? மனு சாத்திரப்படி பெண்கள் தலைமை ஏற்பது பெரும்பாவம் ஆயிற்றே. இதை அந்த பார்ப்பன பெண்மணியிடம் ஏன் எந்த ஆன்மீக அலப்பறைகளும் எடுத்து சொல்லவில்லை? பயமா???
--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி 12:
--------------------------------------------------------------------------------------------------------------------------
12. அந்த ஒரு பிராமண பெண்ணின் காலில் விழும் ஒரு மந்திரியையாவது, சட்டசபை உறுப்பினரையாவது, ஒரு கவுன்சிலரையாவது கேலி பேசும் ஆண்மை உங்களிடம் உண்டா?

பதில்:
  • அனேகமாக நீங்கள் செவ்வாய் கிரகத்தில் இருந்து நேற்று இரவுதான் பூமிக்கு வந்தவராக இருக்க வேண்டும்.
  • அதிமுக அமைச்சர்களை எல்லான் கூன்பாண்டிகள் என கேலிகிண்டல் செய்வதே நாங்கள் தான்...
  • முகநூலில் இருக்கும் ஃபேக் ஐடிக்கு கூட தெரிந்த விசயத்தை தெரியாதது போல கேள்வி கேட்பதெல்லாம் என்ன மாதிரியான டிசைன்?
--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி 13:
--------------------------------------------------------------------------------------------------------------------------
பிராமணர்களால் உருவாக்கி சிறப்பாக உலகளவில் செயலாற்றி வரும் டிசிஎஸ், இன்போசிஸ், காக்னிசென்ட் போன்ற கம்பெனிகளில் தமிழன், வேண்டாம் வேண்டாம், திராவிடன் வேலை செய்யக் கூடாது என்று உங்களால் அறிக்கை விட முடியுமா? உங்கள் குடும்ப உறுப்பினரை அந்த வேலையிலிருந்து ராஜினாமா செய்ய வைக்க முடியுமா?

பதில்:
  • டிசிஎஸ், இன்போசிஸ் எல்லாம் பிராமணர்களால் உருவாக்கப்பட்டதா??? சரி இருக்கட்டும் உங்க ஆசைப்படியே. அந்த நிருவனங்களில் வேலை செய்யும் அனைத்து திராவிடர்களையும் திரும்ப அழைக்க நாங்கள் தயார்.
  • அதுபோல கரையான் புற்றுக்குள் கருநாகம் புகுந்ததை போல திராவிட மண்ணில் சூத்திர அரசர்கள் கட்டிய கோவில்களுக்குள் புகுந்து கொண்டு அதிகாரம் செய்யும் அயோக்கிய கும்பலை எல்லாம் திரும்ப அழைக்க நீங்கள் தயாரா?
  • திராவிடனுக்கும் நமக்கும் ஒத்துவரவில்லை. அதனால் இனிமேல் எந்த பார்ப்பனரும் திராவிட மண்ணில் இருக்கக்கூடாது என்று சொல்லி உங்கள் பூர்வீகமான மத்திய ஆசியாவை நோக்கி அழைத்துச்செல்ல நீங்கள் தயாரா? டீலா நோ டீலா?
--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி 14:
--------------------------------------------------------------------------------------------------------------------------
பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பாம்பை விட்டு விடு பார்ப்பானை கொல் என்ற உங்களால் அந்த பாம்பை உங்கள் கழுத்தில் மாட்டிக்கொண்டு ஊர்வலம் வர முடியுமா?

பதில்:
  • இந்த கேள்விக்கு ஒரு வாரம் முன்பு ரங்கராஜ் பாண்டே என்பவரை மல்லாக்கப்போட்டு வாயிலே நெல்லு குத்தியதை மறந்துவிட்டீர்கள் போலும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி 15:
--------------------------------------------------------------------------------------------------------------------------
குங்குமம் வைத்தவரை நெற்றியில் என்ன காயம் ரத்தம் வந்திருக்கிறதே என்று கேலி பேசியவர் வைணவத்தை பரப்பிய ராமானுஜரைப்பற்றி எழுதுவதை உங்களால் தட்டிக் கேட்க முடியுமா?

பதில்:
  • ராமானுஜர் தலித்துகளும் வேதம் படிக்க வேண்டும் என்று கோபுரத்தின் மீது ஏறி நின்று கூவியது வரலாறு. அதனால் தான் அவரை பற்றி பெருமை பேசுகிறொம். 
  • இதிலிருந்தே தெரியவில்லையா? எங்களுக்கு எதிரி பார்ப்பனர் அல்ல. பார்ப்பனீயம் தான் என்று.
--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி 16:
--------------------------------------------------------------------------------------------------------------------------
பார்ப்பனன், வைசியன், ஷத்திரியன் சூத்திரன் என்ற பிரிவு அவரவர்களின் பிறப்புத் திறனை கொண்டு நெறியமைக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா? நீங்கள் அறிந்திருக்கவில்லை என்று தெரிகிறது. இருந்தாலும் காவல் நிலையங்களில் அல்சேஷன் கூடாது பாமரேனியன் வகை நாய்க்குட்டிகள்தான் காவலுக்கு வளர்க்கவேண்டும் என்று போராட்டம் நடத்தும் துணிவும், அறிவும் உங்களுக்கு உண்டா?

பதில்:
  • பிறப்பு அடிப்படையில் தரம் பிரிப்பதென்ற இழிநிலையைத்தான் நாங்கள் எதிர்த்து பிரச்சாரம் செய்துகொண்டு இருக்கிறோம். அதையே நீங்கள் பெருமையாக பேசித்திரிவது கேவலமாக இல்லையா?
  • பிறப்பால் ஒருவனுக்கு உயர்வும், தாழ்வும் வருமென்றால் அது இந்த உலகில் இருக்கும் அனைவருக்கும் சமமானதே. ஏனென்றால் இன்றைய அறிவியல் கூட மனிதர்கள் அனைவரும் ஒரே ஆப்ரிக்க தாயில் இருந்து வந்தவர்கள் என்றுதான் சொல்கிறது.
  • காவல்துறையில் எந்தவகை நாய்களை வைப்பதென்பது மோப்ப சக்தியை பொருத்ததே அன்றி ரகத்தால் வருவதல்ல. அல்சேசனை விடவும் சிறந்த மோப்ப சக்தியுள்ள நாய் ரகங்கள் கிடைத்தால் அதையே பயன்படுத்துவதில் என்ன தவறு?
  • இதுக்கும் வருனாசிரமத்தை நியாயப்படுத்துவதற்கும் என்ன எழவு சம்பந்தம் என்றே புரியவில்லை.
--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி 17:
--------------------------------------------------------------------------------------------------------------------------
ஹிந்துக்கள் தாலி அணிகிறார்கள். கிறிஸ்தவர்கள் திருமண மோதிரம் அணிகிறார்கள். ஹிந்துக்கள் தாலி அகற்றும் போராட்டம் நடத்திய நீங்கள், கிறிஸ்தவர்கள் மோதிரம் அகற்றும் போராட்டம் நடத்தும் ஆண்மை இருக்கிறதா?

பதில்:
  • கிருஸ்துவர்கள் நிச்சயதார்த்தம் அன்றே கூட மோதிரம் அணிவார்கள். திருமணத்திற்கு தனி மோதிரம். அதுபோல இந்துக்களும் பரிசம் போட்ட அன்னைக்கு ஒரு தாலியும், கல்யாணத்தந்னைக்கு ஒரு தாலியும் கட்டிக்கலாமா? 
  • உங்களை நோக்கிய கேள்வியை கிருஸ்துவர்களை நோக்கியும், முஸ்லிம்களை நோக்கியும் திருப்பிவிடும்போதே தெரிகிறது உங்களிடம் பதில் இல்லை என்று.
--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி 18:
--------------------------------------------------------------------------------------------------------------------------
ஈ வெ ரா கொள்கைகளின் வாரிசு என்று சொல்லிக்கொண்டு திரியும் நீங்கள் அவர் கொள்கைகளை வேறு எவரும் வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் சென்றீர்களே ஏன்? அவர் கொள்கைகள் பரவக்கூடாது என்ற எண்ணமா? அல்லது சில்லறை பறிபோய்விடுமே என்ற பயமா?

பதில்:
  • காசு விசயத்தில் திகவினருக்கு இருக்கும் ஆசைதான் காரணம் என்றாலும் அவர்கள் செய்ததும் ஒரு வகையில் சரிதான் என்பதற்கு உங்களின் 14 வது கேள்வியே ஆதாரம்.
  • அத்தனையும் ஆவணமாக தனிக்குழுவின் கையில் பாதுகாக்கப்பட்டு இருக்கும் போதே பெரியார் சொல்லாததை எல்லாம் அவர் மேல் இட்டுக்கட்டும் அயோக்கியர்களுக்கு பயந்துகூட இப்படி செய்திருக்கலாம்.
  • எல்லாம் சரிதான், பல நூற்றாண்டுகளாக வேதங்களை எல்லாம் ஒரு குறிப்பிட்ட சாரார் மட்டுமே படிக்க வேண்டும் என்றும் மற்றவர் அதை கேட்டாலே காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும் என்றும் அடக்குமுறை செய்த அயோக்கிய கும்பலை கேள்வி கேட்க ஆண்மை இருக்கிறதா குடுமியாரே?
--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி 19:
--------------------------------------------------------------------------------------------------------------------------
பூணூல் என்பது ஒரு பகுதியினரின் அடையாளம், உங்களுக்கு கருப்பு சட்டைபோல. பூணூலை அறுக்கும் உங்கள் பகுத்தறிவு கருப்பு சட்டைபற்றி ஒன்றும் உணர்த்தவில்லையா?

பதில்:
  • இல்லவே இல்லை. திக காரன் மட்டும் தான் கருப்பு சட்டை அணியவேண்டும் மற்றவர் எவரும் அணியக்கூடாது என்று எப்போதாவது சொல்லியிருக்கிறொமா?
  • அதே போல பூணூல் என்னும் நாலணா கயிறை எல்லோரும் அணியலாம் அல்லது குறைந்தபட்சம் எல்லா இந்துக்களும் அணியலாம் என்றாவது சொல்ல உங்களால் சொல்ல முடியுமா?
  • பூணூல் என்னும் அயோக்கிய அடையாளத்தை மற்ற எதோடும் ஒப்பிடாதீர்கள். அது எந்த வாதத்திலும் நிற்காது.
--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி 20:
--------------------------------------------------------------------------------------------------------------------------
ஒன்றின்மீது நம்பிக்கை இருந்தால் அதை பின்பற்றவேண்டும். இல்லையென்றால் பின்பற்றவேண்டும் என்ற கட்டாயமில்லை. யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. அப்படியிருக்க பிராமணனையும் கடவுளையும் நம்பி பொழப்பு நடத்துகிறீர்களே உங்களுக்கு வேறு வேலை வெட்டி கிடையாதா?

பதில்:
  • எந்த ஒரு மனிதனின் நம்பிக்கையிலும் தலையிட எவனுக்கும் உரிமை இல்லை. ஆனால் ஒருவனின் நம்பிக்கையை வைத்துக்கொண்டு அவனை சுரண்டுவதையும் அடிமைப்படுத்துவதையும் எந்த ஒரு சமூக அக்கறை கொண்ட மனிதனாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
  • அதை எதிர்க்க வேண்டிய கடமை எல்லோருக்கும் உண்டு. அது சரி..திக காரனுக்கு வேலை வெட்டி இல்லை. உங்களுக்குமா வேறு வேலை வெட்டி இல்லை?
  • எல்லா கோவில்களையும் அயோக்கியத்தனமாக அபகரித்துக்கொண்டு அடுத்தவன் காசில் வயிறு வளர்த்துக்கொண்டு அவனையே தேவிடியா மகன் என திட்டிக்கொண்டு இருப்பதை தவிர்த்த வேறு வேலை வெட்டியே இல்லையா உங்களுக்கு?

No comments:

Post a Comment