Tuesday, June 16, 2015

நாட்டுக்காக உழைப்பவன் எவனும் விளம்பரம் தேடிக் கொள்ள மாட்டான்

பதினைந்து வருடங்களுக்கு முன்னர் தென் - டில்லி தொகுதியில் போட்டியிட தன்னிடம் பனம் இல்லாமல் குஷ்வந் சிங்கிடம் ஒன்றரை லட்சம் கடன் பெற்று தேர்தலை சந்தித்தார். என்றைக்கு நம் மக்கள் நல்லவர்களை தேர்ந்தெடுத்தார்கள்! அந்த தேர்தலில் தோற்றுப் போய் தான் கடனாக பெற்ற பணத்தை முறையாக குஷ்வந் சிங்கிடம் கொடுத்தார்.

பிறகு அஸாம் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி யாக தேர்வு செய்யப்பட்டார். அங்கு காலம் சென்ற முன்னால் முதல் அமைச்சர் திரு. ஹித்தேஸ்வர் வீட்டின் முகவரியை தேர்தல் ஆணையத்தின் விதிமுறை படி வாடகைகக்கு எடுத்துள்ளார். அந்த வீட்டிற்கு இன்றுவரையும் வாடகை கொடுத்து வருகிறார்!

  • தான் எளிமையாக இருப்பது போல் காட்டிக் கொள்ளும் கெஜ்ரிவால் பற்றி பேசும் நாம் சில நேரங்களில் சிலவற்றை மறந்து விடுவோம். உதாரனம் லால்பகதூர் சாஸ்திரி (இந்த நாட்டின் பிரதமராக இருந்தவர் தன் வீட்டிற்கு மின்சாரக் கட்டணம் செலுத்த பணம் இல்லாமல் இருந்தவர்) 
  • அப்துல் கலாம் ( ஐந்து வருடம் குடியரசு தலைவராக இருந்த மனிதன் பதவி காலத்தின் பிறகு குடியரசு தலைவர் மாளிகையை விட்டு வெளியே வரும் போது இரண்டு சூட்கேஸ் உடன் வந்தார்) 

இன்னும் பல தலைவர்களை சொல்லலாம். ஏன் இவர்கள் தலைவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்? இவர்கள் செய்யும் எதையும் விளம்பரப்படுத்திக் கொள்ள மாட்டார்கள்!

இன்றைக்கு ஒரு பாசிஸ்ட் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கடிகாரம், கண்ணாடிகள், மணிக்கு ஒரு முறை ஆடைகளை மாற்றிக் கொண்டு அதுவும் பத்து லட்டசத்துக்கு தன்னுடைய பெயரை அச்சிட்டு, கார்பொரேட் விமானங்களில் பறந்து பறந்து " நான் டீ விற்றேன் " என்று மக்களை முட்டாளாக்கி விட்டு வாக்குகளை பெற்றுவிட்டார்.

சரி அது போகட்டும்! எத்துணை முறை மன்மோகன் சிங் மேடைகளில் "நான் ஒரு ஏழை சீக்கிய குடும்பத்தில் பிறந்தவன், வங்காளம் பிரிக்கப்பட்டபோது கலவரத்தை நேரில் பார்த்வன், மிகவும் கஷ்டப்பட்டு தான் வாழ்க்கையில் முன்னேறினேன்" என்று எதாவது ஒரு மேடைகளில் முழக்கமிட்டாரா? இல்லையே!

உலகத்தில் எந்த தலைவருக்கும் இல்லாத சிறப்பு மன்மோகன் சிங்கிற்கு உண்டு. 66 % கல்வி அறிவு கொண்ட இந்தியாவின் முன்னால் பிரதமர் மன்மோகன் சிங் தான் உலகிலேயே அதிகம் படித்த பிரதமர்!

இந்தியாவின் பொருளாதாரம் சீரழிந்து கிடந்தது, அதை சீர் செய்து நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்து சென்ற மாமேதை! இவர் செய்த தவறு, தான் செய்த எதையும் விளம்பர படுத்தாமல் இருந்து கொண்டார். நாட்டுக்காக உழைப்பவன் எவனும் விளம்பரம் தேடிக் கொள்ள மாட்டான்!

விஜய் ராம்தாஸ்

No comments:

Post a Comment