Tuesday, June 16, 2015

மூக்கு – நீங்கள் அறிந்திடாத மருத்துவத் தகவல்கள்


கொஞ்ச அதிர்ச்சியாகவும் இருக்கு!

மனிதன் உயிர் வாழ அடிப்படையான சுவாச உறுப்பாக மூக்கு இருப்பதால், அது நுட்பமாகவும், பாதுகாப்பாகவும், நேர்த்தியாகவும் இயற்கையாகவே உருவாகிறது. நடுச் சுவர் எலும்பு மூக்கை இருபாகமாக பிரிக்கிறது. மேல் பாகத்தில் `நேசல் போன்’ என்ற எலும்புள்ளது. உள் பக்ககுழாய்போன்ற அமைப்பின் இருபக்கமும் தசை இடம் பெற்றிருக்கிறது.

இந்த தசை `ஏ.சி’ மெஷின்போல் செயல்படும். அதாவது சுவாசிக்கப்படும் காற்றின் தட்பவெப்ப நிலையை சீராக்கி, நுரையீரலுக்கு அனுப்பும். இந்த தசை கோடை காலத்தில் சிறிதாகி, குளிர்காலத்தில் பெரிதாகும். ஜலதோஷம் ஏற்படும் போது தொற்றுக்கிருமிகளின் தாக்குதலால் தசை வீங்கிவிடும். காற்று செல்லும் வழியை அடைத் து மூச்சுவிட சிரமமாகும். அதைத்தான் நாம் மூக்கடைப்பு என்கிறோம்.

மூக்கின் இருபுறத்தையும், கண்களின் மேல் பகுதியையும் கொண்ட கபால அமைப்பை சைனஸ் என்கிறோம். இது எலும்பால் ஆன 'ஏர்பில் கேவிட்டி' என்ற வெற்றிடமாகும். அதில், மூக்கை வழு வழுப்பாக்கும் திரவம் சுரக்கும்.
கிருமித்தொற்று எதுவும் இல்லாத நிலையில் அந்த திரவம் இயல்பாக இருக்கும். ஆஅச் என்ற தும்மலோடு ஜலதோஷம்வந்தால், அத்திரவத்தின்
அடர்த்தி அதிகரிக்கும். வெளியேவராமல்சேர்ந்து, சைனஸ் பகுதியை அடைத்து தொந்தரவு தரும். இதற்கு ஆன்டிபயாடிக் மாத்திரைகள் கொடுப்போம்.

இந்த தொந்தரவு ஒரு வாரம் அல்லது இரண்டு வாரத்தில் சரியாகிவிட வேண்டும். சரியாகாமல் 3, 4 வாரம் என்று நீடித்து அவஸ்தை தந்தால், அந்த பாதிப்பிற்கு வேறு காரணங்கள் இருக்கக்கூடும். அந்த காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை தரவேண்டும். ஜலதோஷத்திற்கு முறையான சிகிச்சை பெறாமல் கிருமித் தொற்று அதிகரித்து, அது நாள் பட `இன்பெக்டிவ் சைனசைட்டீ ஸ்’ஆக மாறியிருக்கலாம். உணவாலோ, சுற்றுப்புறசூழலாலோ, வேறு காரணங்களாலோ அலர்ஜி தொடர்புடைய`ரைனோ சைனசைட்டீஸ்’ தோன்றும்.

அடிக்கடி தும்மல்ஏற்படுதல், தலைபாரம், மூக்குஒழுகுதல், காதில் அரிப்பு, கண்ணில் நீர் வழிதல் போன்றவை இதன் அறிகுறியாகும். இதற்கு சரியான சிகிச்சையை பெறாவி ட்டால் மூக்கின் உள்ளே தசை வளர்ந்து, மூக்கை அடைக்கும். சிலருக்கு மூக்கின் பின்பகுதியில் வளரும் தசை, வாயின் பின்பகுதிவரை வளர்ந்து அதிக தொந்தரவு தரும். இந்த நோயின் பாதிப்பு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை கண்டறிய பொதுவாக எக்ஸ்ரே எடுக்கப்படுவதுண்டு.

சிடி.ஸ்கேன் எடுத்தால் மூக்கின் மேல் எலும்பு, நடுச்சுவர், தசை வளர்ச்சி, சைனஸ் பாதிப்பு போன்ற அனைத்தையும் கண்டறிந்து துல்லியமான சிகிச்சை பெறலாம். சைனஸ் பகுதியில் சளி அடைப்பு இருந்தால் `என்டோஸ்கோபிக் சைனஸ்சர்ஜரி’ தேவைப்படும். லேசர் சிகிச்சையும் கொடுக்கலாம். அலர்ஜியால் உருவான பாதிப்பு என்றால், மருந்து- மாத்திரைகள் மூலம் கட்டுப்படுத்தலாம். தற்போது மக்களை அச்சுறுத்தும் விதமாக அதிகரித்து வருவது,

குறட்டை! இதன் கொர்.. கொர் .. ஓசை இரவில் நான்கு சுவருக்குள்ளே அடங்கிப்போவதால், விடிந்ததும் அதை பலரும் நினைத்துப் பார்ப்பதில்லை. ஆனால்,அலட்சியப்படுத்தப்படும் இந்த குறட்டைக்கு சரியான சிகிச்சை பெறாவிட்டால் அது ஆபத்தை உருவாக்கிவிடும் . தற்போதைய ஆய்வு விவரங்கள்படி குறட்டை விடும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

இதற்கு முக்கிய காரணம் உடல் பருமன். குண்டான பெண்களில் ஏராளமானவர்கள் குறட்டையால் தூக்கத்தை தொலைத்து, நோய்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்போது சிறுவர் சிறுமியர்க ள் மைதானங்களுக்கு சென்று ஓடிஆடி விளையாடுவதில்லை. உட்கார்ந்து டி.வி. பார்ப்பது, கம்ப்யூட்டரில் விளையாடுவது- வறுத்த, பொரித்த உணவுகளை உண்பது போன்றவைகளால் இளையதலை முறை குண்டாகிவருகிறது. எதிர்காலத்தில் அவர்களும் குறட்டையால் பாதிக்கப்படும் சூழல் உருவாகும்.

தூங்கும்போது சுவாசப்பாதையில் அடைப்பு ஏற்பட்டு, மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமம்தான் குறட்டை சத்தமாக வெளி வருகிறது. மூக்கின் பின்புறம் `அடினாய்ட்’ தசையும், தொண்டைக்குள் `டான்சிலும்` இருக்கிறது. பல்வேறு காரணங்களால் இவை பெரிதாகும் போது, நாம் சுவாசிக்கும் காற்று எளிதாக உள்ளே போய் வெளியே வர முடியாத நெருக்கடி ஏற்படும். அந்த நெருக் கடியால் அழுத்தம் கொடுத்து மூச்சு இழுக்கும்போது காற்று பக்கத்து தசைகளிலும் அதிர்வை ஏற்படுத்தும்.

அந்த அதிர்வே குறட்டை சத்தமாக வெளிவருகிறது. ஆரோக்கியமான மனிதர் ஒருவர் 8 மணி நேரம் தூங்குகிறார் என்றால், அவருக்கு பத்து வினாடிகள் வரை மூச்சு விடுவதில் லேசான தடை ஏற்படும். அப்போது அவரது மூளைக்கு செல்லும் ஆக்சிஜனின் அளவு குறையும். அவர் ஆரோக்கியமான மனிதராக இருந்தால், உடனே உடலில் இருக்கும் இயற்கையான விழிப்புணர்வு மெக்கானிசம், அதை சரிக்கட்டும் விதத்தில் அவருக்கு விழிப்பை கொடுத்து,சுவாசத்தை சரிசெய்து விடும்.

இது இயல்பான, இயற் கையான நிகழ்வு. ஆனால் குறட்டை விடுபவர்களுக்கு இந்த இயற்கை விழிப்புணர்வு மெக்கானிசம் சரியாக செயல்படாது. அப்படியிருக்க, அ வர்கள் குடித்துவிட்டு தூங்கினாலோ, அதிகளவில் தூக்க மாத்திரைகளை பயன்படுத்தி தூங்கினாலோ இயற்கை மெக்கானிசத்தின் வி ழிப்புநிலை மிகவும் குறைந்து விடும். அப்போது அவர்களுக்கு குறட்டையால் தூக்கத்தில் மூச்சு விட சிரமம் ஏற்பட்டால், விழிப்பு ஏற்படாமல் தூக்கத்திலே உயிர் பிரியும் சூழல் ஏற்படலாம்.

குறட்டை விடுபவர்கள் இரவில் தூங்கும்போது 30முத ல் 40 தடவை மூச்சுவிட திணறுவார்கள். அதனால் அவர்கள் தூக்கம் அவ்வப்போது தடைபட்டு அவர்கள் தூங்கும் நேரம் குறையும். மறுநாள் சோர்வுடன் இருப்பார்கள். இரவில் தூக்கம் இல்லாமல் பகலில் தூங்குவது,தலைவலியோடு விழிப்பது ஆகியவைகளால் `ஸ்லீப் அப்னீயாசின்ட்ரோம்` என்ற பாதிப்பு ஏற்படும்.

இந்த பாதிப்பு வந்து விட்டால் மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறையும். கார்பன்டை ஆக்சைடு அளவு அதிகரிக்கும். அதனால்மூளை மட்டுமின்றி, இதயம், சிறுநீரகம் ஆகியவற்றின் செயற்பாடுகளும் பாதிக்கும். ஞாபகமறதி, ரத்த அழுத்த நோய்கள், ஆண்மைக்குறைவு போன்ற பிரச்சனைகளும் தோன்றக்கூடும். குறட்டை விடுபவர்களுக்கு அதன் பாதிப்பு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக `ஸ்லீப்ஸ்டெடி ’ செய்யவேண்டும். வீட்டிலே அவர்களை தூங்க வைத்து ` பாலிசோம்னா கிராபி’ என்ற கருவி மூலம் பாதிப்பை அளவி டலாம்.

ஆஸ்பத்திரியில் தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்து, `ஸ்லீப் எம்.ஆர்.ஐ.’ செய்து குறட்டையின் பாதிப்பை அறிந்து அதற்கு தகுந்த படியும் நவீன சிகிச்சைகள் கொடுக்கலாம். சிலர் குறட்டையின் பாதிப்பிற்கு சிகிச்சை பெற முடியாத அளவிற்கு உடல் பருமன், வயது முதிர்வு, குள்ளமான கழுத்து, மூக்கு- வாய் பகுதியில் தசை வளர்ச்சி போன்றவைகளால் பாதிக்கப் பட்டிருப்பார்கள். அவர்கள் மூச்சு திண றல் இல்லாமல் இரவில் தூங்குவதற்காக `சி.பி.ஏ.பி’என்ற கருவி உள்ளது. இதனை பொருத்திக்கொண்டு தூங்கி னால் மூச்சு திணறலோ, குறட்டை தொந்தரவோ ஏற்படாது.

குறட்டைக்கு சிகிச்சை மட்டும் போதாது. அவர்கள் உடல்பருமனை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும். அதற்காக உட ற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு போன்றவைகளில் கவனம் செலுத்தவேண்டும். பஞ்சுவைத்த தலையணையை சற்று உயரமாக வைத்து அவர்கள் தூங்க வேண்டும். மல்லாந்து படுக்காமல் ஒருக்களித்து அவர்கள் தூங்கவேண்டும்.

நாம் மூக்கின் வழியாகத்தான் சுவாசித்து உயிர்வாழ்கின்றோம். அதனால் மூக்கில் ஏற்படும் நோய்களையும், குறட்டையையும் அலட்சியம் செய்யாமல் அவ்வப் போது அதற்குரிய சிகிச்சைகளை பெற்று விட வேண்டும். நோய் வரும் முன்பு காக்கும் விழிப்புணர்வும் மனித சமூகத்திடம் வளர வேண்டும்.

E & T Specialist

No comments:

Post a Comment