Tuesday, June 16, 2015

விவசாயியும் நுகர்வோரும் சிந்திக்காத சந்தை

மக்கள் நலன் சார்ந்த விஷயங்களுக்கு ஆட்சியாளர்கள் முன்னுரிமை கொடுப்பதில்லை

தோராயமாக மூன்றரைக் கிலோ கடலைப் பருப்பு போட்டால் தான் ஒரு லிட்டர் கடலை எண்ணெய் கிடைக்கும். ஒரு கிலோ கடலைப் பருப்பு நாற்பத்தி ஐந்து ரூபாய் என்பது சராசரி. ஆனால் பாருங்க நம்பவே முடியாத 95 ரூபாய்க்கு ஒரு லிட்டர் கடலை எண்ணெய் கிடைக்கிறது.

ஒரு கிலோ மிளகாய் நூற்றி இருபது ரூபாய் ஆனால் மிளகாய்ப்பொடி என்பது ரூபாய்க்கு கிடைக்கிறது.

அடுத்து பாருங்க இரண்டரை கிலோ எள் போட்டால் ஒரு லிட்டர் நல்லெண்ணெய். ஒரு கிலோ எள் நூறு ரூபாய் வரை விற்கிறது. இரண்டரைக் கிலோவின் அடக்க விலையே இருநூற்றை ஐம்பது. நல்லெண்ணெய் எப்படி 160 முதல் 220 வரை கிடைக்கிறது.

இப்படி வாங்கும் மூலப்பொருட்களின் விலைக்கும் கிடைக்கும் பொருட்கள் விலை சம்பந்தமில்லமல் இருக்கிறதென்றால் என்ன அர்த்தம்?!

இங்கு விற்பனை செய்யும் எந்த எண்ணெய்யும் ஒரிஜினல் எண்ணெய் கிடையாது எல்லாம் தேவையான வாசனை எஸ்சென்ஸ் சேர்க்கப்பட்ட மினரல் ஆயில்...

மினரல் ஆயில் என்பது கச்சா எண்ணெய் (க்ரூட் ஆயில்) ல் இருந்து பெட்ரோலிய பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்ட பின்னர் கடைசியாக கிடைக்கும் தாரில் இருந்து பிரிக்கப்படும் நிறம்,சுவை,வாசனை அற்ற ஒரு எண்ணெய்...

இதில் தேங்காய் எண்ணெய் எசென்ஸ் சேர்த்து தான் VVd, Parachute, himalayas, Johnson and Johnson, என்று பல பிராண்டுகள் சந்தையில் உள்ளன,

இது போக தற்போது ரைஸ் பிராண்டு ஆயில்,ஆலிவ் ஆயில், சன்பிளவர் ஆயில்,எள் எண்ணெய், கடலை எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், என்று விதவிதமாக எஸ்சென்ஸ் கலந்து கணக்கில்லைமல் விற்பனையில் உள்ளது....

இந்த வாசனை எஸ்சென்ஸ் எல்லாம் நம்ம ஊரு மளிகை கடையில் கூட கிடைக்கிறது, இந்த கலப்பட விவரங்கள் எல்லாம் ஒரு எண்ணெய் ஆட்டும் மில்லில் வேலை செய்பவரிடம் போட்டு வாங்கியது...

இந்த சூத்திரம் தெரிந்து கொள்ளவே நமக்கு திராணி பத்தாது. இதற்கு மேல இயற்கை வேளாண்மையில் வந்ததா என்று கண்டுபிடித்து நல்ல உணவை உண்டு ஆரோக்கியமா வாழ்ந்து.............ஹ்ம்ம்ம் .

விவசாயியும் நுகர்வோரும் சிந்திக்காத சந்தை இப்படித் தான் இருக்கும்...

நன்றி : ரகுபதி -மைலாஞ்சி

No comments:

Post a Comment