Thursday, July 6, 2017

கலைஞரை தெலுங்கர் என்றும் வந்தேறி என்றும் நாக்கில் நரம்பில்லாமல் பேசுகிறார்கள்

A parimalan
Via Facebook
2017-06-23

சுமார் 110 ஆண்டுகளுக்கு முன்பே கலைஞரின் தாயாருக்கு அழகு தமிழில் "அஞ்சுகம் " என்றும் தந்தையாருக்கு "முத்து வேலர் "என்றும் அவர்களின் பெற்றோர்கள் பெயர் வைத்துள்ளனர். இவ்வாறு சுத்த தமிழ் பெயர் கொண்ட குடும்பத்தில் பிறந்த கலைஞரை தெலுங்கர் என்று வசைபாடுகிறார்கள் பேடிகள்.

இந்த விபரங்களை சொன்னால் உடனே தட்சனாமூர்த்தி என்ற பெயரை ஏன் கலைஞருக்கு வைத்தார்கள் என கேட்கிறார்கள்.

அட கிறுக்கனுங்களா தெட்சினாமூர்த்தி சாமி பெயர். அதனால் அப்பெயரை வைத்துள்ளனர். அதைதான் கலைஞர் "கருணாநிதி " என்று பெயர் மாற்றிக்கொண்டாரே .

இப்படியெல்லாம் கேள்வி கேட்பவர்கள் யார் என பார்த்தால் ராமதாஸ் , சீமான், வீரலெஷ்மி,  திருமுருகன் காந்தி கோஷ்டியினர்.

மேற்கண்ட பெயர்கள் எல்லாம் தமிழ் பெயரா?

இந்த நாம்கிறுக்கர் கட்சியினர் கலைஞரை சின்னமேளம் என்ற தெலுங்கர் என்றனர்.

ஆனால் சின்னமேளம் என்ற சாதியினர் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த தமிழ் மக்கள் என்றும் பெரிய மேளம் என்ற பிரிவினரே தெலுங்கர் என்றும் EDGAR THURSTON and K.RANGACHARI எழுதிய
" CASTES AND TRIBES of SOUTHERN INDIA"  என்ற புத்கத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விளக்கத்தை சொன்னால் கலைஞரின் பேத்தி பேரன்கள் பெயர்கள் தமிழ் பெயரா என கேனத்தமாய் கேட்கிறார்கள்.

அட முட்டாள்களே இன்று தமிழ்நாட்டில் உள்ள மொத்த குழந்தைகளின் பெயரை கணக்கிட்டால் 10% தமிழ் பெயர் கூட தேறாதே ....தமிழ் பெயர் இல்லாத 90% குழந்தைகள் வந்தேறிகளா?  ....என்று கேட்டால் பதிலே இல்லை.

இப்படியெல்லாம் கேள்வி கேட்கும் தமிழ்தேசிய குஞ்சுகளுக்கு தமிழில் ஒரு வரி தப்பில்லாமல் எழுத தெரியுமா? என்றால் ஒரு பயலும் தேறமாட்டான்.

இந்த பொறுக்கிகள்தான் ஒரு மிகச் சிறந்த தமிழ் அறிஞர் கலைஞரை தெலுங்கர் என்றும் வந்தேறி என்றும் நாக்கில் நரம்பில்லாமல் பேசுகிறார்கள்.

தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளனும் என்று கூக்குரல் போடும் தமிழ்தேசிய குஞ்சுகள் தற்போது தமிழகத்தை ஆட்சி செய்யும் பழனிச்சாமி என்ற தமிழனுக்கு ஆதரவளித்து உங்களின் கட்சிகளை கலைத்து விட வேண்டியதுதானே

செய்வீர்களா?

சொல்லுங்கடே....

No comments:

Post a Comment