Thursday, July 6, 2017

திராவிடம் பற்றி அவர்  சொன்ன பொய்களை  அம்பல படுத்த வேண்டிய பொருப்ப

Devi somasundaram
Via Facebook
2017-07-06

எஸ் வீ சேகர் திராவிடம்ன்னா என்ன என்று சில தகவல்களை கேலியா தப்பும் தவறுமாய் போஸ்ட் போட்டு இருந்தாரு. .அதுக்கு திராவிட திம்மிகள் பதிலடி குடுத்துட்டே இருக்காங்க... வாழ்த்துகள்  அரக்கர்களே ...

எஸ் வீ சேகர் போஸ்ட்டோட பொய்மை தன்மை விளக்க படவும் வேண்டி இருக்கு....இந்துத்துவ தவறுகளை சுட்டி காட்டுவதோடு. திராவிடம் பற்றி அவர்  சொன்ன பொய்களை  அம்பல படுத்த வேண்டிய பொருப்பும்...அந்த வகையில்..

*1) மது ஆலைகளை நடத்தி கொண்டே மது ஒழிப்பு பேசுவது.*

இந்த நாட்டின் வெல் நோன் சாராய ஆலை அதிபர் மல்லையா ஒரு ப்ராமணர்..  தமிழ் நாட்டில் மிடாஸ்  அதிபர். சோ ஒரு ப்ராமணர்.   இந்த சோ வை தான் தன் குரு என்று சொல்லி கொள்கிறார் எஸ் வீ  சேகர் . சாராயம் இருக்க கூடாது   என்பது நோக்கம்... அதை தான் கலைஞர் போன தேர்தலில் அறிவித்தார் . திமுக ஜெயிச்சா சோ சம்பாத்தியம் போய்டுமேன்னு திமுகவ தோற்கடித்த ஆரியம்  தான் மது ஒழிப்பு பேசுது..காமெடி  ப்ராமண சாராய அதிபர்கள் தான் சம்பாதிக்கனும்  என்று சொல்கிறார் எஸ் வீ சேகர்....வாழ்த்துகள்..

*2. ஊரார் தாலியை மேடை போட்டு அறுத்துட்டு தன்  குடும்பம் தாலி கட்டி திருமணம்   நடத்துவது.*

எஸ் வீ சேகருக்கு சட்டமும் தெரியவில்லை .கலாச்சாரமும் தெரியவில்லை...மேடை போட்டு தாலி அறுக்கல..சட்டம் போட்டு தாலி தேவை இல்லன்னு சொன்னது திராவிடம்  சுயமரியாதை திருமண சட்டம் . தாலி தமிழர் கலாச்சாரம் இல்லை..  அதே சமயம் இந்துத்துவா மாதிரி யாரும் மாட்டிறைச்சி தின்னா வெட்டுவோம்னு திராவிடம் சட்டம் போடல...தாலி கட்டி திருமணம் நடத்த விரும்பிகிறவர்கள்  அப்படியே நடத்தி கொள்ள திராவிடம் எந்த தடையும் போடல...மேடை போட்டு தாலி கழட்டியதற்கு வருந்துகிறார் எஸ் வோ சேகர்... தாலி இல்லாத முண்டச்சி. .அமங்கலி.. மொட்டை பாப்பாத்தி என்று பெண்ணை ஒடுக்கியதில் இருந்து மீட்டது திராவிடம் தான்  என்பதை பெண்களாவது புரிந்து கொண்டால் நலம்..

*3 . சாதி மத ஒழிப்பு பேசி கொண்டே சாதி பார்த்து தேர்தலில் ஆட்களை நிறுத்துவது.*

சாதி பார்த்து ஆட்களை நிறுத்தியதற்கு ஆதாரம் தர முடியுமா திரு சேகர் ...  நீங்கள் மைலாப்பூரில் எந்த அடிப்படையில் தேர்தலில் நின்றிர்கள் ..ஏன் ஒரு முறை  திருவாருரில் நின்று காட்டுகளேன்... அனைத்து சாதியினரும் கலந்து வாழும் சென்னை திமுக கோட்டை...சாதி வெறி பிடித்த கொங்கு மண்டலம்  திமுகவை ஆதரிப்பதில்லை..இதிலிருந்தே அறியலாம் திமுக சாதியற்ற கட்சி என்பதை. 

*4 . ஏரி ,குளத்தை பட்டா போட்டு விற்று  காலி பண்ணிட்டு இன்று தூர் வாருதல்*

வெள்ளைகாரன் கிட்டேர்ந்து தமிழ் நாட்டை  தமிழன் கிட்டேர்ந்து பட்டா பிடுங்கிய  ஆரியம் தான் பட்டா களை ஆரம்பிதது வைத்தது  என்பதை  சேகருக்கு நினைவு படுத்த வேண்டி உள்ளது ...89 ல்.  திமுக தூர் வாரிய  குளங்கள் தான் இன்றும் குடி நீர் ஆதாரத்தை உறுதி செய்கிறது . .   இப்பவும் திமுக தான் தூர் வாற முன் நிற்பது..பார்ப்பனர்  இல்லை. குளம் குட்டை  ஆக்ரமிப்பில் பெரும் பகுதி பார்ப்பன கைகளில் தான் இருக்கிறது..இதோ  சென்னைக்கு அருகில் என்று   கடலூர் வரை  வூடு கட்டும் கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெணிகள் அனைத்தும் ப்ராமணர்களுடையது தான் என்பதை எஸ் வீ சேகர் மறுக்க தயாரா?

*5 .  சாதி மாறி கல்யாணம் செய்துக்க சொல்லிட்டு  தான் மட்டும் சொந்த சாதியில். திருமணம் செய்வது*

இந்த தகவலையும் தப்பும் தவறுமா சொல்லி இருக்கார் சேகர்...சாதி மாறி திருமணம் இல்லை...சாதி மறுத்து  திருமணம் செய்ய சொல்வது திராவிடம் .. கலைஞர்  வீட்டில் அனைத்து சாதியினரும் இருக்கிறார்கள். சேகர் வீடு போல் வேலைகாரர்களாய் இல்லை.. .உறவுகாரர்களாக கொண்டுள்ளார் கலைஞர் ... சேகர்  வேலைகாரர்  சாதி தெரிந்து வைத்திருக்கிறார்...கலைஞர்   அனைத்து சாதியும். சாதி யற்று வளரணும் என்று  சமத்துவபுரம் தந்தவர்.  இட ஒதுக்கீட்டில் தனக்கு எந்த லாபம் என்று பார்க்காமல் ஓட்டு சதவீதத்தில். பெரிய பலம்  இல்லாத அருந்ததியர் மக்களுக்கு உள் ஒதுக்கீடு  சட்டம் தந்தவர் கலைஞர்.

*6 .விஞ்ஞான ஊழல் ..2ஜீ ஊழல் என்று ஊழல் குற்றம் செய்து விட்டு ஊழலை ஒழிப்பதாக சொல்வது.*

சட்ட படி நிருபிக்க படாத ஊழலை செய்ததாக கூறும் எஸ் வீ  சேகர் மீது   அவதூறு வழக்கு பதிய திமுக. முயற்சிக்கனும் என்பது என் போன்றோர் ஆசை..இந்திய அரசியல் வரலாற்றில் முதல் ஊழல் வாதி கிருஷ்ண மேனன் என்ற ப்ராமணர் ..முதல்வரா இருந்து ஊழலுகாக தண்டிக்க பட்ட வர்  ஒரு ப்ராமண பெண் ..அந்த கட்சியில் நின்று தான் எஸ் வீ சேகர் அரசியலுக்கு  வந்தார் ..
 
*7 . தமிழ் தமிழ் என்று சொல்லி கொண்டு தமிழை அழிப்பது*

எவ்வளவு அப்பட்டமான பொய்  சி பி எஸ் சி பள்ளி தான்  மெரிட் என்ற மாய தோற்றத்தை உருவாக்கி   திராவிடம் தந்த  தமிழ் வழி  சமச்சீர் கக்வியை ஒழிக்க முயல்வது ப்ராமணியம்..சி பி எஸ் சி பள்ளிகள்  ஷேஷாத்ரிகளால் தான்  நடத்த படுகிறது... .தமிழை ஒழிக்க கங்கணம் கட்டி இந்தி திணிப்பை கொண்டு வருவது .இந்துத்துவா தான்.

  #இந்துத்துவா

No comments:

Post a Comment