Monday, July 31, 2017

யாதும் ஊரே யாவரும் கேளிர

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று தொடங்கும்
கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்று (192) பாடலை மேற்கோள் காட்டியது அய்யா சுபவீ  அவர்களின் இன்றைய ஒரு நிமிடச் செய்தி.

oOo
அதிலும் இன்றைய இளையதலைமுறையினர் அந்தப் பாடலை  படிக்கவேண்டும் என்று  அய்யா சுபவீ  அவர்கள் கூறியதில் பல்வேறு காரணங்கள் இருக்கும்மென்றெ தோன்றுகிறது.

oOo
கருத்தாழம் கொண்டு பாயும் நதியான அந்தப் பாடலின் கனத்தை என் சிறிய சிந்தனைக் குடம்
முழுதும் தாங்கப் போவதில்லை.

oOo
உங்கள் சிந்தனைப் பாத்திரம் ஏற்கின்ற அளவில் நீங்கள் பருகிக்கொள்ளுங்கள்.

oOo
“யாதும் ஊரே யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர்தர வாரா

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன

சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்

இன்னா தென்றலும் இலமே, மின்னொடு

வானம் தண்துளி தலைஇ யானாது

கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்

முறை வழிப் படூஉம் என்பது திறவோர்

காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமே,

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. ”(புறம்: 192)

oOo
பொருள் :

எல்லா ஊரும் எம் ஊர்
எல்லா மக்களும் எம் உறவினரே
நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை
துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை
சாதல் புதுமை யில்லை; வாழ்தல்
இன்பமென்று மகிழ்ந்தது இல்லை
வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை
பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல
இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று
தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்
ஆதலினால்,பிறந்து வாழ்வோரில்
சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை
பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.

No comments:

Post a Comment