Sunday, September 24, 2017

இறையாண்மைக்கு எதிராக எப்போதும் நான் பேசுவதே இல்லை

என் சோற்றுத் தட்டில்,
மலத்தை அள்ளி வைக்கிறான் அவன் !
உண்ண விருப்பமில்லையென்றால்,
தட்டைக் கழுவி வைக்கச் சொல்கிறான் ?

நான் ஒன்றும் பேசவே இல்லை !?

என் சகோதரியின் காலை அகற்றி,
அவள் யோனியை சாம்பல் கிண்ணமாக்குகிறான் !
இன்னும் இரண்டு சிகரெட்,
வாங்கி வரச்சொல்கிறான் என்னை ?

நான் ஒன்றும் பேசவே இல்லை !?

வெடிகுண்டு வைத்திருக்கிறாயா என்று,
ஒரு பெண்ணின் தனங்களை இறுக்குகிறான் !
அதில் பாலருந்திய மழலையைக் கொன்று,
என்னை எரிக்கச் சொல்கிறான் ?

நான் ஒன்றும் பேசவே இல்லை !?

கால்களற்ற என் உடல் அவன் காலடியில் கிடக்கிறது !
என் மார்பில் காலூன்றிக்கொண்டு சக இராணுவக்காரனிடம் !
என்னைக் குறித்துச் சொல்லிச் சிரிக்கிறான் ?

நான் ஒன்றும் பேசவே இல்லை !?

இறையாண்மைக்கு எதிராக
எப்போதும் நான் பேசுவதே இல்லை !!!

-பழநிபாரதி

No comments:

Post a Comment