Wednesday, September 6, 2017

பார்ப்பனரல்லாத இந்துக்களுக்கு அது தற்கொலை.

டான் அசோக்
Via Facebook
2017-09-06

அனிதா ஒரு இந்துப்பெண்.  அவளைக் கொன்றது இந்துராஷ்டிரம் அமைப்போம் என சூளுரைக்கும் இந்து அரசாங்கம். கொல்ல உதவி செய்ததோ எச்.ராஜா, குருமூர்த்தியை எல்லாம் ஒரு ஆளாக மதித்து கூலைக்கும்பிடு போடும் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள். அனிதாவின் மரணத்தை அவள் இறந்த நாளில் இருந்தே மிகக் கேவலமாகவும், கொச்சையாகவும், அயோக்கியத்தனமாகவும் சித்தரிப்பது இந்துத்துவவாதிகள்.  குறிப்பாக பார்ப்பனர்கள்.  நிற்க. 

இப்போது அனிதாவின் மரணம் ஏற்படுத்தியிருக்கும் நியாயமான கொந்தளிப்பின் காரணமாக, ‘நீட்’ முறை அட்மிஷனை ஏற்க முடியாது என தன் அட்மிஷன்களை நிறுத்தியிருக்கும் வேலூர் சி.எம்.சி கல்லூரியோ கிறித்தவக் கல்லூரி!  ஏன் இந்துத்துவ அமைப்புகள் எதுவுமே இறந்த இந்துப்பெண் அனிதாவுக்காக கொதிக்கவில்லை?  கொத்திருப்பார்கள்.  ஒருவேளை அனிதாவைக் கொன்றது ஒரு இஸ்லாமியனாகவோ, கிறித்தவனாகவோ இருந்தால் கொதித்திருப்பார்கள்.
இதுதான் காலம்காலமாக இந்தியா.

பார்ப்பனர்களுக்கு மட்டுமே கல்வி என்கிற முறையை மாற்றி எல்லோருக்கும் கல்வி கிடைக்க வழிசெய்த மெக்காலேவை ஏன் பார்ப்பனர்களும், அவர்களின் அடிமைகளும் எதிரியாக சித்தரிக்கிறார்கள்?

ஆஷ் துரை எனும் வர்ணாசிரம எதிர்ப்பாளனை கொன்ற வாஞ்சிநாத ஐயரை ஏன் தியாகி எனப் புகழ்கிறார்கள்? 

எல்லா சாதிகளிடமும் கல்வியைப் பரப்பிய கிறித்தவ மிஷனரிகளை ஏன் அடிவயிற்றில் இருந்து வெறுக்கிறார்கள்?

ஏன் கல்வி அளித்த கர்மவீரர் காமராசரை டெல்லியில் வைத்து உயிரோடு எரிக்கப் பார்த்தார்கள்?

ஏன் அனிதாக்கள் 1176 மார்க் எடுத்தால் ஒட்டுமொத்தமாக அந்த சிலபஸையே மோசம் எனச் சொல்கிறார்கள்? 

எல்லாவற்றுக்குமே பதில் ஒன்றுதான்.  இந்துதர்மத்தில் நீங்களும் நானும் படிக்கக் கூடாது.  அவாள் மட்டுமே படிக்கவேண்டும்.  இந்து ராஷ்டிரம் என்பது பார்ப்பன ராஷ்டிரம்.  இந்து தர்மம் என்பது பார்ப்பன தர்மம்.  இந்துத்துவா என்பது பார்ப்பனத்துவா!  கல்வி என்பது பார்ப்பனர்களுக்கானது.   உங்களையும் என்னையும் படிக்கவைப்பவன் எல்லோருமே அவர்களுக்கு துரோகிகள்.  அயோக்கியர்கள்.  அது மெக்காலேவாக இருந்தாலும், பெரியாராக இருந்தாலும், அம்பேத்கராக, காமராசராக, அண்ணாவாக, கலைஞராக, வி.பி.சிங்காக இருந்தாலும் அவர்கள் துரோகிகள். 

இனியாவது இந்துத்துவாவிற்கு கொடிபிடிக்கும் பார்ப்பனரல்லாத இந்துத்துவ அடிமைகள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்.  RSS/BJP/இந்துத்துவ ஆதரவாக நீங்கள் முழங்கும்போது உங்கள் சவக்குழியை நீங்களே வெட்டிக்கொள்கிறீர்கள் எனப் பொருள்.  உங்கள் உடலில்   நீங்களே பரம்பரை பரம்பரையாக உங்களை பாதிக்கப்போகும் நோய்க்கிருமியை புகுத்திக் கொள்கிறீர்கள் எனப் பொருள்.  மல்லாந்து படுத்து பார்ப்பனர்கள் நடப்பதற்கு ஏதுவான மெத்தையாக உங்கள் உடல்களை சமர்ப்பிக்கிறீர்கள் எனப் பொருள்.  மொத்தத்தில் இந்துத்துவா என்பது பிற மதத்தினருக்கு கொலை. பார்ப்பனரல்லாத இந்துக்களுக்கு அது தற்கொலை.

No comments:

Post a Comment