Saturday, April 21, 2018

ராமாயண ஆபாசம் - 2

Krishnavel T S
Via Facebook
2018-04-21

எனக்கு தெரிஞ்ச ஒரு ஊருல ஒரு பெரிய குடும்பம், கிட்டத்தட்ட நம்ம கே.எஸ்.ரவிகுமார் படங்களில் வரும் ராசப்பரம்பரை பண்ணையார் குடும்பம் என்று வைத்துக்கொள்ளுங்கள்
.
.
.
குடும்பத்தலைவருக்கு 3 பொண்டாட்டி நாலு பசங்க. இதை தாண்டி ஊரில் அவருக்கு பல தொடர்புகள் வேறு உண்டு என்பார்கள், தசரதன் போல 60,000 தொடர்புகள் என்று கூட சொல்லுவார்கள்.
.
.
.
தந்தையின் போக்கு பிடிக்காத மூத்த மகன் வேறு ஊருக்கு போய்விட்டான், தந்தை இறந்த பொது கூட நேரில் வரவில்லை.
.
.
.
தந்தை இறந்ததால் சொத்துகளை பிரிக்கவேண்டும், என்பதால், அவரது மூன்று மனைவிகள் மற்றும் தம்பிகள் இன்ன பிற உறவினர்கள் எல்லோரும் ஒரு தனி பேருந்து ஒன்றை ஏற்பாடு செய்துக்கொண்டு மூத்த மகனை சமாதானம் செய்து அழைத்துவர சென்றனர்,
.
.
.
பயணத்தின் போது, உறவினரில் பல ஆண்கள் பேருந்தின் தரையில் அமர்ந்தே பயணம் செய்துவந்தனர். ஏனடா அப்படி கீழே உட்கார்ந்து வந்தீர்கள் என்று கேட்டால் ரகசியமாக அவர்கள் சொன்ன பதிலால் எனக்கு “தலே சுத்திருச்சி”          
.
.
.
என்ன காரணம் என்று கேட்டால், இறந்த பெரியவரின் மனைவி மற்றும் அவரது மருமகள்கள் எல்லோரும் சுடிதாரும் டைட் லேக்கின்ஸ் அணிந்து வந்திருந்தனர், பேருந்து செல்லும் வேகத்தில் அவர்கள் எல்லோரும் உறங்கிவிட்டனர், அப்போது வேகமாக வீசும் காற்றில் அவர்களது சுடிதார் விலகி டைட் லேக்கின்ஸ் அணிந்த கால்களின் நடுவே அவர்களது புடைப்பான பெண்குறி தெரியும் அதை பார்த்துக்கொண்டே வந்தால் பயண அலுப்புத்தட்டாது அதனால் தான் அப்படி கீழே உட்கார்ந்து வந்தோம் என்றனர்.
.
.
.
.
அட அசிங்கம் புடிச்சவனே நாதாரி நாயே, அவர்கள் தான் நாகரீகம் இல்லாமல் ஒரு சாவுவீட்டில் வக்கிரபுத்தியோடு நடந்து கொண்டனர் என்றால், கொஞ்சம் கூட நாகரீகம் இல்லாமல் இதை இங்கே வந்து முகநூலில் சொல்கிறாயே நீயெல்லாம் சோறுதான் தின்கிறாயா என்று நினை கேட்க நீங்கள் நினைப்பது புரிகிறது,
.
.
.
இதை நான் சொல்லவில்லை சொன்னது, கம்ப ராமாயணத்தில் கம்பர்,
.
.
.
காட்டில் இருக்கும் ராமனை திருப்பி அழைத்துவர, ராமனின் அன்னையர் மூவர், பரதன் சத்ருக்கனன், அவர்கள் இருவர் மனைவியர், மற்றும் லட்சுமணனின் மனைவி ஆகியோர் படகில் செல்லும்போது, அவர்களுடன் வந்த போர் வீரர்கள் நடந்துக்கொண்ட விதத்தை தான் கம்பர் அப்படி விளக்கியிருப்பார்.

////////////////////////////////////////////////////////////////
இயல்வுறு செயல்வினாவா
யிருகையு மெயினர் தூண்டத்
துயல்வன துடுப்பு வீசித்
துவலை கண் மகளிர் மென்றூ
கயல்வுறு பரவை யல்கு
லொளி புறத்தளிப்ப வுள்ளத்
தயர்வுறு மதுகை மைந்தர்க்
கயா உயிர்ப் பளித்த தம்மா! 
////////////////////////////////////////////////////////////////

வார்த்தைக்கு வார்த்தை என்ன அர்த்தம் என்று முதலில் பார்ப்போம்.

இயல்வுறு செயல்வினாவா – மிக வேகமாக செல்லும் திறன் கொண்ட நாவாயின்(படகின்)

யிருகையு – இரண்டு பக்கமும்;  

மெயினர் தூண்டத் – வேடர்கள் தூண்ட; 

துயல்வன – அசையக் கூடிய;

துடுப்பு வீசித் - துடுப்புகளை வீச;

துவலை கண் – நீர்த்துளிகள் அதனால்;

மகளிர் மென்றூ – பெண்களின் மெல்லிய ஆடையில்;

கயல்வுறு – மறைகின்ற;

பரவை யல்கு லொளி – பரந்த அல்குல்(பெண்குறி)  ஒளி;

புறத்தளிப்ப – பளிச்சென்று ஒளி போல வெளியே தெரிய;

வுள்ளத் தயர்வுறு – உள்ளத்தில் அயர்வுற்ற;

மதுகை மைந்தர்க் – அயோத்தி வீரர்கள்;

கயா உயிர்ப் பளித்த தம்மா! – மனம் குதுகலம் அடைந்தம்மா;
.
.
.
அதாவது மொத்தமாக அர்த்தம் சொல்வதென்றால்....
.
.
.
இராமன் காட்டுக்குச் சென்றதாலும் தசரதன் மரணம் அடைந்தாலும், அயோத்தியில் இருந்த வீரர்கள் அனைவரும் சோகத்துடன் வெம்பிக் கிடந்தார்கள். அவர்களின் சோகத்தைக் குறைப்பதற்காக கங்கையின் அக்கரைக்குப் படகில் சென்று இராமனைக்காண செல்கிறார்கள், பயணத்தின் அலுப்பில் இருந்தார்கள் அவர்கள். வேடர்கள் படகின் துடுப்புகளை வேகமாக அசைக்க, அந்த அசைவில் ஆற்றின் நீர் சிதறி படகில் இருந்த அரசமங்கையரின் ஆடைகளை நனைத்தது. அப்படி நனைந்தபோது அவர்களின் பெண்குறிகள் பளிச்சென வெளியே தெரிந்தது, அந்த காட்சியை கண்ட வீர்கள் தங்கள் அலுப்பு நீங்கி குதுகுலம் அடைந்தார்கள்      
.
.
.
அட அசிங்கம் புடிச்சவனே நாதாரி நாயே, என்றெல்லாம் என்னை திட்ட நினைத்தவர்கள், புனிதமான என்று சொல்லபடுகின்ற ஒரு நூலில் இப்படி ஒரு காட்சியை வைக்கவேண்டுமா என்று கம்பனை கேளுங்கள், திட்டுங்கள் அல்லது இந்த காம நூலை உங்கள் பூசை அறையில் வைத்து புனிதம் அடையுங்கள்
.
.
.
கம்பர் சரக்கு வெர்சன்-2.ஓ – ரவுண்டு ஒன்று ஓவர் அடுத்த ரவுண்டு இன்று இரவு

https://m.facebook.com/story.php?story_fbid=10211496594356620&id=1416623901

No comments:

Post a Comment