Friday, April 6, 2018

ஷெத்த மூடுறேளா

Villavan Ramadas
2018-04-05, 2018-04-06
Via Facebook

------------------------------------------------------------
ஷெத்த மூடுறேளா!! #1.
------------------------------------------------------------

*பக்தாள்*
வேலை நிறுத்தம் செய்யறதுக்கு பதிலா ஒரு நாள் வேலை பார்த்து அந்த சம்பளத்தை விவசாயிகளுக்கு கொடுக்கலாமே??

*மக்கள்*
என்ன பண்றது சார், விவசாயிகள் பிச்சை கேட்டா அப்படி செய்யலாம். தன்மானம் உள்ளவங்க உரிமையை கேக்குறாங்க. அதுக்கு வேலை நிறுத்தம்தானே வழி.

கோவில் கருவறையில் நின்று பிச்சை எடுக்கிற நீங்க பிச்சகாரத்தனமாகத்தான் ஆலோசனை சொல்லுவீங்க, அதையெல்லாம் கேட்க முடியுமா?

------------------------------------------------------------
ஷெத்த மூடுறேளா! #2.
------------------------------------------------------------

*பக்தாள்*
மணல் திருட்டு, நகர சாக்கடைகளை ஆற்றில் கலப்பது, சாயக்கழிவுன்னு தமிழ் நாட்டு ஆறுகளை நாசம் பண்ணிட்டு இப்போ நதிநீருக்காக மத்திய அரசை கண்டிச்சு போராடுறது என்ன நியாயம்?

*மக்கள்*
வாஸ்தவம்தான். இதையெல்லாம் கடுமையா எதிர்த்திருக்கணும்தான், நாங்க தப்பு பண்ணிட்டோம். அது ஒருபக்கம் இருக்கட்டும், இப்போ நாங்க எல்லோரும் காவிரி உரிமைக்காக போராடுறோம். நீங்க அந்த மேற்படி பிரச்சனைக்காக போராடுங்க.

யாரு போராட்டம் மொதல்ல முடியுதோ அவங்க அடுத்த இஷ்யூல வந்து சேர்ந்துக்கலாம். ஏன் நீங்க ஆண்டாளுக்கும், பூணுலுக்கும் மட்டும்தான் ரோட்டுக்கு வருவீங்களா???

------------------------------------------------------------
ஷெத்த மூடுறேளா! #3
------------------------------------------------------------

*பக்தாள்*
குளோபலைசேஷனுக்கு பிறகு வேலைநிறுத்தம் எல்லாம் பிரயோஜனம் இல்லாம போயிடுத்து. அப்புறமும் ஏன் டைமை வேஸ்ட் பண்ணுறேள்??

*மக்கள்*
பெங்களூர் ஆயத்தை ஆடை தொழிலாளர்கள் ரெண்டுநாள் வேலைநிறுத்தம் பண்ணி மோடியோட புது பி.எப் சட்டத்தை வாபஸ் வாங்க வச்சாங்க. இன்னும் நிறைய சொல்ல முடியும்.

சரி உங்க வாதப்படி வேலைநிறுத்ததால 25 வருசமா பயன் இல்லைன்னு வச்சுக்குவோம். நீங்க 2000 வருசமா மணியாட்டுற ராமனாலயும், சிவனாலயும் என்ன மசிறு பிரயோஜனம் வந்தது?? ஆயிரக்கணக்கான பொணம் விழுந்ததுதான் மிச்சம். மொதல்ல அந்த தண்டத்துக்கு ஒரு வழி பண்ணிட்டு வாங்க. பந்த் பத்தி பிறகு பேசிக்கலாம்.!

------------------------------------------------------------
ஷெத்த மூடுறேளா! # 4
------------------------------------------------------------

*பக்தாள்*
அதிமுக அமைச்சர்கள் சொல்ற மாதிரி மோடியை நைஸ் பண்ணி காரியம் சாதிச்சுக்குறதுல உங்களுக்கு என்ன பிரச்சினை?

*மக்கள்*
கூட்டிக்கொடுத்து வாழ்ந்தா நல்லா இருக்கலாம்தான். கூட்டிக்கொடுத்துத்தான் வாழனுமாங்குற சொரணைத்தான் எங்க பிரச்சினை.

------------------------------------------------------------
ஷெத்த மூடுறேளா ! #5
------------------------------------------------------------

*பக்தாள்*
ஒரு வாரமா கத்துறீங்க. ஆனாலும் மத்திய அரசு அசரல... பார்த்தீங்களா??!!

*மக்கள்*
நீங்க 70 வருசமா வளர்த்த தேசபக்திங்குற தொத்த மாட்டை இங்க அத்தனை பேரும் செருப்பால் அடிக்கிறானே, அதை நீங்க பார்த்தீங்களா??!!

------------------------------------------------------------
ஷெத்த மூடுறேளா! #6.
------------------------------------------------------------

*பக்தாள்*
ஆர்எஸ்எஸ் காரர் துணைவேந்தரானா என்ன நடந்துரும்? ஏன் இப்படி பயப்படுறீங்க?

*மக்கள்*
ஏன், ஒரு ஆர்.எஸ்.எஸ்காரன் பிரதமராகி என்னவெல்லாம் நடக்குதுன்னு பார்க்குறோமே,, அது பத்தாதா??

ஆர்எஸ்எஸ் காரனுங்க தற்கொலை பண்ணிக்கிறதைதவிர வேற எதை செஞ்சாலும் அதை எதிர்த்துத்தான் ஆகணும்.

------------------------------------------------------------
ஷெத்த மூடுறேளா ! #7
------------------------------------------------------------

*பக்தாள்*
நீங்க என்ன கத்தினாலும் ஜெயிக்க முடியாது.

*மக்கள்*
டேய், போராடுற எல்லாருமே ஜெயிப்பான் இல்ல தோப்பான். அது ஒரு விளைவு அவ்வளவுதான். ஆனா மோடி, ஆர்.எஸ்.எஸ் போன்ற எச்சை கும்பலுக்கு பணிஞ்சு போகமாட்டோம்ங்கறது ஒரு அடையாளம், பெருமிதம். மூத்திரத்தை குடிக்கிற உங்களுக்கு அது புரியாது.

------------------------------------------------------------
ஷெத்த மூடுறேளா ! # 8.
------------------------------------------------------------

*பக்தாள்*
தோற்கப்போறதுக்கு இவ்ளோ பில்டப்பா?

*மக்கள்*
கட்டின பொண்டாட்டிடையும், பெத்த அம்மாவையும் சதிங்குற பேர்ல 2000 வருஷமா நெருப்புல தள்ளினீங்க. நாங்க அதை தடுக்க வழியத்து தோத்துப் போனோம். நாங்க அந்தத் தோல்வியை தைரியமா யார்கிட்ட வேணாலும் ஒத்துக்குவோம். எங்க நீ உங்க 2000 வருஷ வெற்றியை உன் பொண்டாட்டிகிட்ட மட்டுமாவது பெருமையா சொல்லேன் பார்ப்போம்.

------------------------------------------------------------
ஷெத்த மூடுறேளா ! # 9.
------------------------------------------------------------

*பக்தாள்*
காவேரி விவகாரத்துல மத்திய அரசு துரோகம் பண்ணிடுத்துன்னே இருக்கட்டும். அதுக்காக தேசிய ஒருமைப்பாட்டை பாதிக்கிற மாதிரி பேசுறது நியாயமா?

*மக்கள்*
காவிரி துரோகம் சீசனுக்கு சீசன் பண்றது. ஆனா தேசிய ஒருமைப்பாடுங்குற பேர்ல நீங்க பண்றது  தினசரி துரோகம். நாங்க இந்த தேசபக்தியை மொதல்ல டீல் பண்ணிருந்தா காவிரி பிரச்சினை எப்பவோ தீர்ந்திருக்கும்.

No comments:

Post a Comment