Friday, April 13, 2018

குழந்தைகளுக்கு ஆயுதங்களைக் கையாளக் கற்றுத்தரப் போகிறேன

Samsu Deen Heera
Via facebook
2018-04-13

இந்தப்பூமியில் பிறந்த எல்லா உயிர்களுக்கும் உயிர் வாழும் உரிமை உண்டு. மனிதன் தவிற மற்ற எல்லா உயிரினங்களும் தன்னைத் தற்காத்துக்கொள்ள உடலையே ஆயுதங்களாகப் பயன்படுத்துகின்றன.

"அரசுகளின்'' தோற்றம் வரை ஆரம்பத்தில் தற்காப்புக்காகவோ, வேட்டைக்காகவோ ஆயுதங்களைப் பயன்படுத்திய மனிதர்கள், இந்தச் சமூக அமைப்பின்மீதும் அரசின்மீதும் கொண்ட நம்பிக்கையின் அடிப்படையில்தான் படிப்படியாக ஆயுதங்களைக் கைவிட்டார்கள்.

அரசுகளின் வாக்குறுதிகள் பொய்க்கும்போது மனிதர்கள் மட்டும் இந்த அமைப்பின் விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டுமென்று சொல்வது இயற்கைக்கே முரணானது.

வலியவை மட்டுமே உயிர்வாழ முடியுமென்றால் வலிமையைப் பெருக்கிக் கொள்வதெங்கள் உரிமை.

வேறு வழியே இல்லை.. நாளையிலிருந்து என் குழந்தைகளுக்கு ஆயுதங்களைக் கையாளக் கற்றுத்தரப் போகிறேன்.

#JusticeForAsifa

https://m.facebook.com/story.php?story_fbid=1945343838870428&id=100001844931721

No comments:

Post a Comment