Tuesday, April 10, 2018

சீமானும்_திருமுருகனும் ஒன்னா பயணிக்கனும் - முடியுமா

தமிழ்க்கவி கருவூர்
Via Facebook
2018-04-09

புதுசா சில பேர் #சீமானும்_திருமுருகனும் ஒன்னா பயணிக்கனும்,அப்ப தான் தமிழ்நாட்டுக்கு நல்லதுனு எழுதறாங்க,,,

இவங்க சீமானின் பேச்சையும்,தோழர் திருமுருகனின் பேச்சையும் YouTube,WhatsApp இல் மட்டும் கேட்டு பேசறவங்கனு நினைக்கறேன்,,,

அவர்கள் நாம் தமிழர்,மே 17 இயக்கத்தின் கொள்கை பற்றியோ,,கள அரசியல் பற்றியோ தெரியாதவங்கனு நினைக்கறேன்,,

அவங்களுக்காக இந்த பதிவு,,,

மே 17 இயக்கம் தமிழக அரசியலுக்கு பெரியாரையும்,ஈழ அரசியலுக்கு பிரபாகரனை தலைவர்களாக ஏற்று பயணிப்பவர்கள்,,,

இன்னும் சொல்லப் போனால்,,,பெரியாரிய இயக்கத்தை போலவே,,மே 17 இயக்கமும் தமிழர்களின் அனைத்து பிரச்சனைக்கும் இங்கே காரணம் #ஆரிய_பார்ப்பனக்_கூட்டம் தான் என உறுதியாக நம்புபவர்கள்,,,

மேலும் திராவிடமும்,பெரியாரியலும் தான் தமிழ்தேசியத்தை அடைய வழி,,,அதை தவிர்த்துவிட்டு தமிழர்களின் எதிரியான பார்ப்பனியத்தை வீழ்த்தி,,,தமிழ்தேசிய அரசியலை முன் நகர்த்த முடியாது என்பவர்கள்,,,

இந்தியாவிற்கு அடிமையாக தமிழ்நாடு இருக்கும் வரை இங்கே நமது விடுதலை உறுதி செய்யப்படாது என்பவர்கள்,,,

அதனால் இந்திய அரசிற்கு அடிமையாக செயல்படும் தேர்தல் அரசியலில் பங்கேற்பது தமிழ்தேசியமல்ல,,,இயக்க அரசியல் மூலம் இந்திய பாசிசத்தை வீழ்த்துவதே தமிழ்தேசியத்திற்கான வழி என்பவர்கள்,,,

ஆனால் #சீமானும் #நாம்தமிழரும்,,,,

மே 17 இயக்கத்தினர் ஆதரிக்கும்,, பெரியாரையும்,,திராவிடத்தையும் எதிர்ப்பவர்கள்,,,,

தமிழர்களின் ஒற்றை பகைவராக மே 17 இயக்கத்தினர் எதிர்க்கும்,,,ஆரிய பார்ப்பனர்களை சுத்த தமிழர்கள் என்பவர்கள்,,,

தனித்தமிழ்நாட்டை முன் வைக்காமல்,,,இந்திய அரசிடம் அடிமையாய் பெரும் முதலமைச்சர் பதவியை அடைவதே லட்சியமாக கொண்டவர்கள்,,,இந்தியத்தை எதிர்க்காமல்,,அந்த முதலமைச்சர் பதவி கிடைத்தால் எல்லாம் சரியாகிவிடும் எனக் கூறி இளைஞர்களை இந்தியத்திற்கு ஆதரவாக மடைமாற்றுபவர்கள்,,,

சுருக்கமாக சொல்வதென்றால்,,,நாம் தமிழர் கூட்டம்,,,பெங்களூர்_குணா மபொசி ஆகியோரை தலைவர்களாக கொண்ட #வலதுசாரி_போலி_தமிழ்தேசியவாதிகள்

ஆனால் மே 17 இயக்கமோ,,, பெரியாரியலை,மார்க்சியத்தை,அம்பேத்கரியத்தை ஏற்று நடக்கும் #இடதுசாரி_தமிழ்தேசியவாதிகள்

இப்படி இருக்க ,,சீமானும்,திருமுருகனும் ஒன்றாக சில பேரால் எப்படி பார்க்கப்பட்டிருக்குமானால்,,,

சீமான் எப்படி பெரியாரிய மேடையில் பேசுவதை காப்பி அடித்தும்,,தலைவர்களின் பொன் மொழிகளை மனப்பாடம் செய்தும் தனது மேடையில்  பேசுவது போல,,,,

மே 17 இயக்கத்தினர் பல மாதங்களுக்கு முன் பேசிய ரேசன் கடை மூடல்,,,ஆதார் கார்டு பற்றிய செய்திகளை சமீபகாலமாக சீமான் காப்பி அடித்து பேசி வருகிறார்,,,

அதனாலேயே சீமானும்,திருமுருகனும் ஒன்றாக மாட்டார்கள்,,,,

புரியுதோ!!!!

(மீள்)
தோழர் மனோஜ்

https://m.facebook.com/story.php?story_fbid=183783209011279&id=100021388023203

No comments:

Post a Comment