Friday, April 27, 2018

திமுக ஆட்சி ஏன் கலைக்கப்பட்டது

Babu Vmk
2018-04-27

ஊழலுக்காக கலைக்கப்பட்டது திமுக ஆட்சி - எனக்கூறு கூமுட்டைகள் (ஜெயக்குமார்) போன்றோர்க்கு இப்பதிவு ஆதரத்துடன் சமர்ப்பணம்.

ஆதாரங்கள் கமெண்டில்

முதல் விஷயம், 1976 ஜனவரி 31 ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்ட போது கவர்னர் கொடுத்த அறிக்கையில் ஊழலுக்காக திமுக ஆட்சி கலைக்கப்படுகிறது என்று எந்த ஒரு வார்த்தைகளும் இல்லை. (ஆதாரம்- படம்)

இரண்டாவது, சில முட்டாள்களின் வாதப்படியே ஊழலுக்காக ஆட்சி கலைக்கப்பட்டது என்றால், திமுக மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டு அதனை விசாரிக்க இந்திராகாந்தியால் சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்ட நாள் 1976 பிப்ரவரி 3ம் தேதி. திமுக ஆட்சி கலைக்கப்பட்டது 1976 ஜனவரி 31ம் தேதி. திமுக ஆட்சி கலைக்கப்பட்டு 3 நாட்கள் கழித்து தான் சர்க்காரியா கமிஷனே அமைக்கப்பட்டது.

சர்க்காரியா கமிஷனும் அமைக்கப்படவில்லை, அதன் இறுதி அறிக்கையும் வருவதற்கு முன்பே ஊழலுக்காக எப்படி திமுக ஆட்சியை கலைக்க முடியும். சர்க்காரியா கமிஷனால் திமுக மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லை அது வேறு விஷயம். புகார் கொடுத்த எம்ஜிஆரை சர்க்காரியா விசாரணைக்கு அழைத்த போது எனக்கு எதுவும் தெரியாது என்று விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகாமல் எம்ஜிஆர் ஓடினார் என்பது அதைவிட பெரிய சோகம். ஊழல் குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்படுவதற்கு முன்பே ஆட்சியை கலைக்க முடியும் என்றால் இந்தியாவில் ஒரு ஆட்சி கூட நடக்காது. குறிப்பாக எம்ஜிஆர், ஜெயலலிதா தொடங்கி எடப்பாடி வரை அதிமுவின் ஆட்சி ஒருநாள் கூட நடந்திருக்க முடியாது.

சரி.. எதற்கு திமுக ஆட்சி கலைக்கப்பட்டது..? அதற்கு பல காரணங்கள் உண்டு.

🌄1974-ல் மாநில முதல்வர்களுக்கு தேசியக் கொடியை ஏற்றும் உரிமை வேண்டும் என்று இந்திராகாந்தியிடம் வாதாடி பெற்றது. (1970 ஆகஸ்ட் 27லேயே டெல்லியில் வைத்து தமிழகத்திற்கு என தனிக் கொடியை கலைஞர் அறிமுகப்படுத்தினார். அதன் விளைவாகத்தான் பின்னாளில் முதல்வர்களுக்கும் தேசியக் கொடி ஏற்றும் உரிமைக்கு இந்திராகாந்தி ஒத்துக் கொண்டார்.)

🌄1974 ஏப்ரல் 20ல் தமிழக சட்டமன்றத்தில் திமுக மாநில சுயாட்சி தீர்மானத்தை நிறைவேற்றியது.

🌄1975 ஜூன் 12-ஆம் தேதி இந்திராகாந்திக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிறது. தஞ்சையில் சுற்றுப்பயணத்தில் இருந்த கலைஞர் இந்திராகாந்தி பதவி விலக வேண்டும் என்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

🌄1975 ஜூன் 27ம் தேதி திமுக செயற்குழுவில் எமர்ஜென்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

🌄1975 ஜூலை 21 தேதி மக்களவையிலும், மாநிலங்களவையிலும் திமுக எம்பிக்கள் எமர்ஜென்சிக்கு எதிராக கண்டன குரல் கொடுத்தனர். [அப்போது பேசிய இந்திராகாந்தி தமிழகமும் (திமுக ஆட்சி) , குஜராத்தும் (ஸ்தாபன காங்கிரஸ் ஆட்சி) தனி தீவாக செயல்படுகிறது என்று கடுமையாக எச்சரித்தார்]

🌄1975 ஆகஸ்ட் 9,10 மற்றும் டிசம்பர் 28ல் நடைபெற்ற திமுக மாநாட்டில் எமர்ஜென்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
[இந்த மாநாடுகளுக்கு பிறகு பம்பாயில் நடந்த கூட்டத்தில் பேசிய இந்திராகாந்தி, ஆர்எஸ்எஸ், ஆனந்த்மார்க், நக்சலைட்டு இயக்கங்கள் போல திமுக தடையை செய்யப்பட வேண்டும் என்றார்.]

🌄இந்திராகாந்திக்கு எதிராக இப்படியெல்லாம் கலைஞர் செயல்பட்ட காரணத்திற்காகத்தான் 1976 ஜனவரி 31ம் தேதி திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. [15 நாட்களுக்கு பிறகு 1976 பிப்ரவரி 15ம் நாள் சென்னை கடற்கரை கூட்டத்தில் பேசிய பிரதமர் இந்திராகாந்தி, இலங்கையுடனான இந்தியாவின் நட்புறவு கெடுவதற்கு கருணாநிதி தான் காரணமாக இருக்கிறார் என்றார். திமுக ஆட்சி கலைக்கப்பட அதுதான் காரணம் என்றால், அதைவிட பெருமையான விஷயம் திமுகவிற்கு இருக்க முடியாது என்று கலைஞர் பதிலளித்தார்.]

மேலும் சில ஆதாரங்கள் கமெண்ட்ஸ் பகுதியில்...

பி.கு :-
இந்தியாவிலேயே ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால்  இரண்டு முறை முதல்வர் பதவியை இழந்து, கடைசியில் 4 வருட சிறை தண்டனையும் 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்ட தண்டனைக் குற்றவாளி ஜெயலலிதாவை தலைவியாக வைத்துக் கொண்டு ஊழல் பற்றியெல்லாம் அதிமுக பேசலாமா...? ஊழல் பற்றி பேச கொஞ்சம் கூட வெக்கம் மானம் சூடு சொரணை வேண்டாம்...

பதிவு: Babu Vmk

https://m.facebook.com/story.php?story_fbid=882496378617802&id=100005723441988

No comments:

Post a Comment