Wednesday, April 4, 2018

அத்தனை பேரும் Potential Rapist தான்

ஈசன் சித்தன்
Via Facebook
2018-04-04

*அத்தனை பேரும் Potential Rapist தான்*

'வன்புணர்தல்' செய்வதற்கு  அதீத பாலியல் வேட்கை, பழிவுணர்ச்சி, சாதிய ஆதிக்கம், ஆணாதிக்கம் என்பதையும் தாண்டி  'இன்னதென்று  கூட கணக்கிட முடியாத' ஒரு கொடூர மனநிலையினை இது போன்ற வன்புணர்வுகளில் ஈடுபடுவோரை தொடர்ந்து கவனித்தால் நமக்கு புரியவரும்.

இதுவரையில் சமூகத்தில் நடந்த சில பாலியல் வன்புணர்வுகளை இங்கே நினைவுகூற விரும்புகிறேன்.அதன் பிண்ணனியில் இருக்கும் மனோநிலையினை நீங்களே கணித்து எனக்கு கூறுங்கள்,

1. தன் குடிகார அப்பாவாலேயே அடித்து மிரட்டி தினம்தினம் வன்புணரப்படுகிறாள் அந்த இளம் பெண்.அம்மாவை சிறுவயதிலேயே இழந்துவிட்டவர்.கூட பிறந்தவரும் யாருமில்லை.இந்த கொடுமையை யாரிடம் கூறுவதென்று கூட தெரியவில்லை.ஒரு சந்தர்பத்தில் அப்பெண் கற்பமாக.இனிமேல் இவளை விட்டால் ஆபத்து என அவளின் தந்தையே அவளை வீட்டைவிட்டு அடித்து விரட்டி விடுகிறார்.

2. மனநலம் சற்று பிறழ்ந்த தன் குடும்ப பெண்ணையே வீட்டிலேயே கட்டி வைத்து அப்பாவும், மகனும் ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவர் என மாறி மாறி அந்த பெண்ணை  பல மாதங்கள் வன்புணர்கின்றனர்.ஒரு கட்டத்தில் அந்த பெண் மரணமடைகிறார்.

3. அப்பா இல்லாத பெண்.தன் இரண்டு சகோதரர்களாலே வன்புணரப்படுகிறாள்.தட்டி கேட்ட தாயையும் அவர்கள் கொடூரமாக சகோதரியின் கண் முன்னாலேயே அடித்து கொலைசெய்கிறார்கள்.அந்த இரண்டு ஆண்களும் கஞ்சா அடிமைகள் என தெரியவருகிறது.

4. தன் காதலனோடு சுற்றுலா செல்கிறாள்.அடர்ந்த காட்டிற்குள் சென்றதும் காதலன் உறவுகொள்ள அழைக்கிறான்.இவள் மறுக்கவே ஆத்திரமடைந்த அவன், அருகில் இருந்த பாறையில் அவளின் தலையை மோதி, இரத்தவெள்ளத்தில் அவள் இறந்துவிட, இறந்தும் கூட அவளை விடாமல் அதே நிலையிலேயே அவளை புணருகிறான்.

5.இரண்டாம் வகுப்பு படிக்கும் குழந்தையை தினம் பள்ளிக்கு கூட்டி செல்லும் ஆட்டோ டிரைவர் அன்று அந்த குழந்தையை யாருமில்லா தனிமைக்கு அழைத்து சென்று, குழந்தை கத்தாமல் இருக்க கைக்குட்டையை தொண்டை வரை திணித்தவுடன் குழந்தை மூச்சிமுட்டி இறக்க, தன்வெறி அடங்கும் வரை வன்புணர்ந்துவிட்டு சடலத்தை பாலத்தின் அடியில் வீசிவிட்டு செல்கிறான்.

6. தலித் பெண்ணை காதலிப்பதாக ஆதிக்க சாதி ஆண் அவளை தனிமையான இடத்திற்கு சென்று தன் நண்பர்களுடன் சேர்ந்து அவளை வன்புணருகிறான்.அப்போதும் வெறி அடங்காமல் அருகில் இருந்த கரும்பை வெட்டி அவளின் யோனிக்குள் வைத்து உள்ளே அடித்து முழுகரும்பையும்உள்ளே செல்லும் வரை அடித்து கொடூரமாக கொலைசெய்கிறான்.

7.ஐடி ஒர்க் முடிந்து இரவு தனியே வந்த பெண்ணை அருகில் உள்ள காட்டுக்குள் தூக்கி சென்று நான்கு பேர்அவளை மாறி மாறி வன் புணருகின்றனர்.மது போதையின் உச்சத்தில் அவர்கள் அந்த பெண்ணின் மார்புகளை அறுத்து கொலை செய்கிறார்கள்.

8. தண்ணீர் கேட்டு நிற்கும் வழிப்போக்கன்களான இளைஞர்களுக்கு தண்ணீர் எடுத்துவர வீட்டிற்குள்ளே சென்ற மூதாட்டியை பின்னே தொடர்ந்து  உள்சென்று நான்கு இளைஞர்களும் கூட்டாக வன் புணருகின்றனர். அதிர்ச்சியிலேயே மூதாட்டி  மரணிக்கிறார்.

இன்னும், வீடில்லாமல் சாலையோரம் குடியிருக்கும் பெண்கள், வெளியூர்களுக்கு கூலி வேலைக்கு செல்லும் பெண்கள், அநாதை இல்லம்,முதியோர் இல்லம், தங்கும் விடுதிகள் மற்றும் அரசு மருத்துவமனையில் கவனிப்பாரற்று கிடக்கும் பெண நோயாளிகள் என எல்லோரும் வன்புணரப்பட்டுகொண்டே தான் இருக்கிறார்கள். இந்த பதிவுக்கு என்ன முடிவுரை எழுதவேண்டும் எனபதை எல்லாம் இந்த சமூகத்தின் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன்.

     ஆனால் ஒன்ற மட்டும் என்னால் உறுதியாக சொல்லிவிட முடியும்,

*அப்பாவோ, அண்ணனோ, தம்பியோ, உறவினனோ, நண்பனோ, காதலனோ, வழிப்போக்கனோ யாராக இருந்தாலும் அத்தனை பேரும் Potential Rapist தான்*

சூழ்நிலையும், வாய்ப்பும் அமையும் போது கிட்டதட்ட எல்லா ஆண்களும் ஒரே மாதிரி தான் செயல்பட தொடங்கிவிடுகின்றனர் - என்பதுதான் ஏற்கவே முடியாத 'உண்மை'.

https://m.facebook.com/story.php?story_fbid=1956728307975315&id=100009144932765

No comments:

Post a Comment