Sunday, April 29, 2018

அறிவுக்குப் பொருந்தாத பிறப்புகளாக இல்லையா?

செ. பா. செல்வம்
2018-04-29

வால்மீகி பாம்புப் புற்றில் பிறந்தார். அஸ்வத்தாமன் குதிரை வயிற்றில் பிறந்தார். மாண்டவ்யர் தவளையிடம் பிறந்தார். சவ்னகன் நாயிடம் பிறந்தார். கவுதமர் பசுவினிடம் பிறந்தார். அகஸ்தியர் பானையில் பிறந்தார். காங்கேயன் கழுதையிடம் பிறந்தார். பிரமன் தாமரையில் பிறந்தார். இலஷ்மி கடலில் பிறந்தாள். பார்வதி மலைக்குப் பிறந்தாள். மச்சகந்தி மீனிடம் பிறந்தாள். கணபதி யானைக்குப் பிறந்தார். விரலில் கங்கை பிறந்தாள். கொட்டாவியில் சிந்தூரன் பிறந்தான். தும்மலில் குபன் பிறந்தான். கண்ணீரில் வாநரன் பிறந்தான். உரோமத்தில் உரோமாஞ்சன் பிறந்தான்.
இவை அறிவுக்குப் பொருந்தாத பிறப்புகளாக இல்லையா?

இவ்வாறாக ஆணை ஆண் புணர்வதும், மிருகப் புணர்ச்சி செய்வதும், மகளைத் தந்தை புணர்வதும், பெற்ற தாயைத் தனயன் புணர்வதும், பிறர் மனைவிகள் மீது மோகங்கொண்டு கற்பழிப்பதும், பிற புருஷர் மீது காமுற்றுக் கூடுவதும், திருட்டு, மது அருந்துதல், சூதாடுதல், கொலை செய்தல், பருவமெய்தாக் கன்னிப் பெண்களைக் கற் பழித்தல், அறிவுக்குப் பொருந்தாத விபரீதங்களைக் கூறுதல் ஆகிய திருவிளையாடல்கள் இன்றும் ஆரியர் களுடைய புராண - இதிகாச - சாஸ்திரங்களில் மலிந்து கிடப்பதைக் காணலாம்.

என்ன குருமூர்த்தி மீtநீ களே! இவை போதுமா, இன்னும் வேண்டுமா?

இவைதான் உங்கள் தெய்வங்களா? தெய்வ நூல்களா? இவற்றை இன்று வரை இம்மியளவும் பிசகாமல் தூக்கிச் சுமக்கின்றீர்களே - தெய்வாம்சம் என்று கண்ணில் ஒத்திக் கொள்கிறீர்களே - இதன் மூலம் உங்கள் தகுதி, தரம், ஒழுக்கம், பண்பாடு எந்தத் தரத்திலிருக்கிறது என்பது விளங்கவில்லையா?

இவற்றை நம்பும், மதிக்கும், தொழும், கடைபிடிக்கும் உங்களிடம் நல்லொழுக்கத்தை எதிர்பார்க்க முடியுமா?

தனி மனிதனைத் தொடர்ந்து சமூகத்தில் நல்லொழுக் கத்தை, கலாச்சாரத்தை சீரழிப்பது, வாழையடி வாழையாக வந்த குருதியில் குமிழுகின்ற மரபணுக்களில் கலந்த இந்தக் கேடு கெட்ட இந்துத்துவக் குணாம்சங்கள் தானே காரணம்? உங்களின் ஜெகத் குருக்களே மடத்துக்கு வந்த பெண்ணின் கையைப்பிடித்து இழுக்கவில்லையா?

இந்த இலட்சணத்தில் இந்த ஆபாசங்களை, அரு வருப்பை, ஒழுக்க மீறல்களை, மனிதத் தன்மைக்கு எதிரான வைகளை மக்கள் மத்தியில் எடுத்துரைத்து மனமாற்றம் செய்து வருகின்ற, பகுத்தறிவுச் சிந்தனையை ஊட்டுகின்ற ஓர் இயக்கத்தை - அதன் தோற்றுநரைத் தூற்றுவது சரியானதுதானா? அந்தத் தூற்றல்காரர்களைத் தோலுரிப்பது நல்லோரின் கடமையல்லவா?

எதையும் தலை கீழாகப் புரட்டிப் பேசுவதுதான் குரு மூர்த்திகளே உங்கள் புத்தியா? ஓடாதே நில்லும் - நாளையும் சாட்டை சுழலுகிறது

https://m.facebook.com/story.php?story_fbid=1768640393158352&id=100000372247445

No comments:

Post a Comment