Wednesday, November 30, 2016

பேரழிவு (15) - டெக்னாலஜியை எதிர்க்க நான் யார்... என் மீது திணிக்க நீங்கள் யார்...!!!

Saravana Kanth
via facebook
2016-Nov-30
டெக்னாலஜியை எதிர்க்க நான் யார்... என் மீது திணிக்க நீங்கள் யார்...!!!

என் வீட்டில் லேண்ட்லைன் போன் இருந்தது. இப்போது இல்லை. என்னவாயிற்று...? யாரும் இரவோடு இரவாக வந்து லேன்ண்லைன் போனை தூக்கி சென்றுவிட்டார்களா ? இல்ல இனி செயல்படாது என அறிவித்து என்னை செல்போன் வாங்க வைத்தார்களா ? இல்லையே. அலைபேசியின் பயன்பாடுகள், வசதிகள் என்னை ஈர்த்தது உடனே வந்துவிட்டேன்.

என் வீட்டின் சைக்கிள் இருந்தது. இதுவும் அப்படியே யாரும் தூக்கி செல்லவில்லை.. இனி சைக்கிள் இருந்தால் செல்லாது பழைய இரும்பு கடையில் போட்டுவிட்டு.. பைக் வாங்குங்கள் என சொல்லவில்லை.. அதன் உபயோகம் அதனால் கிடைக்கும் பலன் என்னுடைய பொருளாதாரம் பார்த்து இப்போது பைக் ஓட்டுகிறேன். இதுதான் மாற்றம்.

என்னை கேஷ் எகானமிக்கு கொண்டுவரவிரும்பினால்... வசதிகளை கொடு. நாம் சம்பாரித்த பணத்தை நான் எடுக்க வங்கியில் கமிஷன் கொடுக்கிறேன். கொடுத்து எடுத்த பணத்தில் பெட்ரோல் போட்டால் அதற்கும் வரிகட்டுகிறேன். (இதில் 27ரூ. எதற்கு என்றே தெரியவில்லை. காங்/பிஜேபி இரண்டும் அழுத்தமாய் கொள்ளையடிக்கிறது). அந்த வண்டியில் ஹோட்டல் சென்று சாப்பிட்டால் அதற்கும் வரி கட்டுகிறேன். இதில் என்ன கொடுமையென்றால்.. சாலைவரி வண்டி வாங்கும் போதும்.. ஒவ்வொரு முறை சுங்கச்சாவடி கடக்கும் போதும்.. பெட்ரோல் போடும் போது கட்டுகிறேன். ஆனால் நான் தூசுகளின் ஊடாக செல்கிறேன்... இது போக பெரும்பாலான பொருட்களில் 1% கல்வி வரி கட்டுகிறேன். ஆனால் எங்கள் ஊரில் அரசு பள்ளியில் ஆசிரியரே வாறுகாலில் கால்பரப்பி நிற்கிறார்...?

ஆக இதுவரை கட்டுன வரி எங்க ? நீ தூக்கி பணக்காரனுக்கு கடன் கொடுப்ப.. அப்புறம் வைப்டு ஆஃப்... ரைட் ஆஃப்ப்... வராக்கடன்னு கதைவிட்டு கழிச்சிடுவா..? ஆனா என்னோடு ஜூவல்ஸ்லோன் வாங்க வீட்டுக்கு கார் எடுத்து வருவ... எஜூகேசன் லோனுக்கு அடியாள் அனுப்புவ...

200 ரூ பெட்ரோலுக்கு ரூ 37 தண்டமா வரிகட்றேன்... இது கார்டு யூஸ்பண்ணா 11.50ரூ எக்ஸ்ரா கட்றேன்... இது போக அது வேற வங்கி கார்டா இருந்தா... எக்ஸ்ட்ரா புடுங்குவா... இது போக அந்த கார்டுல செய்ற மொத்த செலவுக்கு ஒரு கமிஷன் போடுவா... ? நீ அரசாங்கம் நடத்திரியா இல்லை புடுங்கி திங்கிறியா ?

லண்டன்ல சம்பாத்தியத்தில 60% வரிக்கே போகுதாம். கியூபாவுலயும் அப்படித்தான். ஆனா அங்க வசதி செஞ்சு கொடுத்துட்டு வாங்குறான். இங்கே வசதி செஞ்சுதாரோம்னு வாங்கி... ஒன்னியும் புடுங்கல... இதுல எனக்கு அட்வைஸ் பண்றே...? என்ன செஞ்சிருகனும்...?

கார்டு யூஸ் பண்ணா மொத்தம் இவ்ளோ ரூபாய்க்கு இவ்ளோதான் கமிஷன்.. ஒவ்வொரு கடைக்கும் கமிஷன் இல்லைனு சொல்லியிருக்கணும்...

ஒவ்வொரு வங்கியும்..இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமில்லை.. பிராந்திய மொழிகள்ளையும் பரிவர்த்தனை நடத்தனும் சொல்லியிருக்கனும்...

தவறான பரிவர்த்தனை அல்லது செல்லுபடியாகத பரிவர்த்தனை நடந்தா..7 தினங்களுக்குள் பணம் கொடுக்கப்படும்னு சட்டம் கொண்டுவந்திருக்கனும்

வங்கிகள் அவர்களிடம் வியாபாரக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இலவசமாக கார்டு சுவைப்பிங் மெஷின் கொடுக்க சொல்லி சொல்லியிருக்கனும்... கார்டுல வாங்குனா இவ்ளோ தள்ளுபடி சொல்லிருந்தா அவனே கார்டு யூஸ் பண்ணுவான். நீ என்ன சொல்லித்தர்றது... உன்னோட சுயலாபத்துக்காக நீ அதானிக்கும் பதஞ்சலிக்கும் குனியுறா... எனக்கு 10 ரூ லாபம்னா நானே மாறுவேன்.

இங்கே இன்னும் 2ஜி டவரே இல்லாத கிராமங்கள் உண்டு... மின் வசதி இல்லாத கிராமங்கள் உண்டு.. தினப்படி 500 கூலிக்கு வேலைபார்க்கும் வியாபாரிகள் உண்டு.. அவன் கார்டுக்கு வா கார்டுக்கு வானா...யாரு லூசு. நீங்கதான்.

இப்ப என்ன நடந்திருக்கு... பேங்க் இதுவரைக்கும் கொடுத்த எந்த கடனும் வரல

தொழில்கடன் கொடுத்தது வரவே இல்லை (ஏன்னா அவங்கட்ட வாங்கி தின்னுருக்கோம். அதுனால கேட்க முடியல)

எஜூகேஷன் லோன் கேட்க முடியல (ஏன்னா நாம தான் கல்வி வள்ளல வளர்த்தோம்... அவன் எல்லாரையும் அரைகுறைய படிக்க வச்சி...ரோட்ல விட்டுட்டான். அவனுக்கு வேலை கொடுக்க உங்களுக்கு வக்கு இல்லை. கொடுத்த கடன கேட்க முடியல)

விவசாயகடன் வரல (உங்களோட கேவலமான தண்ணீர் அரசியல் ஒட்டரசியல்ல சிக்கி அவன் ஒன்னு தூக்கு மாட்டி செத்துபோறான்... இல்லை நிலத்தை வீடுகட்ட வித்துறான்)

இப்படி இதுவரைக்கும் இந்த தேசத்தில் அத்தனை கோடி மக்களிடம் வாங்கிய வரிப்பணத்தை வீணடித்துவிட்டு... வங்கியில் பணம் இல்லாத நிலையை உருவாக்கிவிட்டு... எங்களை மிரட்டி பணத்தை எல்லாம் வங்கியில் போடவச்சிட்டு இப்ப எங்களுக்கு பாடம் நடத்துறீங்க....

போங்கடா.... போலிகளா... இப்பவும் சொல்றேன்.... கணக்கில வராத பணம் எல்லாம் கறுப்பு பணம் சொல்லும் நொன்னைகளுக்கு சொல்றேன்.. குடிகார அப்பனுக்கு ஊதாரி அப்பனுக்கு தெரியாம அம்மா சேகரிச்ச பணம் தாண்டா... அம்மாவோட நகைதாண்டா இன்னைக்கு உங்களுக்கு இப்படி மூளைகெட்டுபோய் பேச வைக்குது . சொந்த மக்கள கூட்டிக்கொடுக்க வைக்குது.

No comments:

Post a Comment