Wednesday, November 30, 2016

பொருளியல் 3 - இந்த டிமானிடேஷனால் என்ன ஆனாது?



பகுதி 3

Broad money, Narrow money, Reserve money, Cash velocity, CRR, GDP இது எல்லாவற்றையும் பற்றி முதல் இரண்டு பகுதியில் பார்த்தோம்

மொத்தம் 115 லட்சம் கோடி பணம் உள்ளது.இதில் 15 லட்சம் கோடி மக்கள் கையில் பணமாகவும் 10 லட்சம் கோடி வங்கி கையிருப்பாகவும் இருப்பதை பார்த்தோம். மிச்சம் 85 லட்சம் கோடி வங்கியில் நீண்டகால இருப்பாக , மற்றது RBIயில் வங்கிகளின் கட்டாய இருப்பதாக பார்த்தோம். ஆண்டு இந்திய ஜிடிபி (ஆண்டு பொருள் மற்றும் சேவை விற்பனை )150 லட்சம் கோடியை இந்த 115 லட்சம் கோடி பணம் மூலம் நாம் அடைகிறோம் அதாவது பணம் 1.3 முறை மாறுவதை படித்தோம்.


ஆனால் உண்மையில் கிட்டத்தட்ட 80 லட்சம் கோடி வங்கியில் நீண்டகால இருப்பாக இருக்கிறது. இது உடனடியாக வருடத்தில் மாறுவதில்லை. 25 லட்சம் கோடி மிச்ச பணமே மாறுகிறது. ஆக மக்களிடம் இருக்கும் 25 லட்சம் கோடி பணம் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 7.5 முறை மாறுகிறது. ஆக உங்களிடம் உள்ள ஒரு பண தாள் ஒரு ஆண்டில் 7.5 முறை மாறுகிறது. 7.5 மடங்கு பொருள்/ சேவை தேவையை உருவாக்குகிறது.

இதில் உள்ள ஏனைய காரனிகளை இப்போதைக்கு விட்டுவிடுவோம்.

இந்த டிமானிடேஷனால் என்ன ஆனாது?

புழக்கத்தில் இருந்த பணத்தில் 15 லட்சம் கோடி செல்லாது போய்விட்டது.இது மெதுவாக தான் மீண்டும் வரும். அடுத்ததாக வங்கியில் உள்ள பணத்தை எடுக்க பல கெடுபிடி உள்ள நிலையில் அதுவும் முடங்கிபோகிறது.

நிலைமை சீராகும் வரை எளிதில் மாறும் இந்த பணம் மாறாமல் போகிறது. வங்கி பரிவர்தனை மூலம் பணம் மாறுமே என்றால் உண்மை !!?? ஆனால் இன்று 100 ரூபாய் கையில் இருந்தால் உடனே செலவாகும் பணம் இல்லை என்றால் ? திரும்ப எடுக்கும் வரை காத்திருக்க வேண்டும். இந்தியாவில் ஆன்லைன் பண பரிமாற்றம் மற்றும் டெபிட் கார்ட் பண தரவுகள் மிக குறைவு. ஆண்டுக்கு 7.5 முறை மாறும் பணம் இந்த 2-4 நான்கு மாத பிரச்சனையில் 5 முறையே மாறும். பணம் மாறுவது குறையும் போது பொருள் வாங்குவது குறையும், பொருள்/ சேவை வாங்குவது குறையும் போது உற்பத்தி , தின கூலி ஆட்கள் தேவை, போக்குவரத்து மற்றும் பொருள் மாற்று பரிமாற்றம், புதிய பொருள் வாங்கும் செலவு என பிற உற்பத்திகளும் குறையும். ஆக வரும் ஆறு மாதத்தில் ஜிடிபி குறைந்து போகும்.

இது பெரிய பணக்கார்ர்களை பாதிக்குமா ? இல்லை! ஏன் பணக்கார்ர்கள் சேமிப்பு அதிகம், பொருள் மாற்றுவது குறைவு என்று பகுதி 2 ல் பார்த்தோம். நடுத்தர, ஏழை மக்கள் தனி நபராக குறைவாக வாங்குனாலும் கூட்டாக பொருட்களை அதிகமாக மாற்றுகிறார்கள்.

வசதி படைத்த வங்கி தேவை உள்ள தளங்களில் உள்ளவர்களின் விற்பனை எந்தளவிலும் பாதிக்கபடபோவதில்லை. ஏனெனில் அங்கே பொதுவாக வாங்குவோர் இணைய , டெபிட் கேரிடெட் வசதி வைத்தே வாங்குவர். ஆனால் சிறு தொழிலும், மூல பொருட்கள், போக்குவரத்து, உற்பத்திநிறுவனங்களும், ரோட்டோர கடைகார்ர்களும், சிறு வணிக நிறுவனங்களும் என அதிக பொருள் வாங்கும் இடம் பாதிக்கப்படும். ஆக ஜிடிபியின் பாதிப்பது இணையத்தில் எழுத முடியாத ஏழை, நடுத்தர மக்களுக்கே அதிகம் ! நாட்டிற்காக தியாகம் செய்ய சொல்லும் மக்களுக்கு பெரியபாதிப்பு இல்லை !

சரி இதன் செலவு எவ்வளவு , எவ்வளவு கருப்பு பணம் பிடிக்கப்படும், நீண்டகால அடிப்படையில் என்னவாகும், இதன் தீர்வு தான் என்ன......

பார்ப்போம்...

No comments:

Post a Comment