Thursday, November 3, 2016

நீ இந்து என்றால் சொல் சம்மதமா? - கோவன்

சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா?

[பாடல்: மக்கள் கலை இலக்கிய கழகம்]

(இந்த உத்தமரை தலைவராக கொண்ட
கட்சி, அதிகாரத்தை கையில் பிடிக்க
பயன்படுத்தும் ஆயுதம் என்ன
தெரியுமா? கலவரங்கள்! கடந்த 20
ஆண்டுகளில் முஸ்லீம்களுக்கு எதிராக
கலவரம் நடக்காத ஆண்டு எது?
பெங்களூர் பம்பாய் அகமாதாபாத்
ஹைதராபாத் கான்பூர் மீரட் - கலவரம்
நடக்காத நகரம் எது?

ஹைதராபாத் நகரில் தன் மதம் எது
என்று கூட சொல்ல தெரியாத இரண்டு
வயது பிஞ்சுக் குழந்தையை குறுக்கு
நெடுக்காக பிளந்து போட்டார்கள்
இந்துமத வெறியர்கள், உங்களால் முடியுமா?

பஹல்பூரிலே நூற்றுக்கணக்கான முஸ்லீம்களை கண்டம்துண்டமாக வெட்டி சாக்கிலே கட்டி கங்கையில்
எறிந்தார்கள். மிஞ்சிய பிணங்களை
விளைநிலங்களில் புதைத்து அதன்மேல் கோதுமையும்
காலிஃப்ளவரும் பயிரிட்டார்கள்.
உங்களால் முடியுமா?

கர்நாடக மாநிலத்தில் ஒரு சிற்றூரில்
உயிர் தப்ப ஓடி வந்த முஸ்லீம்களுக்கு
அடைக்கலம் கொடுத்து தங்க வைத்து
சோறும் போட்டு பிறகு அவர்கள் கண்ணயர்ந்த நேரத்தில் வெட்டிக் கொன்றார்கள். உங்களால் முடியுமா?

முடியாது! எனினும் நீங்கள் ஒரு இந்து என்றால் உங்கள் பெயரால் தான்
அவர்கள் அதை செய்கிறார்கள். நீங்கள் ஒரு பக்தர் என்றால் உங்கள் கடவுளின் பெயரால்தான் அவர்கள் இதை
செய்கிறார்கள். நீங்கள் இதற்கு
சம்மதிக்கிறீர்களா, இல்லையென்றால்
இந்த வெறித்தனத்தை
தடுத்திருக்கிறீர்களா?

சிலர் தடுத்திருக்கிறார்கள். முஸ்லீம் நண்பர்களுக்காக தம் உயிரையும்
கொடுத்திருக்கிறார்கள். ஆனால் பலர் அமைதி காக்கிறார்கள். இந்த அமைதியின் அர்த்தம் என்ன?
ஆர்எஸ்எஸ் வெறியர்களை கண்டு அச்சமா? அல்லது இந்த கொலைகள் உங்களுக்கு சம்மதமா? )

சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா? - 2
சொல்லிடு உன்னால் முடியுமா?
நீ உண்டு ஒதுங்கும் விலங்கினமா? - 2
இல்லை கண்டும் காணாத கல்லினமா?
கண்டும் காணாத கல்லினமா?

( சம்மதமா சம்மதமா ... )

கண்ணில் விழுந்ததும் தூசியல்ல
என் கண்ணீரும் ஓயவில்ல..
நெஞ்சை அறுக்கும் சோகமடா..
அந்த பிஞ்சுமுகம்
கண்ணில் ஆடுதடா..
தொழுகை முடிந்த வாசலிலே
அந்த அழுகை யாருக்கும்
கேட்கலயே..
கேட்டது கொலைவெறி சத்தமடா..
அது வேட்டைக்கு அலைந்த கூட்டமடா.. - 2
குழந்தை மறைந்தது கூட்டத்திலே
பிஞ்சு குரலும் மறைந்தது கூச்சலிலே.. - 2
சின்ன நெஞ்சை பிளக்க மனம் வருமா?
அது முஸ்லீம் என்றால் சம்மதமா?
நீ இந்து என்றால் சொல் சம்மதமா?

( சம்மதமா சம்மதமா... )

கங்கை சுமந்தது மீன்களையா?
தலை துண்டாய் போன உடல்களையா?
மண்ணில் விளைந்த கோதுமையே
நீ தின்று வளர்ந்தது பிணங்களையா?
கண்கள் அவிந்த பஹல்பூரே
உன் பங்கினை கேளுங்க பாவத்திலே..
தோட்டத்தின் மேலே பூக்களடா..
தோண்ட தோண்ட தலைகளடா..
கோதுமை கதிர்கள் பொன்னிறமாய்
தூர்களும் சேறோ செந்நிறமாய்
ஜென்மமடா ராம ஜென்மமடா
ரத்த கங்கையில் பிறந்த
ஜென்மமடா.. - 2
மனிதக் கறி நர மாமிசமா?
உடல் முஸ்லீம் என்றால்
சம்மதமா?
நீ இந்து என்றால் சொல் சம்மதமா?

( சம்மதமா சம்மதமா... )

ஓடி வந்தனரே உயிர் பிழைக்க
ஈரம் தேடி வந்தனர் உடல் நடுநடுங்க..
துரத்தி வந்தது கும்பலொன்று கூறி
இருக்கவைத்தார் அடைக்கலமென்று..
தேடிய கும்பல் நுழைந்ததடா
மூடிய கதவு திறந்ததடா..
அடைக்கலம் தந்த கைகளல்ல
அது ஆள்காட்டிகளின்
கைகளடா..
துரோகமடா கொடும்
துரோகமடா
தூக்கத்தில் கொன்ற துரோகமடா.. - 2
கொடுத்த சோறு செறிக்கும்முன்னே
உடலை அறுத்த துரோகமடா..
துரோகிகள் மதம்தான் உன்
மதமா?
நீ இந்து என்றால் சொல் சம்மதமா?

சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா?
சொல்லிடு உன்னால் முடியுமா?
நீ உண்டு ஒதுங்கும் விலங்கினமா?
இல்லை கண்டும் காணாத கல்லினமா?
இல்லை கண்டும் காணாத கல்லினமா?

சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா?

No comments:

Post a Comment