Saturday, April 1, 2017

சீமான் போன்றவர்களுக்கு மேடைகளில் இடமளித்து தங்கள் சமூகத்தில் விளம்பரம் தேடிகொடுத்த பெருமை இன்றைய இஸ்லாமிய இயக்கங்களுக்கு உண்டு....

சீமான் போன்றவர்களுக்கு மேடைகளில்
இடமளித்து தங்கள் சமூகத்தில்
விளம்பரம் தேடிகொடுத்த
பெருமை இன்றைய இஸ்லாமிய
இயக்கங்களுக்கு உண்டு....

முக்கியமாக மனிதநேய மக்கள்
கட்சிக்கு இதில் பெரும் பங்கு
உண்டு. பல்வேறு காலகட்டங்களில்
தங்களது மேடைகளில் சீமானை
அழைத்து பேசவைத்தவர்கள்
மமகவினர்... இங்கே இவர்கள்
மேடையில் பேசிவிட்டு அடுத்தநாளே
மும்பாய்க்கு சென்று அங்கே சிவசேனா
வேட்பாளருக்கு தேர்தல் பிரச்சாரம்
செய்தார் சீமான்..

சமீபத்தில் கூட மமக.பொது
செயலாளர் திரு தமிமுன் அன்சாரி
"தமிழ்தேசியவாதிகளை
சிறுபான்மையினருக்கு தோழமை
சக்தி" என்று தனது பதிவு ஒன்றில்
கூறுகிறார். மத ரீதியாக மட்டுமே
தங்கள் அரசியல் நகர்வுகளை
முன்னெடுக்கும் பாஜகவால்
பெரியார் பூமியில் மக்கள் மத்தியில்
பிரிவினையை விதைக்க
கண்டெடுக்கப்பட்ட கருவிதான்
இந்த தமிழ்தேசிய வியாதிகள்
என்பதை தமிமுன் அன்சாரி
இன்னமும் உணர்ந்த பாடில்லை...

மனிதநேய போராளி அய்யா
மார்க்ஸ் அவர்கள் இன்று ஒரு
பதிவில் தெரிவித்துள்ள கருத்தை
இங்கே பகிர்கிறேன்...

Marx Anthonisamy :-
உண்மைதான். சீமான்
போன்றோரை மேடை ஏற்றுவது
எத்தனை பெரிய ஆபத்து என்பதை
முஸ்லிம் இயக்கங்கள் எப்போது
உணருமோ.

நான் போருக்குப் பின் இலங்கை சென்று
வந்து அங்குள்ள நிலைகள், முள் வேலி
முகாம் கொடுமைகள் எல்லாவற்றையும்
சுமார் ஒரு மணி நேரம் பேசிவிட்டு
புத்தளத்தில் உள்ள முஸ்லிம் அகதிகள்
முகாம் சென்று வந்ததைப் பற்றிப்
பேசத் தொடங்கியவுடன் சீமானுடைய
ஆட்கள் பெரிய அளவில் அங்கு
கலாட்டா செய்தனர்.

"இதை எல்லாம் ஏண்டா பேசுறே.
இனி ஒரு வார்த்தை பேசினால்
உன் கையை வெட்டுவோம்" என்றனர்.
சென்னை AICUF அரங்கில் நடந்த
நிகழ்ச்சி அது. இதைக் கேள்விப்பட்டு
நண்பர் ஆளூர் ஷாநவாஸ் சீமானை
அணுகி என்ன உங்கள் ஆட்கள் இப்படிச்
செய்துள்ளார்களே எனக் கேட்டபோது,
ஆமாம் "அவன் கையை வெட்டத்தான்
செய்வோம்" எனச் சொன்ன நபர் சீமான்.

இதை நீங்கள் ஷா நவாசிடம் கேட்டு
உறுதி செய்து கொள்ளலாம்.
இலங்கையில் பாதிக்கப்பட்ட
முஸ்லிம்கள் பற்றி பேசவே கூடாது
என நடந்த கலாட்டா அது.

# இனிமேலாவது சீமானின்
சுயரூபம் முஸ்லிம்களுக்கும்
இஸ்லாமிய இயக்கங்களுக்கும்
புரிந்தால் சரி...

‪#‎அபுரய்யான்‬

No comments:

Post a Comment