Saturday, April 1, 2017

சகித்து கொள்ள முடியாத நாம்தான் சமூக மாற்றத்தை முன்னெடுக்க போகிறோம் என்பது எவ்வளவ பெரிய கேலிக்கூத்து.

அட என்னப்பா, சின்ன புள்ள மாதிரி
பொசுக் பொசுக்னு குரூப்ப விட்டு போராங்க.

ஒரு சின்ன விமர்சனத்தையோ/
கோரிக்கையையோ சகித்து கொள்ள
முடியாத நாம்தான் சமூக மாற்றத்தை
முன்னெடுக்க போகிறோம் என்பது
எவ்வளவ பெரிய கேலிக்கூத்து.

சகோ ஞானம், எவ்வளவு அருமையாக
வாதம் பண்ணுகிறீர்கள், கருத்துக்களை
முன்வைக்கின்றீர்கள். இவ்வளவு பண்பட்ட
நீங்கள் இவ்வளவு விரைவாக உணர்ச்சி
வசப்படுவதை பார்க்கும் போது ஏமாற்றமாக
இருக்கன்றது.

சகோ பரத், முழுக்க முழுக்க Voice msg-ஐ
தவிற்க முடியாது. சற்று நேரத்திற்கு முன்
சகோ முத்துகிருஷ்னன் செங்கல் சூளை
கொடுரங்களை பற்றி பேசும் போது அவரது
குரலில் ஒரு நடுக்கம் இருந்ததை என்னால்
உணர முடிந்தது. அந்த பிரச்சனையின் ஆழத்தை
இவ்வளவு சிறப்பாக எழுத்தில் மூலம்
வெளிப்படுத்திருக்க முடியுமா என்பது
சந்தேகமே.

சகோ கீர்த்தியின் voice msg கேட்டிருக்கின்றீரக்ளா
அவர் தமிழ் பிரயோகிக்கின்ற அழகே தனிதான்.
அவரோட கருத்தியலில் நான் முற்றிலும்
வேறுபடகின்றேன் என்பது வேறு விஷயம்.

No comments:

Post a Comment