Saturday, April 1, 2017

இவர்களின் கடந்த கால பயங்கரவாத செயல்பாடுகளை பார்த்தோமானால் இந்த உண்மை உங்களே புரியும்

ஆம்பூர் வன்முறை தொடர்பாக ஆர்.எஸ்.எஸ்.எஸ்.ஸின் துணை அமைப்புகளின் ஒன்றான முகநூல் பணமோடி மன்னன் இந்து மக்கள் கட்சியின் அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட இந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு கருத்து கூறுவதற்கு கூட எந்த அருகதையும் கிடையாது. இவர்கள் இந்துக்களைப் பற்றியும் கவலைப்படவில்லை, தமிழர்களைப் பற்றியும் கவலைப்பட்டதில்லை. குறிப்பாக பெண்களை கொஞ்சம் கூட இவர்கள் மனிதர்களாக நினைப்பதில்லை. இவர்களின் கடந்த கால பயங்கரவாத செயல்பாடுகளை பார்த்தோமானால் இந்த உண்மை உங்களே புரியும். இவர்களின் பயங்கரவாத செயல்பாடுகளை ஆறு தலைப்பின் கீழ் (குண்டுவெடிப்புகள், பயங்கரவாத பயிற்சிகள், இந்துக்களுக்கு எதிரானவர்கள், பெண்களுக்கு எதிரான ஆபாச குணமுள்ளவர்கள், தமிழர்களுக்கு எதிரானவர்கள், கொலைகார கும்பல்கள்) அவர்கள் செய்த பல்வேறு பயங்கரவாத செயல்களிலிருந்து சிறு துளிகளின் மூலம் எடுத்துக்காட்டாக இங்கே குறிப்பிடுகின்றேன்.

குண்டுவெடிப்புகள்:

(4 வருடங்களில் 7 மாநிலங்களில் இந்தியாவையே உலுக்கிய 10 காவி குண்டுவெடிப்புகள்)

1. மாலேகான் 1 வது குண்டுவெடிப்பு
2. அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு
3. சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு
4. ஹுப்ளி குண்டுவெடிப்பு
5.கோவா குண்டுவெடிப்பு
6. தானே குண்டுவெடிப்பு
7. மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு
8. கான்பூர் குண்டுவெடிப்பு
9. நந்தித் குண்டுவெடிப்பு
10. மாலேகான் 2வது குண்டுவெடிப்பு

பயங்கரவாத பயிற்சிகள்:

1, மத்திய பிரதேசத்திலுள்ள போபாலில் பஜ்ரங்தள் உறுப்பினர்களுக்கு ஒரு வார பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இதில் 150 பஜ்ரங்தள உறுப்பினர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு துப்பாக்கி முதலிய போர் கருவிகளை உபயோகிக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
(டைம்ஸ் ஆஃப் இந்தியா - 31 மே 2002)

2. மே 17, 2003 விஷ்வ ஹிந்து பரிஷத் பெண் உறுப்பினர்களுக்காக ஒரு முகாம் மும்பையில் நடத்தப்பட்டது. இதில் அவர்களுக்கு காராத்தே, ஜூடோ, கத்தி, வாள் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
(சன்டே டைம்ஸ் ஆஃப் இந்தியா - மே 18 2003.

3. நாடு தழுவிய பெண்களுக்கான பயிற்சி முகாம் மே 25 ல் கான்பூர் ஆர்.எஸ்.எஸ்.ஸை சார்ந்த பெண்களுக்கு ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் துப்பாக்கி குறி வைப்பது, சுடுவது, குண்டு போடுவது உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கினர். அதே சமயம் ஜூடோ போன்ற பயிற்சிகளும் வழங்கினர். உ.பி.யில் 6 இடங்களிலும், நாடு முழுவதும் 73 நகரங்களிலும் இந்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
(சன்டே எக்ஸ்பிரஸ் ஜூன் 2003 புனே)

4. செப்டம்பர் 26 2007 கிரிக்கெட் வீரர்கள் வருவதற்கு முன் 6 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. மும்பை காவல்துறையினர் ராஜிவ் கோவிந்த் சிங் மற்றும் சுமித்ரா பீதல்ராய் என்ற இருவரையும் குறைந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை வைதிருந்த போது கைது செய்தனர். அவர்கள் வைத்திருந்த குண்டுகளை அரை டசன் மக்களை கொலை செய்ய போதுமானது. இதனை நகரத்தின் இந்திய கிரிக்கெட் அணியினரின் வெற்றிக் கொண்டாட்ட ஊர்வலத்தின் போது நடத்த இருந்தனர். ( டைம்ஸ் ஆஃப் இந்தியா புனே 27 செப்டம்பர்)

5. அக்டோபர் 31 2008 நாவி மும்பையிலுள்ள வாஷி என்ற இடத்தில் உள்ள ஓர் அரங்கில் பிளாஸ்டிக் பையில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்தனர். இது பிராமணிய இயக்கங்களால் செய்யப்பட்டது என கண்டுபிடிக்கப்பட்டது. ( கம்யூனிசம் காம்பக்ட் ஜூலை ஆகஸ்ட் 2008)

6. பிரமோத் முத்தலிக் ஸ்ரீராம் சேனாவின் தலைவனாவான். 432 ஹிந்து மனித வெடிகுண்டுகள் அவனுடைய தலைமையில் அவனுடைய இயக்கத்தில் சேர்ந்திருப்பதாக கூறினான். மங்களூரிலும், பெல்காமிலும், ஷிமோகாவிலும் ஸ்ரீராம் சேனா இத்தகைய தற்கொலை படையினருக்கு பயிற்சி அளித்ததாகவும் கூறினான். ( தி மில்லி கெஜட் 1-15 நவம்பர் 2008)

7. நவம்பர் 10 2008 கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் குண்டு தயாரித்து கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் இரண்டு ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள் கொல்லப்பட்டனர். அடுத்த நாள் அந்தப் பகுதியை காவல்துறையினர் சோதனையிட்டபோது பாஜக தலைவர் பிரகாசன் என்பவர் வீட்டில் 18 முழுமையாக்கப்படாத வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. இது இந்த இருவர் கொல்லப்பட்ட இடத்திலிருந்து 200 மீட்டர் தொலைவிலுள்ளது. (இந்தியன் எக்ஸ்பிரஸ், புனே 11 நவம்பர் 2008)

இந்துக்களுக்கு எதிரானவர்கள்:

1. அவுரங்கபாத்திலுள்ள கத்கோஷ்வர் கோயிலுக்கு அருகிலும் நிரல்பாக் என்னுமிடத்தில் உள்ள வி.எச்.பி. அலுவலகத்திற்கும் அருகில் பைப் வெடிகுண்டுகள் வெடித்தன. (லோக்ஸட்டா இணையதளம் 24 மே 2006 மற்றும் லோக்மட் அவரங்காபாத் 17 நவம்பர் 2002). ஏப்ரல் 6 நந்தேத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பிற்கு பிறகு ஆர்.எஸ்.எஸ். மற்றும் பஜ்ரங்தள் ஐ சேர்ந்த உறுப்பினர்கள் வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருந்த போது வெடித்து இறந்தனர். அப்போது போலிஸார் அங்கே பைப் வெடிகுண்டுகளை கண்டுபிடித்தனர். அந்த குண்டுகள் அவ்ரங்காபாத்தில் வெடித்த பைப் குண்டுகளைப் போன்றே இருந்ததையும் கண்டு பிடித்தனர். (லோத்மர் அவுரங்காபாத் 24 மே 2006)

2. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வார்தாவிலுள்ள சில நபர்களுக்கு வெடிகுண்டுகள் பரிசாக அனுப்பப்பட்டன. இதில் தொடர்புடைய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சிண்டு, மகேஷ், ஜிதேஷ் பிரதான், பிரகாஷ் பால்வே மற்றும் அஜய் ஜிவ்தோத். ஆனால் இதற்கு திட்டமிட்டு கொடுத்த பாண்டு டெல்கோட் (எ) லேதன் தலைமறைவாகி விட்டான். ( டய்னிக் பாஸ்கர் 3 நவம்பர் 2007)

3. ஜனவரி 24 2008 தமிழ்நாட்டில் தென்காசியிலுள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் ஒரு வெடிகுண்டு வெடித்தது. தீர்க்கமான விசாரணைக்குப் பின்னர் தமிழக காவல்துறையினர் சங்பரிவார அமைப்பைச் சேர்ந்த 8 பேரை கைது செய்தனர். 14 பைப் வெடிகுண்டுகள் செய்யப்பட்டதாகவும். ஜூலை 2007 லிருந்தே இவ்வேளை தொடங்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். வகுப்புரீதியாக பிரிவினையை ஏற்படுத்தவே இந்நாசவேளையில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். (தி மில்லி கேஸட் 16 - 29 பிப்ரவரி 2008)

4. ஏப்ரல் 2008 இருவேறு வகுப்பினருக்கிடையே ஏற்பட்ட சிறு கலவரத்திற்கு பின் காவல்துறையினர் ஜல்காவுனில் சோப்தா தாலுகாவிலுள்ள அமெர்தி என்ற கிராமத்தில் குவியல் குவியலாக துப்பாகிகள், கத்திகள், வீச்சரிவாள்கள் போன்றவற்றைக் கண்டுபிடித்தனர். சமதா நகரில் குடியிருக்கும் ஷெட்டி பிதேவாலா என்பவன் இளைஞர்களுக்கு வகுப்புவாத சிந்தனை கொண்ட படங்கள் குறுந்தகடுகளை போட்டுக்காட்டி அவர்களை வெறிகொள்ளச் செய்து பின்னர் அவர்களுக்கு இந்த ஆயுதங்களை பழக்குவித்தது விசாரணையில் தெரிய வந்தது. (தி மில்லி கெஜட் 16 - 31 மே 2008)

5. ஜுன் - ஜூலை 2008, நகரத்திலுள்ள தாக்கூர் துவாரா கோயிலை தகர்க்க இரகசிய திட்டம் தீட்டியதாக ஆர்.எஸ்.எஸ்.ஐ சார்ந்த சூரஜ் நாராயண் டான்டன் என்பவனை பாரா பங்கி போலிசார் கைது செய்தனர், (தி மில்லி கெஜட் 1 - 15 மே 2008)

6. ஹைதராபாத் கோயிலில் மாட்டிறைச்சியை வீசி மதக்கலவரத்தை உருவாக்க முயன்ற இந்துத்துவா பயங்கரவாதி சிவகுமார் (எ) ராகேஷ் கைது.

பெண்களுக்கு எதிரான ஆபாச குணமுள்ளவர்கள்:

1. சதீஷ் ரெட்டி என்ற தொழிலதிபரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பாஜக கர்நாடக எம்பி நளின்குமார்.

2. மருத்துவ சேவை செய்ய வந்த ஆஸ்ரேலியாவை சேர்ந்த ஸ்டீபன், அவருடைய பெண் குழந்தை, ஆண் குழந்தை ஆகிய மூவரை உயிருடன் அவர்கள் தங்கியிருந்த வாகனத்தில் வைத்து எரித்த பஜ்ரங்தளத்தை சேந்த தாராசிங்

3. குஜராத் சட்டசபையில் ஆபாச படங்கள் பார்த்த பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சங்கர் சவுத்திரி, ஜீத்தாபாய் பார்வார்

4. கர்நாடகாவில் 23 வயது இளம் பெண்ணை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சிருங்கேரி தொகுதி பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் ஜீவராஜ்

5. கர்நாடகாவில் பெண் ஒருவரை நிர்வாணமாக நடனமாடவிட்டு இரசித்த பாஜக பிரமூகர் பி.எஸ்.குதிரே

6. இறந்த பெண்ணுடன் உடலுறவு கொள்ளுங்கள் - பாஜக எம்.பி.யோகி ஆதித்யனாத்

7. இளம்பெண்ணை காரில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த பாஜக மாநில இளைஞரணி செயலாளர்

தமிழர்களுக்கு எதிரானவர்கள்:

1. யாழ்பாணத்தில் இராஜபக்சேவுக்கு ஆதரவாக இந்திய இராணுவத்தை அனுப்புவதாக கூறிய வாஜ்பாய்

2. முல்லை பெரியார் விஷயத்தில் தமிழர்களுக்கு எதிரான நிலைபாடு.

3. ஆந்திராவில் 20 தமிழர்கள் (அர்ஜூன் சம்பத்தின் கூற்றுப்படி இந்து தமிழர்கள்) கொல்லப்பட்டதற்கு சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட பாஜக மறுப்பு ஆனால் கேரளாவில் கொலை செய்யப்பட்ட ஒரு ஆர்.எஸ்.எஸ். உறுப்பினரின் சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை.

4. ராஜபக்சேவுக்கு ஆதரவாக சல்மான் கானை அனுப்பு இலங்கையில் பிரச்சாரம்.

5. ராஜபக்சேவுக்கு சிவப்பு கம்பள வரவேற்ப்பு

6. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்காத பாஜக

7. தர்மபுரி கலவரத்தில் பாதிக்கப்பட்ட இந்துக்களுக்கு (அர்ஜூன் சம்பத்தின் கூற்றுப்படி இந்து தமிழர்கள்) எதிராக குரல் கொடுக்க வில்லை

8. பரமகுடி துப்பாகி சூட்டில் பாதிக்கப்பட்ட (அர்ஜூன் சம்பத்தின் கூற்றுப்படி இந்து தமிழர்கள்) எதிராக குரல் கொடுக்க வில்லை

9. மும்பையில் தமிழர்களை (அர்ஜூன் சம்பத்தின் கூற்றுப்படி இந்து தமிழர்கள்) விரட்டி அடித்த சிவசேனவுக்கு ஆதரவாக செயல்படும் அர்ஜூன் சம்பத்..

10. ஜாதிக்கொடுமையின் காரணமாக கை கால் வெட்டப்பட்ட செந்திலுக்கு (அர்ஜூன் சம்பத்தின் கூற்றுப்படி இந்து தமிழர்கள்) ஆதரவாக குரல் கொடுக்க வில்லை.

11. கோகுல்ராஜ் (அர்ஜூன் சம்பத்தின் கூற்றுப்படி இந்து தமிழர்கள்) படுகொலைக்கு நீதி கிடைக்க குரல் கொடுக்கவில்லை

12. தென் மாவட்டங்களில் தலைவிரித்தாடிய ஜாதி கொலைக்களுக்கு பாதிக்கப்பட்ட இந்துக்களுக்கு ஆதரவாக (அர்ஜூன் சம்பத்தின் கூற்றுப்படி இந்து தமிழர்கள்) களம் காணவில்லை.

கொலைகார கும்பல்கள்:

1. மகாத்மா காந்தி அவர்களை நெஞ்சினில் சுட்டு படுகொலை செய்தனர்.

2. அம்பேத்கர் அவர்களை விஷம் கொடுத்த கொலை செய்ய முயற்சி செய்தனர்.

3. அம்பேத்கருக்கு நிலைவிடம் கட்ட வேண்டும் என கூறிய அம்பேத்கர் பேரனை கொலை செய்ய முயற்சி

4. காமராஜரை வீட்டில் வைத்து உயிருடன் கொலை செய்ய முயற்சி

5. பெரியார் அவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என கூவியது

-------------------------------

இதைப்போன்று இந்துத்துவாவின் உண்மைகள் பல இருக்கின்றன. இவர்களுக்கு வன்முறையை பற்றி பேசுவதற்கு மட்டுமல்ல அதனை நினைப்பதற்கு கூட எவ்வித அருகதையுமில்லை.ஏனென்றால் இவர்கள் முழுக்க முழுக்க வன்முறை மற்றும் பயங்கரவாதத்தில் மூழ்கிப்போனவர்கள்.தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்று இந்து முஸ்லிம்களை மட்டுமல்ல, அம்பேத்கர் - பெரியார் ஆகியோருக்கிடையிலும் பிரிவினையை உருவாக்க முயற்சி செய்து வருகின்றனர். இவர்களை இனம்கண்டுகொண்டு ஒவ்வொரு இந்தியானும் புறக்கணிக்க வேண்டும். புறக்கணிப்பதே தேசத்தின் மீது பற்றுள்ள ஒவ்வொருவரின் கடமையாகும்.

No comments:

Post a Comment