Saturday, April 1, 2017

அது ஆழமான ரணங்ளையும், நீண்ட ஆறாத வடுக்களையும்தான் ஏற்படுத்தும்.

இந்திய அரசும், இந்திய நீதிதுறையும், தனது சொந்த குடிமக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக, திட்டமிட்டு நிகழ்த்தி வரும் வன்முறைகளின் குரூர தன்மை நாளுக்கு நாள் புதிய பரிமானங்களை அடைந்து வருகின்றது.

சமீபத்திய உதாரணம், யாகூப் மேமன். தன் மீதான 'கரை'யை துடைக்கும் பொருட்டு, தனது பெற்றோர், மனைவி மற்றும் 40 நாள் 'கைக்குழந்தை'யோடு பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வந்து, தனக்கும் குண்டுவெடிப்புக்கும் சம்மந்தமில்லை என்பதை நிருபிக்க
தானாக முன்வந்து சரண் அடைந்தவரை அவரது பிறந்த நாளன்று குரூரமாக தூக்கிலிட்டு கொன்றுள்ளது.

இவ்வளவு அநீதிகளுக்குப் பின்பும் இந்திய முஸ்லீம்கள் இந்திய நீதித்துறையின் மீது வைத்திருக்கும் அப்பாவித்தனமான, ஏமாளித்தமான நம்பிக்கை அபாரமானது.

பன்மை தன்மை கொண்ட ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் கௌரவமும், இருப்பும் தொடர்ந்து திட்டமிட்டே கேலிக்குறியதாகவும், கேள்விக்குறியதாகவும் ஆக்கப்படும்போது அது ஆழமான ரணங்ளையும், நீண்ட ஆறாத வடுக்களையும்தான் ஏற்படுத்தும்.

-மு.செ.பாதுஷா

No comments:

Post a Comment