Saturday, April 1, 2017

ஆண் குழந்தை பெறுவது எப்படி, பெண் குழந்தை பெறுவது எப்படி என்று இன்றுவரை நவீன மருத்துவத்தால் சாத்தியப்படவில்லை

நம்மரும் தமிழ்ச் சித்தர்கள் ஓகக்கலையை மட்டுமா கண்டு பிடித்தார்கள். மருத்துவத்திலும் சாதித்தார்களே.. ஆண் குழந்தை பெறுவது எப்படி, பெண் குழந்தை பெறுவது எப்படி என்று இன்றுவரை நவீன மருத்துவத்தால் சாத்தியப்படவில்லை. அதை அவர்கள் செயற்கையாக சாத்தியப் படுத்துகிறார்களே ஒழிய இயற்கையாக அதை நிகழ்த்த முடியவில்லை..

ஆனால் எங்கள் சித்தர்கள் அதை இயற்கையான ஆண் பெண் புணர்ச்சியின் மூலம் அதை சாதித்து இருக்கிறார்கள். நமக்கு மூக்கு இருக்கிறது அதில் இரண்டு துளைகள் இருக்கிறது. இரண்டு துளைகளின் மூலம் நாம் சுவாசிக்கிறோம். ஆனால் இரண்டு துளைகளும் ஒரே நேரத்தில் சுவாசிக்கின்றனவா என்றால் அதுதான் இல்லை. மூக்கின் வலது துளையின் வழியே காற்று ஏறி இறங்கும் போது இடது துளை சும்மாதான் இருக்கிறது. அடுத்து இடது துளையின் வழியே காற்று ஏற்ற இறக்கம் நடைபெறும்போது வலது துளை சும்மா இருக்கிறது.

இந்த நிகழ்வு ஒவ்வொரு 24 நிமிடங்களுக்கு ஒருமுறை மாறுகிறது. 24 நிமிடங்கள் வலது துளையும், அடுத்த 24 மணி நேரம் இடது துளையும் சுவாசிக்கிறது. அப்படி நடந்தால் தான் அது நல்லுடம்பு. காலை மாலை அந்தி வேளைகளில் இரு துளைகளிலும் சுவாசம் நடைப்பெறும். நோயாளிகளுக்கு தான் எநேரமும் இரண்டு பக்க துளைகளிலும் காற்று போய் வரும். அப்படி உங்களுக்கு அடிக்கடி நடந்தால் நீங்கள் நோயின் பிடியில் மெல்ல வீழுகிறீர்கள் என்று அர்த்தம்.

நாம் இரவு படுக்கும்போது இடது புறமாக ஒருக்களித்திருக்கும்போது மூக்கின் வலது துளை சுவாசிக்கும். வலதுபுறமாக ஒருக்களித்திருக்கும்போது இடது துளை சுவாசிக்கும்.

இடது பக்கம் ஒருக்களித்திருக்கும்போது வலதுதுளை சுவாசிக்கும். 24 நிமிடங்கள் கழிந்தபிறகு வலது சுவாசம் இடதுக்கு மாற வேண்டும். அப்போது உங்கள் உடம்பு தானாக புரண்டு கொடுக்கும். மூச்சு மாற வேண்டிய ஒரு ஒரு நேரமும் உங்கள் உடம்பு தன்னால் புரண்டு கொடுக்கும். 2 மணி நேரத்தில் ஐந்து முறை சுவாசம் மாறும். நீங்கள் ஐந்து முறை புரள்வீர்கள். அப்படியானால் எட்டு மணி நேர தூக்கத்தில் 20 முறையாவது நீங்கள் புரண்டு படுப்பீர்கள்.

ஜலதோஷ மூக்கடைப்பின் போது சளியின் தொந்திரவால் துளைகள் கண்டபடி அடைபட்டு அடிக்கடி புரளுவீர்கள். இது கணக்கில் கொள்ளக் கூடாது. காதலியின் எண்ணத்தில் படுக்கையில் புரண்டுக் கொண்டு இருப்பவனையும் கூட இதில் கணக்கில் கொள்ளக் கூடாது.

இப்போது முதல் விஷயத்துக்கு வருவோம். ஒரு கணவன் மனைவிக்கு ஆண் குழந்தை வேண்டும் என்றால் என்ன செய்வது. கணவனுக்கு அவன் மூக்கின் இடது துளையின் வழியே சுவாசம் ஓடும்போதும், மனைவிக்கு வலது துளையின் வழியே சுவாசம் ஓடும்போதும் புணர்ச்சி மேற்கொண்டால் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும்.

பெண்ணுக்கு இடது துளையின் வழியாகவும் ஆணுக்கு வலது துளையின் வழியாகவும் சுவாசம் ஓடும்போது புணர்ச்சி மேற்கொண்டால் அவர்களுக்கு பெண் குழந்தை பிறக்கும். புணர்ச்சிக்கு முன்னதாக இந்த மூச்சு ஓட்டத்தை சரி பார்த்துக்கொள்ளவேண்டும்.

புணர்ச்சி நடந்துக் கொண்டு இருக்கும்போது அது மாறி விட்டால் என்ன செய்வது என்று கேட்கிறீர்களா.. ஒரு பஞ்சினை எடுத்து ஆண் மூக்கின் வலது துளையை அடைத்துக் கொள்ளவேண்டும். பெண் இடது துளையை அடைத்துக் கொள்ளவேண்டும். ஆண் குழந்தை நிச்சயம். பஞ்சு மூக்கில் ஏறிவிடாமல் பெரிய பஞ்சாக பார்த்துக் கொள்வது அவசியம் .

இருவருக்கும் ஒரே பக்க துளைகளில் சுவாசம் வரும்போது, அதாவது ஆணுக்கும் வலது துளையில் பெண்ணுக்கும் வலது துளையில் அல்லது ஆணுக்கும் இடது துளையில் பெண்ணுக்கும் இடது துளையில் சுவாசம் வரும்போது புணர்ச்சி மேற்கொள்ளும்போது கருசேர்ந்து பிறக்கும் குழந்தை என்னவாக இருக்கும். வேறென்ன..அலியாக இருக்கும்.

Bhagyalakshmii Dhananjeyan

No comments:

Post a Comment