Saturday, April 1, 2017

பூணூல் என்பது கோவணம் கட்டும் இடுப்புக் கயிரே! சொன்னவர் சுவாமி விவேகானந்தர்.

பூணூல் என்பது கோவணம்
கட்டும் இடுப்புக் கயிரே!
சொன்னவர் சுவாமி விவேகானந்தர்.

சிஷ்யனானவன் குருவினுடைய
குடிலுக்கு செல்லும்போது குரு
அவனுடைய தகுதியை அறிந்து
உளம், சொல், செயல் ஆகிய
மூன்றையும் அவன் அடக்கி
வைத்திருப்பதற்கு அடையாளமாக
முப்புரியாகிய ”முஞ்சா” என்னும்
புல்லினை அவனுடைய இடுப்பிலே
கட்டி அவனுக்கு தீட்சை செய்து
வேதங்களை போதிபார்.

இடுப்பில் கட்டிய அந்த முப்புரி
கயிற்றில் சிஷ்யன் கோவணம்
கட்டிக்கொள்வான் அந்த புல்லிற்கு
பதிலாக முப்புரி நூலை அணியும்
வழக்கம் பின்னாளில் ஏற்பட்டது.

வேதங்களிலே பூணூலை பற்றிய
குறிப்பு ஓரிடத்திலேயும் இல்லை.

கோபிலருடைய கிருஹய
சூத்திரங்களிலும் பூணூலுக்கான
குறிப்புகள் இல்லை. எனவே
இன்றைக்கு பார்ப்பனர்கள் அணியும்
பூணூல் கோவணம் கட்டிய நூலின்
மாற்றமே!

---சுவாமி விவேகானந்தர்
(ஆதாரம்: சுவாமி விவேகானந்தர்
சம்பாஷணைகள். நூல் பக்கம் : 26-28.)

சாஸ்திர வேத விரோதமாய் தன்னை
உயர்ந்த ஜாதியாய் காட்ட பார்ப்பனர்கள்
செய்த மோசடியே பூணூல் அணியும்
வழக்கம். என்பது இதிலிருந்து புலப்படுகிறது.

No comments:

Post a Comment