Saturday, April 1, 2017

ஒரு முஸ்லிம் தவறு செய்தால் மறைக்க வேண்டும் அதை பற்றி பேச கூடாது என பரவலாக அறிவுரை சொல்கிறார்கள்.

ஒரு முஸ்லிம் தவறு செய்தால்
மறைக்க வேண்டும் அதை பற்றி
பேச கூடாது என பரவலாக
அறிவுரை சொல்கிறார்கள்.

இந்த அதிகாரம் உங்களுக்கு
யார் கொடுத்தது, முஸ்லிம்கள்
தவறு செய்தால் சுட்டி காட்டி
எச்சரிக்கை செய்ய கூடாத என்ன?

இஸ்லாத்தின் அடிப்படைக்கே
எதிரானது தான் பிறரின் தவறுகளை
மறைக்க சொல்வது. அடுத்தவன்
செய்யும் தவறை அம்பலப்படுத்தினால்
தான் தவறுகள் குறையும்,
விழிப்புணர்வாக இருக்க முடியும்.

குறை கூறாதீர்கள் என நபி ஸல்
சொன்ன ஹதீசை எப்படி எல்லாம்
விளங்கி வைத்திருக்கிறார்கள் என
என்னும் போது வியப்பாக இருக்கிறது.

குறை என்றால் என்ன?
முதலில் தவறுக்கும்,
குறைக்கும் உள்ள வேறுப்பாட்டை
விளங்கி கொள்ளுங்கள்.

ஒருவனின் குறையை மறைத்தால்
மறுமையில் இறைவன் உங்கள்
குறையை மறைப்பான். நன்றாக
கவணியுங்கள் இறைவன் குறையை
தான் மறைக்க சொல்கிறான்
தவறை அல்ல.

பிறருக்கு எந்த வகையிலும்
பாதிக்காத ஒருவனின் குறையை தான்
மறைக்க வேண்டும் தவிர சமூகத்திற்க்கு
அல்லது தன்னை சார்ந்தவர்களுக்கு
பாதிக்கும் வகையில் தவறுகள்
செய்பவனாக இருந்தால் அது
பகிரங்கப்படுத்த வேண்டும்.

திருடுபவனை, ஏமாற்று பவனை,
கொலைகாரனை, அடாவடி செய்பவனை,
அநியாயகாரனை, பணத்தாசை
பிடித்தவனை, வட்டி, வரதட்சனை
வாங்குபவனை, ஆட்சிக்கு, அதிகாரத்திற்கு
அலைபவனை, பற்றி பேசினால்
அவன் முஸ்லிமாக இருந்து விட்டால்
உடனே இயக்க வெறி என சாடுகிறார்கள்.

புறம் பேசுவதும் குறை கூறுவதும்
ஒருவரின் தனிப்பட்ட விஷயத்தை
விமர்சிப்பது தான் அதனால் யாருக்கும்
பாதிப்பு இல்லை எனில் அதை பேச
கூடாது தான் இது தான் மார்க்கத்தின் நிலை.

ஆனால் சும்மா எதுக்கு எடுத்தாலும்
குறை கூறி புறம் பேசி திறியாதீர்கள்
என தங்கள் தவறுகளை நியாயப்படுத்தவும்
மூடி மறைக்கவும் ஹதீஸை வளைக்கிறார்கள்.

ஒருவரின் குறையை துருவி துருவி
ஆராயாதீர்கள் என இறைவன்
சொல்கிறான். அதற்காக நம்ம
சகோதரிகளை விசாரிக்காமல்
யாருக்காவது கட்டி கொடுப்போமா என்ன?

எதை எப்படி விளங்க வேண்டுமோ
அப்படி விளங்குவது தான் சரியானது
ஆகும் தவிர மூடி மறைக்கவோ
தவறை நியாயப்படுத்தவோ அல்ல.

வளைந்து கொடுக்காமல் நிமிர்ந்தே
நில்லுங்கள், மதத்துகாரான்,
இணத்துக்காரன்னு பார்க்க
தேவையில்லை,

நியாயமா? அநியாம?
அதை மட்டும் பாருங்கள்.

-Fahad Ahmed PM

No comments:

Post a Comment