Saturday, April 1, 2017

எல்லா எளவுகளையும் பாலன்ஸ் பண்ணிதான் தீர்ப்பு எழுதப்படணும்.

சல்மானுக்குத் தண்டனை கொடுக்கணும்;
அடுத்த நொடி, ஜாமீன்ல விடணும்.
.
ஒரு தீர்ப்புல ஜெம்மாவுக்குத் தண்டனை கொடுக்கணும்;
அடுத்தத் தீர்ப்புல விடுதலை செய்யணும்.
.
சட்டம் ஒழுங்குகளைக் கணக்கில எடுக்கணும்;
அடுத்து யார் ஆட்சிக்கு வந்துடக் கூடாதுன்னு அதையும் கணக்கில எடுக்கணும்.
.
எந்த ஜாதியைச் சேர்ந்தவனுக்கு, எந்த மதத்தைச் சேர்ந்தவனுக்குத்
தண்டனை கொடுக்கலாம் கொடுக்கக்கூடாதுங்குகிறதையும் கணக்கில எடுத்துக்கணும்.
.
ஒருத்தனோட சொத்துக்கு, மூணு பேர் உரிமை கொண்டாடுனா
மூணு பேருக்கும் நேர்மையாப் பிரிச்சிக் கொடுத்துடணும்.
.
தடை கேட்டு எவனும் நீதிமன்றத்துக்குப் போக வாய்ப்பளிக்காதபடி,
தூக்குத் தண்டனையை இரகசியமா நிறைவேத்த ஏற்பாடு பண்ணனும்.
.
எல்லா எளவுகளையும் பாலன்ஸ் பண்ணிதான் தீர்ப்பு எழுதப்படணும்.
சும்மா வாய் புளிச்சுதோ மாங்காய் புளிச்சுதோன்னு பேசக் கூடாது.
-
Yoosuf Kulachal

No comments:

Post a Comment