Saturday, April 15, 2017

எது தமிழ்ப் புத்தாண்டு? ஓர் உண்மை விளக்கம்.

Manjai vasanthan
Via Facebook
2017-04-15

எது தமிழ்ப் புத்தாண்டு? ஓர் உண்மை விளக்கம்.
===========================================
ஒரு நாள் என்பது என்ன?
சூரியன் தோன்றி மீண்டும் சூரியன் தோன்றுவதற்கு ஆகும் காலம்.

ஒருமாதம் என்பது என்ன?
ஒரு முழு நிலவுத் தோன்றி மீண்டும் ஒரு முழு நிலவு தோன்ற ஆகும் காலம்.

அதேபோல் ஆண்டு என்பது என்ன?
சூரியன் தென் கோடியில் தோன்றி மீண்டும் தென் கோடியில் தோன்றும் வரையிலான காலம் ஓராண்டு.

அதாவது, சூரியன் தை மாதத் தொடக்கத்தில் வடக்கு நோக்கி நகரத் தொடங்கும். சித்திரையில் தலைஉச்சியில் இருக்கும். பின் ஆடியில் வடகோடியில் இருந்து தென்கோடி நோக்கும் பின் மார்கழி இறுதியில் தென்கோடிக்கு வந்து மீண்டும் வடக்கு நோக்கி நகரும்.

இவ்வாறு சூரியன் வடக்கு நோக்கி நகரத் தொடங்கியதிலிருந்து மீண்டும் வடக்கு நோக்கி நகரத் தொடங்கும் வரையிலான கால அளவு ஓர் ஆண்டு.

சூரியன் நகர்வதில்லை என்பது அறிவியல் உண்மை. ஆனால் நம் பார்வைக்கு நகர்வதாகத் தெரிவதை வைத்து அவ்வாறு ஆண்டு கணித்தனர்.
தை முதல் நாள் அன்றுதான் சூரியன் வடதிசை நோக்கி (உத்ராயணம் நோக்கி) நகரத் தொடங்கும். எனவே தை முதல் நாள் ஆண்டின் தொடக்க நாளாகக் கொண்-டாடப்பட்டது.

சித்திரையில் சூரியன் தலை உச்சியில் இருக்கும். ஒரு கோடியிலிருந்துதான் கணக்குத் தொடங்குவார்களே தவிர, தலை உச்சியிலிருந்து கணக்குத் தொடங்க மாட்டார்கள். எனவே, சித்திரையில் ஆண்டுத் தொடக்கம் என்பது தப்பு.
எனவே, தை மாதம் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் என்பதே சரி.

மேலும், ஆரியர்கள் நுழைத்த 60 ஆண்டுகள் ஒன்றுகூட தமிழ் இல்லை. தமிழ் ஆண்டு பெயர் தமிழில் இல்லாமல் சமஸ்கிருதத்தில் எப்படியிருக்க முடியும்? சிந்திக்க வேண்டாமா?
அதைவிட வெட்கக்கேடு பிரபவ முதல் தொடங்கும் அறுபது ஆண்டுகளும் கிருஷ்ணனும் நாரதனும் சேர்ந்து பெற்றது என்கிறார்கள்.
ஆணும் ஆணும் சேர்ந்து, 60 ஆண்டுகள் பெற்றார்கள் என்பதைவிட கேவலம் வேறு உண்டா? இந்தக் கேவலத்தைத் தமிழர்கள் கொண்டாடலாமா?
தை முதல் நாளே தமிழன் புத்தாண்டு என்பது ஆய்வுகளின்படியும், தமிழர், அறிஞர்கள் முடிவுகளின்படியும் சரியானது.

எனவே, தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுவோம். அதுவே தமிழர்க்கும், அவரது மரபுக்கும் சரியாது.

No comments:

Post a Comment