Saturday, April 1, 2017

மாசேதுங்கும் அவரது இரண்டு குழந்தைகளை விவசாயி ஒருவரிடம் ஒப்படைத்தார். அவர்களைப் பிறகு கண்டுபிடிக்கவே முடியவில்லை

சீனாவின் கோமிங்டாங் அரசை எதி்ர்த்து
மாசேதுங் தலைமையில் 1934-இல் ஒரு
மிகப்பெரிய நெடும்பயணம் மேற்கொள்ளப்பட்டது.

வரலாற்றில் இருபது கோடி மக்களைச் சந்தித்த
மிக நீண்ட நெடும்பயணமாக அதுதான் இருந்து
வருகிறது. இந்தப் பின்புலத்தில் விஷயம் ஒன்று
தட்டுப்பட்டது. பயணம் செய்த முதல்
மாதத்திலேயே பனிக்கும் குளிருக்கும் மழைக்கும்
தாங்காமல் 25 ஆயிரம் பேர் மரணமடைந்தனர். க

ுழந்தைகள் செத்துவிடக்கூடாது என்பதற்காக
வழியிலிருந்து விவசாயிகளிடம் பலர் குழந்தைகளை
ஒப்படைத்தனர். அப்படி மாசேதுங்கும் அவரது
இரண்டு குழந்தைகளை விவசாயி ஒருவரிடம்
ஒப்படைத்தார். அவர்களைப் பிறகு கண்டுபிடிக்கவே
முடியவில்லை. (ஆதாரம்: சீனா வல்லரசு ஆனது எப்படி?
கிழக்குப் பதிப்பகம். ஆசிரியர்- ரமணன்)

அதற்கடுத்து மாவோ மிகச் சக்திவாய்ந்த
தலைவராக சீனாவில் இருந்த காலகட்டத்தில்கூட
அவரது குழந்தைகளை அவரால் கண்டுபிடிக்க
முடியவில்லை. சக்திவாய்ந்த அந்தத்
தலைவரிடம் ஏன் அந்த விவசாயி
குழந்தைகளைத் திருப்பி ஒப்படைக்கவில்லை?
ஒப்படைக்க முயன்றாரா? மாவோ
நினைத்திருந்தால், சல்லடை போட்டுத்
தேடியிருக்க முடிந்திருக்குமே? அதை
அவர் செய்தாரா? செய்யவில்லையா?
தகப்பனின் மனநிலையை அவர்
எப்படிக் கடந்தார்? என கேள்விகள்
சுழன்றடிக்கின்றன.

ஒரு வரலாறு இது போல் ஏராளமான
விடை தெரியாத கேள்விகளை தின்று
செரித்து கொழுத்த பன்றி போல் தூங்கி
எழுந்து மறுபடியும் தின்று கொழுத்து
திரும்பிப் படுக்கிறது.

No comments:

Post a Comment