Saturday, April 1, 2017

தன் புருஷனை இழந்த வருத்தம் கொஞ்சம் கூட இல்லாமல் சமூகத்தை விட்டு விதவையாக ஒதுங்கியிருக்காமல் ஊரூரா அலைகிறார் என சோனியா மீதும்,

தன் புருஷனை இழந்த வருத்தம்
கொஞ்சம் கூட இல்லாமல்
சமூகத்தை விட்டு விதவையாக
ஒதுங்கியிருக்காமல் ஊரூரா
அலைகிறார் என
சோனியா மீதும்,

நான் கவர்னர் மாளிகைக்குள்
சென்றபோது அவர் என்னிடம்
தவறாக நடக்க முற்பட்டார்
என சென்னா ரெட்டி மீதும்,

சட்டமன்றத்தில் வந்தமரும்
நேரம் அவர் போதையில்
தள்ளாட்டத்தில் தான்
அமர்ந்திருக்கிறார் என
விஜயகாந்த் மீதும்

உச்சகட்டத் திமிருடன்

தள்ளாத தனது வயது மூப்பில்
சக்கர நாற்காலியில் பயணிக்கும்
கருணாநிதி அவர்களை தள்ளுவண்டி
ஐஸ்வண்டி என அவரும் அவரது
கட்சி அமைச்சுகளும்
சட்டமன்றத்திலேயே பேசியதும்
கட்டப்பட்ட பொட்டலமாக அவரை
அப்பல்லோ மருத்துவனைக்கு
கொண்டு செல்கின்றனர் என்று
சிரித்துக்கொண்டே தொலைக்காட்சிக்கு
பேட்டி கொடுத்தும் மகிழ்ந்ததும்
இந்தப் பெண் தானே ...

முதல்வர் என்பாதாலோ ஆதிக்க
சமூகத்தின் ஆண்டைப் பண்புடன்
அதிகார வர்க்கமொன்றில் தன்னை
புகுத்தி வைத்துக் கொண்டு ஆண்டான்
அடிமை மனப்பாங்கில் அவரது
கொத்தடிமைகளைக் கொண்டு
அனைவரையும் பயங்காட்டும்
போக்கில் நடந்துகொண்டாலோ
அதற்கு அவங்க காலை நக்கும்
கட்சிக்கார அடிமைகளை மாதிரி
அகில இந்திய காங்கிரசு தலைவரும்
அடங்கிப் போகனுமா என்ன?.

உங்களின் அரசியல் நாகரிகம்
கடந்தகாலத்தில் இன்பசாகரன்,
மணிசங்கர ஐயர், சேஷன், சூனா சாமி
இப்படின்னு நிறைய பேருக்கு
நீங்க கொடுத்த அட்டாக் மூலம்
சந்தி சிரிச்சி சாக்கடையானது
எல்லோருக்கும் தெரியும்.

பிறப்பால் ஒடுக்கப்பட்ட இனத்தவர்
என்பதால் மத்திய அமைச்சர்
அருணாசலம் விமானத்தில்
இருக்கும் வரைக்கும் நான்
அந்த விமானத்தில்ஏறி அமர
மாட்டேன் ன்னு சொல்லி அவரை
விமானத்தை விட்டு இறக்கிப்பின்
பயணம் செய்த காட்டு மிராண்டித்
தனத்தை விடவா பெரிய கேடு
தமழ் நாட்டு அரசியலில் நிகழ்ந்து விட்டது.

அவர் சிங்கம் மாதிரி நான் சொன்னேன்
அப்படித்தான் சொல்வேன் என்கிறார்.
அவர் சொன்னதில் தப்பே இல்லை...

அண்ணா திமுக காரன் கையில்
செருப்பையும் வெளக்குமாத்தையும்
வச்சு அடிக்கிறதுக்கு இளங்கோவன்
படத்தை வச்சிக்கிட்டதுக்குப் பதிலா
சசிகலா க்கு பூ கொடுக்கும்
ஜெயா படம் வச்சிருந்தா பொருத்தமா
இருக்கும்...

---கலு. அப்துல்லாஹ் ரஹ்மத்துல்லாஹ்---

No comments:

Post a Comment